No menu items!

கீர்த்தி சுரேஷூக்கு வந்த சோதனை

கீர்த்தி சுரேஷூக்கு வந்த சோதனை

சிலருக்கு எது ப்ளஸ் ஆக இருக்கிறதோ அதுவே மைனஸ் ஆகவும் இருக்கும். எது பாஸிட்டிவாக இருக்குமோ அத சமாச்சாரம் அவர்களுக்கு நெகட்டிவாகவும் மாறிவிடும்.

இப்படியொரு சோதனையில் மாட்டிக்கொண்டு முழித்தவர்தான் கீர்த்தி சுரேஷ்.

குஷ்பூ இட்லியை குறுக்குவாக்கில் இரண்டு ஸ்லைஸ் ஆக வெட்டி கன்னத்தில் ஒட்டிவைத்தால் எப்படியிருக்குமோ, அப்படியொரு கொழு கொழுக் கன்னங்களோடு, அழகாய் உருட்டு பேசும் கண்களோடு நடித்து அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இவரது குடும்ப பாங்கான தோற்றம், மாடர்ன் உடைகளுக்கும் பொருத்தமான உடல்வாகு இரண்டுமே இவரை ரசிகர்களிடையே எளிதில் கொண்டு சேர்த்தது.

இங்கே சிவகார்த்திகேயன், அடுத்து தனுஷ், விஜய் என படபடவென வளர்ச்சி கண்டுவந்தவருக்கு, பாலிவுட்டில் ஸ்ரீதேவியைப் போல பெயரெடுக்கவேண்டுமென ஆசை வந்தது.

பாலிவுட்டுக்குப் போகவேண்டுமென்றால், மெல்லிசான உடல்வாகு வேண்டும். இல்லையென்றால் ’சைஸ் ஸீரோ’ என எலும்பும் தோலுமாய் இருக்கும் மாடலிங் பெண்களைப் போல் இருக்கவேண்டும் என்று ஒரு மாயை இருக்கிறது. இதனால் தனது உடல் எடையைக் குறைக்கும் வேலைகளில் இறங்கினார் கீர்த்தி சுரேஷ்.

கோடையில் வறண்டுப் போன கோதாவரியை போல் மாறியிருந்தார் கீர்த்தி சுரேஷ். பாலிவுட்டில் அவர் எதிர்பார்த்தமாதிரி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதேநேரம் இங்கே அவருக்கு என்று இருந்த மார்க்கெட்டின் வெயிட்டும் குறைந்து போனது.

அப்படி இழந்த வாய்ப்பை பற்றி இப்போது வெளிப்படையாகவே பேசியிருக்கிறார் அவரை நடிக்க வைக்கவேண்டுமென விரும்பிய பாலிவுட் இயக்குநர். அஜய்தேவ்கன் நடிப்பில் உருவான படம் ‘மைதான்’. இந்தப்படம் கால்பந்து கோச் சையத் அப்துல் ரஹிம் அவர்களின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்திருக்கும் பயோபிக். ‘பதாய் ஹோ’ படத்தை இயக்கிய அமித் ஷர்மாதான் ‘மைதான்’ படத்தையும் இயக்கி இருக்கிறார்.

இதில்தான் அஜய்தேவ்கனின் மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் அமித் ஷர்மா நினைத்தது கீர்த்தி சுரேஷைதான். ஆனால் கீர்த்தி சுரேஷூக்குப் பதிலாக அந்த கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பவர் ப்ரியா மணி.

கீர்த்தி சுரேஷூக்குப் பதிலாக ப்ரியா மணி நடிக்க காரணம், ‘சையத் அப்துல் ரஹிம் அவர்களின் மனைவி இப்படிதான் இருக்கவேண்டுமென என் மனதிற்குள் இருந்தது. அதற்கு கீர்த்தி சுரேஷ் பொருத்தமாக இருப்பார் என எனக்கு தோன்றியது. அதனால் கீர்த்தி சுரேஷை பார்த்தோம். ஆனால் அந்நேரம் பார்த்து அவர் உடல் எடையைக் குறைத்திருந்தார். இதனால் வேறு வழியில்லாமல் கீர்த்தி சுரேஷூக்கு பதிலாக வேறொரு நடிகையை நடிக்க வைக்கலாம் என முடிவெடுத்தோம்’ என்று உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார்.


கொழுக்கும் பாலிவுட் ஃபிட்னெஸ் கோச்கள்

பாலிவுட்டில் படம் இல்லாமல் இருந்தாலும், ரீல்ஸ்சை போட்டபடி பரபரப்பாக இருக்கவேண்டும். அடுத்தவர்கள் பொறாமைப் படுமளவிற்கு உடலை பராமரிக்க வேண்டும். இல்லையென்றான்றால் உங்களுக்கு எக்ஸ் நடிகை என்று முத்திரை குத்தி விடுவார்கள்.

அடுத்து நீங்கள் ஏர் போர்ட்டுக்கு சென்றாலும் சரி, ரெஸ்டாரண்ட்டுகளுக்கு போனாலும் சரி, உங்களைப் பார்த்ததும் ஒட்டுமொத்த ஊடகங்களும் உங்களை துரத்துவது போல் பாப்பராசிகளை துரத்த செட்டப் செய்யவேண்டும். பாப்பராசிகளை வரவழைத்து பில்டப் கொடுக்க இப்போது பாலிவுட்டில் பல ஏஜென்சிகள் இருக்கின்றன.

இந்த இரண்டு சமாச்சாரங்களுக்கும் அதிக லைக்குகள் கிடைக்க நீங்க அழகாக இருக்கவேண்டும். உடலழகு கச்சிதமாக இருக்கவேண்டும். இதனால்தான் இப்போது பாலிவுட்டில் ஃபிட்னெஸ் கோச்களுக்கு ஏக வரவேற்பு.

இன்றைக்கு நடித்து கொண்டிருக்கும் பாலிவுட் நடிகைகள் எல்லோரும் தங்களுக்கென ஒரு தனி கோச்சை வைத்து கொண்டிருக்கிறார்கள். தினமும் இவர்களோடு இரண்டு மணி நேரமாவது நடிகைகள் நேரத்தை செலவிடுகிறார்கள். உடலை கவர்ச்சியாக வைத்து கொள்ள, இந்த கோச்கள் கொடுக்கும் உடற்பயிற்சி வியர்க்க விறுவிறுக்க செய்கிறார்கள். அதை வீடியோவாக எடுத்து ரீல்ஸ்களில் போட்டும் விடுகிறார்கள்.

இப்படி ஃபிட்னெஸையும் சமூக ஊடகங்களில் காசாக்கும் நடிகைகளில் மலைகா அரோராவுக்கு முதல் இடம் என்கிறார்கள். ஐம்பது வயதைத் தாண்டியிருக்கும் மலைகா அரோராவின் கவர்ச்சியைப் பார்த்து இளவட்ட நடிகைகளே பொறாமைப்படுகிறார்கள். இதற்காக அவர் உடற்பயிற்சியை கடுமையாக மேற்கொள்கிறாராம்.

இவர் தன்னுடைய ஃபிட்னெஸ் கோச்சிற்கு மட்டும் மாதம் 80,000 ரூபாய் கொடுக்கிறாராம். இவரைப் போலவே நாற்பதுக்கு அப்புறம் சீனியர் அழகியாக வலம் வரும் கரீனா கபூர் தன்னுடைய கோச்சிற்கு 70,000 ரூபாய் கொடுக்கிறாராம்.

இந்த இரண்டு சீனியர்கள் ஒரு பக்கம், மற்றொரு நடிகையான திபீகா படுகோன் இன்றைக்கு பாலிவுட்டில் உச்சத்தில் இருக்கிறார். இவர் தன்னுடைய கவர்ச்சியான உடல் அழகை தக்கவைக்க தனது கோச்சிற்கு மாதம் 60,000 ரூபாய் கொடுக்கிறாராம்.

இப்படி எல்லா நடிகைகளும் கோச்களுக்கு அள்ளிக்கொடுக்க தயங்குவது இல்லை என்கிறார்கள். இதனால் ஃபிட்னெஸ் கோச் வேலைகளுக்கு இனி மவுசு அதிகமானாலும் ஆச்சர்யமில்லை.


தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து!

2004-ல் நடைபெற்ற தங்களது திருமணத்தை செல்லாது என்று கூறி விவாகரத்து கேட்டு தனுஷ் – ஐஸ்வர்யா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் இருவருடைய குடும்பத்தின் சம்மதமுடன் கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஜோடிக்கு லிங்கா, யாத்ரா என இரு மகன்கள் உள்ளன.

இவர்கள் இருவரும் தங்களது வாழ்க்கைப் பயணத்தை தங்களது வழியில் தனித்தனியே தொடர்வதாக ஏறக்குறைய ஓராண்டுக்கு முன்னர் அறிவித்தனர். தனுஷ் தரப்பிலும், ஐஸ்வர்யா தரப்பிலும் இவர்களை இணைத்து வைக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கவில்லை. இந்நிலையில் இப்போது விவாகரத்து கேட்டு விண்ணபித்துள்ளனர்.

தனுஷ் தனது மகன்களுடன் அவ்வப்போது நேரம் செலவிட்டு வருகிறார். ஐஸ்வர்யாவும் மகன்களுடன் தனது பெற்றோருடன் இருந்து வந்தார். இவர்கள் இருவரும் விவாகரத்துதான் தீர்வு என்று முடிவு செய்துவிட்டதால் அடுத்து என்ன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ஐஸ்வர்யா தன்னுடைய படங்களில் பணியாற்றிய உதவி இயக்குநருடன் நட்பு ரீதியாக பழகி வருகிறார் என்றும் அவர்களுக்கு இடையே நல்ல புரிதல் இருப்பதாகவும் கூறுகிறார்கள். இந்த உதவி இயக்குநரையே மறுமணம் செய்ய விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனுஷைப் பொறுத்தவரையில் மறுமணம் செய்யும் எண்ணமில்லை என்றும் அவர் தனது மகன்களுடன் தனியாகவே இருக்க விரும்புகிறார் என்றும் கூறுகிறார்கள். ஆனால் இனி காலம் என்ன மாற்றங்களைக் கொண்டுவரும் என தெரியவில்லை என்றும் தனுஷூக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.

இந்த மறுமணத்தை ரஜினி பெரிதாக ரசிக்கவில்லை என்றாலும், ஐஸ்வர்யா கொஞ்சம் பிடிவாதமாக இருக்கிறார் என்றும் கிசுகிசுக்கிறார்கள். விவாகரத்து கிடைத்த பின்பு, ஐஸ்வர்யா மறுமணம் குறித்து பேசுவார் என்றும் முணுமுணுக்கிறார்கள்.

இந்த விவாகரத்தில் ரஜினி ரொம்பவே மன வருத்தத்தில் இருப்பதாகவும், ஆனால் நிலைமை கைமீறி போயிருப்பதால் ஒன்றும் செய்ய முடியாமல் தவிப்பதாகவும் கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...