No menu items!

அறுபதிலும் ஆசை வரும். ஆஷிஷ் வித்யார்த்தியின் 2-வது திருமணம்.

அறுபதிலும் ஆசை வரும். ஆஷிஷ் வித்யார்த்தியின் 2-வது திருமணம்.

தமிழில் விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும், அப்பாவாகவும் நடித்தவர் ஆஷிஷ் வித்யார்த்தி.

தமிழ் சினிமாவில் இப்போது அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. இதனால் இவரை இங்குள்ள ரசிகர்கள் ஏறக்குறைய மறந்துவிட்டார்கள்.

அதற்காக சும்மா விட்டுவிட முடியுமா என்று நினைத்தாரே என்னவோ ஆஷிஷ் வித்யார்த்தி இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இப்போது அவருக்கு வயது 60.

ஆஷிஷ் வித்யார்த்தி தனது அறுபதாம் வயதில் கரம் பிடித்திருக்கும் ரூபாலி பரூவாவுக்கு 50 வயது. இவர் ஃபேஷன் துறையில் வளர்ந்து வரும் தொழிலதிபர். அஸ்ஸாமில் இருக்கும் குவாஹாத்தியைச் சேர்ந்தவர். இவருக்கு கொல்கத்தாவில் ஒரு ஃபேஷன் ஸ்டோர் இருக்கிறது. இங்கு கைத்தறியில் நெய்த ஆடைகளை NAMEG. என்ற ப்ராண்டின் மூலம் விற்பனை செய்து வருகிறார்.

இவர்களது திருமணம் கேரளம் மற்றும் அஸ்ஸாம் பாரம்பரிய திருமண முறைகளை கலந்து நடந்திருக்கிறது. கேரளாவின் முண்டு கட்டிக்கொண்டு ஆஷிஷ் வித்யார்த்தியும், ரூபாலி பரூவா அஸ்ஸாமின் மேகலா சந்தோர் பாரம்பரிய உடையிலும் புன்னகைத்தபடியே மாலைகளை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். கொல்கத்தா க்ளப்பில் தங்களது திருமணத்தை முறைப்படி பதிவு செய்திருக்கிறார்கள்.

இதனால் இப்போது ஆஷிஷ் வித்யார்த்தியின் இந்த திருமண புகைப்படம் வைரலாகி வருகிறது. கில்லி’ படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்தாரே அவர்தானே என்று ஆஷிஷ் வித்யார்த்தியைப் பற்றி இப்போது பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

’இந்த வயதில் ரூபாலியை திருமணம் செய்திருப்பது ஒரு அற்புதமான உணர்வைக் கொடுத்திருக்கிறது. காலையில் எளிமையான முறையில் கல்யாணம். மாலையில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஒரு சந்திப்பு என திருமண நாள் எங்கள் இருவருக்கும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. நாங்கள் சில மாதங்களுக்கு முன்பு சந்தித்தோம். அடுத்து திருமணம்தான் என்று தோன்றியது. அதனால் திருமணம் செய்து கொண்டோம்’ என்கிறார் இந்த புது மாப்பிள்ளை.

ஆஷிஷ் வித்யார்த்திக்கும், ரூபாலி பரூவாவுக்கு இடையே எப்படி காதல் மலர்ந்தது?

ஆஷிஷ் வித்யார்த்தி,ரூபாலி பரூவா,ரஜோஷி பரூவா, சகுந்தா பரூவா,

ரூபாலி கொல்கத்தாவில் வசித்து வருகிறார். ஆஷிஷ் வித்யார்த்தி சமீபகாலமாக தனது பயணங்களை எல்லாம் ஒரு விலாக் ஆக எடுத்து வருகிறார். இதனால் அடிக்கடி கொல்கத்தா பக்கம் போன ஆஷிஷ் வித்யார்த்தி ரூபாலியிடம் மனதைப் பறிக்கொடுத்துவிட்டார்.

ஆஷிஷ் வித்யார்த்தியும், ரூபாலி பரூவாவும் திருமண கொண்டாட்டத்தில் இருக்க, முதல் மனைவி ரஜோஷி பரூவா ‘நன்றாக புரிந்து கொண்ட ஒருவர் உங்களை கேள்வி கேட்க தூண்டமாட்டார். அவர்களுக்கு நீங்கள் யாரென்பதை பொறுத்தது. உங்களை காயப்படுத்துகிற எதையும் அவர்கள் செய்யப் போவது இல்லை. மறந்துவிடாதீர்கள்’ என்று சமூக ஊடகத்தில் கமெண்ட் அடித்துவிட்டு தனது வேலையைப் பார்க்க போய்விட்டார்.

ஆஷிஷ் வித்யார்த்தியின் முதல் மனைவி ரஜோஷி பரூவாவும் ஒரு நடிகைதான். இவர் பிரபல நடிகை சகுந்தா பரூவாவின் மகள். ஆஷிஷ் வித்யார்த்திக்கும், ரஜோஷிக்கும் திருமணமாகி 23 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். அவர் பெயர் அர்த் வித்யார்த்தி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...