No menu items!

ஏகே-யின் ஆன்மிகப் பயணம்

ஏகே-யின் ஆன்மிகப் பயணம்

ஏகே எனும் அஜித்குமார் ஆன்மிகம் மீது பெரும் மதிப்பு கொண்டிருப்பவர். எல்லாவற்றையும் விட இறை என்பது மாபெரும் சக்தி என்ற நம்பிக்கை உடையவர் ஏகே.

கர்வம், ஆணவம், தான் என்ற அகந்தை ஆகியவை மனிதனிடம் இல்லாத போதுதான் அந்த மாபெரும் சக்தியை உணர முடியும். மனிதத்தை மதிக்கும்போது அதை நெருங்க முடியும் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் சொல்வது வழக்கம்.

இதை நடைமுறை வாழ்க்கையிலும் செயல்படுத்துவார். தன்னிடம் பணிபுரிபவர்களை மரியாதையுடன்தான் நடத்துவார்.  அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சுக துக்க நிகழ்வுகளில் பங்கேற்று அவருக்கு தேவையான உதவிகளை வழங்குவார்.

உச்ச நட்சத்திரம் என்பதால் தன்னுடைய ஒவ்வொரு வார்த்தையும் செயலும் மற்றவர்களால் அதிகம் கவனிக்கப்படும் என்பதால் அதிக கவனத்துடன் செயல்படுகிறார்.

அவரது அமைதிக்கும் இதுவே முக்கிய காரணம். இந்த குணங்கள் அனைத்தும் அவருடைய ஆன்மிக உணர்வின் வெளிப்பாடே.

ஆன்மிக ஆர்வம் அதிகம் இருப்பதால் கோயில்களுக்கு சென்று வழிபட தவறுவதில்லை. தனது புதியப் படங்கள் தொடங்கும் போது கோயில்களுக்கு செல்வார். அதேபோல் தன்னுடைய படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் திருப்பதிக்குச் செல்வது வழக்கம்.

திருப்பதிக்கு பாதயாத்திரையாக நடப்பது ஏகே-வின் மனதிற்கு நெருக்கமான ஒன்று.

தற்போது அவரது புதியப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ள நிலையில் கேரளாவிற்கு ஆன்மிகப் பயணம் சென்றிருக்கிறார். அங்கே பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டிருக்கிறார். பகவதி அம்மனிடம் வழக்கம்போல், தான் நடிக்கும் படம் அனைவருக்கும் பலன் அளிப்பதாக அமையவேண்டுமென வேண்டியதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...