No menu items!

விடாமுயற்சி கதை இதுதானா?

விடாமுயற்சி கதை இதுதானா?

அஜித், மகிழ்திருமேனி இணைந்திருக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் ஷெட்ட்யூல் ஷூட்டிங் முடிந்து இரண்டாவது ஷெட்யூல் ஷூட் ஆரம்பித்து விட்டது.

இந்த முறை அஜித்துடன் த்ரிஷா, ரெஜினா என இரு நடிகைகள் இணைந்து நடிக்கும் காட்சிகள் எடுக்கப்பட இருக்கிறதாம். இதற்காக அஜித், த்ரிஷா இருவரும் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார்கள். இன்னும் சில நாட்களில் ரெஜினாவும் இவர்களோடு இணையவிருக்கிறாராம்.

பொதுவாகவே மகிழ்திருமேனி படங்கள் என்றால் அதில் டீடெய்ல் அதிகமிருக்கும். ஒரு பிரச்சினை குறித்த விசாரணை, ஆக்‌ஷன், அதிரடி திருப்பங்கள் இருக்கும் வகையில்தான் அவர் இதுவரை படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் ‘விடாமுயற்சி’யின் கதை இதுதான் என்று ஒரு கதை உலாவர ஆரம்பித்திருக்கிறது.

அதாவது அஜித்தும், த்ரிஷாவும் கணவன் மனைவி. இவர்கள் இருவரும் வெளிநாட்டிற்குச் செல்கிறார்கள். அங்கு சென்றதும் எதிர்பாராத வகையில் ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. இதில் த்ரிஷா சிக்கிக்கொள்கிறார். இவரால் பிரச்சினை பெரிதாகுமோ என்று நினைத்து அவரை வில்லன் குழு கடத்திக் கொண்டுப்போகிறது.

மனைவியைக் காணாமல் டென்ஷனாகும் அஜித், பிறகு மனைவியைத் தேடி அந்த நாட்டில் பல இடங்களுக்குப் பயணிக்கிறார். வில்லன் கூட்டம் பற்றிய தகவல் கிடைக்க, அவர்களோடு மோதுகிறார்.
இறுதியில் அவர் தனது மனைவியை உயிரோடு மீட்கிறாரா இல்லையா என்பதுதான் கதை என்று கிசுகிசு கிளம்பியிருக்கிறது.

கதை

இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் கதை குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், படத்தில் அஜித்தும் திரிஷாவும் கணவன் மனைவியாக வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்கிறார்.

அப்போது திரிஷா காணாமல் போகிறார். வில்லன் குரூப்பில் மாட்டிக்கொள்கிறார். கடைசியில் திரிஷாவை அஜித் முயற்சி செய்து கண்டுபிடித்தாரா? என்பதை விடாமுயற்சி படத்தின் கதை என்று பிரபல சினிமா பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...