No menu items!

ஹைதராபாத்தில் வளரும் ‘வேட்டையன்’

ஹைதராபாத்தில் வளரும் ‘வேட்டையன்’

தமிழக வெற்றி கழகம் தொடங்கிய விஜய்க்கு வாழ்த்துகள் சொன்ன வேகத்தில் ஃப்ளைட்டில் ஏறிய ரஜினி இப்போது ஹைதராபாத்தில் இருக்கிறார். காரணம் வேட்டையன் ஷூட்டிங்.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இதுவரை நடந்த ஷூட்டிங்கில், பஹத் ஃபாசில் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துமுடித்துவிட்டார்கள். இவை படத்தின் முக்கியமான காட்சிகள் என்கிறார்கள்.

இப்போது ஹைதராபாத்தில் நடக்கும் ஷூட்டிங், குறைந்தப்பட்சம் இரண்டு வாரம் வரை நீடிக்கும் என தெரிகிறது. இங்கு சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட இருக்கிறதாம். .இவை தவிர ரஜினியின் காட்சிகள் அதாவது அவரது காவல்துறை பணி சம்பந்தமான காட்சிகள் இங்கு எடுக்கப்பட இருக்கிறதாம்.

இந்த ஷெட்யூல் முடிந்துவிட்டால், மார்ச் மாத இறுதியில் ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் முடித்துவிட திட்டமிட்டு இருக்கிறார்கள். காரணம் ஏப்ரல் மாதம் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்டையனில் துஷாரா, ரித்திகா சிங் இருந்தாலும் இவர்கள் யாரும் ரஜினிக்கு ஜோடி இல்லை.

என்கவுண்டரை பற்றிய ஒரு விரிவான தகவல்களுடன் இப்படம் இருக்கும் என கூறப்படுகிறது. என்கவுண்டரை பற்றிய சர்ச்சை இந்தப்படம் மூலம் கிளம்ப வாய்ப்பு இருப்பதாகவும் அப்படத்தில் வேலைப் பார்ப்பவர்கள் கூறுகிறார்கள்.


பான் – இந்தியா இயக்குநராகும் அட்லீ

தமிழ் சினிமாவில் விஜயை வைத்து அடுத்தடுத்து இரு படங்களை இயக்கியதால், இங்குள்ள இளம் இயக்குநர்களிடையே முக்கியத்துவம் பெற்றவர் அட்லீ.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கினார். இந்திய சினிமாவில் பல சாதனைகளை இப்படம் உருவாக்கியது.

பாலிவுட்டில் பல ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு தமிழ் இயக்குநர் ஒருவருக்கு இப்படியொரு ஹிட் மற்றும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதை தொடர்ந்து தக்க வைக்கும் முயற்சியில் அட்லீ மும்முரம் காட்டுகிறார் என்கிறது அவருடைய நண்பர்கள் வட்டாரம்.

இனி பான் – இந்தியா படங்களை இயக்குவது, அவ்வபோது தமிழ்ப்படங்களையும் இயக்குவது என்பதுதான் அட்லீயின் திட்டமாம். ஜவானுக்குப் பிறகு அப்படியொரு வாய்ப்பு இல்லையே என்று நினைத்த போதுதான், அட்லீயை அணுகியிருக்கிறார் புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜூன்.

காரணம், பான் – இந்தியா இயக்குநராக வேண்டுமென அட்லீ ஆசைப்படுவதைப் போலவே பான் – இந்தியா நடிகராகவேண்டும் என்ற ஆசை அல்லு அர்ஜூனுக்கு இருக்கிறதாம்.

இதனால் வருகிற ஆகஸ்ட்டில் புஷ்பா இரண்டாம் பாகம் வெளிவந்ததுமே ஒரு பான் – இந்தியா படத்தில் நடிக்க வேண்டுமென திட்டமிட்டு இருக்கிறார் அல்லு அர்ஜூன். முதலில் அனிமல் பட த்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்காவைதான் மனதில் வைத்திருந்தாராம். ஆனால் அவர் இன்னும் இரண்டு படங்களை இயக்கியப்பிறகே அல்லு அர்ஜூனுடன் இணைந்து படம் பண்ண முடியுமென கூறியிருக்கிறார்.

இதனால்தான் அல்லு இப்போது அட்லீயை துரத்துகிறாராம். செப்டெம்பர் அல்லது அக்டோபரில் ஷூட்டிங்கை வைத்து கொள்ளலாம். இப்போதே கதையில் உட்காருங்கள் என்று அட்லீயிடம் அல்லு தரப்பில் இருந்து கூறப்பட்டிருக்கிறது.

அநேகமாக அட்லீ – அல்லு கூட்டணி சீக்கிரமே இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...