No menu items!

தயாரிப்பாளரின் கண் பார்வையில் ரச்சிதா

தயாரிப்பாளரின் கண் பார்வையில் ரச்சிதா

சின்னத்திரை ரசிகர்களுக்கு நயன்தாராவாக காட்சியளிக்கும் ரச்சிதாவை பிடிக்காதாவர்கள் யாருமில்லை. சரவணன் மீனாட்சி தொடரில் அவரது நடிப்பிற்கு தனியாக ரசிகர்கள் கூட்டம் உருவானது. இந்த தொடரைத் தொடர்ந்து பல தொடர்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது. திரைப்பட நடிகைகளின் டைரியை விட ரச்சிதா டைரி கிட்டத்தட்ட கால்ஷீட்களால் நிரம்பியது. கூடவே திரைப்படங்களில் நடிக்கவும் அழைப்பு வந்தது. இதனால் ரச்சிதா பெரிய திரையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

ஆனாலும் திரைப்படங்கள் இல்லாமலேயே இவரது இன்ஸ்டாகிராம் போட்டோக்களை எடுத்து ரசிகர்கள் பகிர்ந்து வருவது அதிகரித்தது. இதற்கு ஏற்ற மாதிரியாக க்ளாமரான உடைகளில் தனது போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வந்தார். இந்த போட்டொக்களை வைத்து ரசிகர்கள் ரச்சிதாவை ஆராதித்து வந்தனர்.

இன்னொரு பக்கம் ரசிதாவுக்கு தங்கள் படங்களில் நல்ல கதாபாத்திரத்தை கொடுத்து நடிக்க வைக்க இயக்குனர்கள் தயாராக இருந்தனர். ஆனால் பெரிய ஹீரோக்கள் படம் என்றால் மட்டும் ஓகே சொல்லும் மன நிலையில் இருந்தார் ரச்சிதா.

பெங்களூரு பெண்ணான ரச்சிதா பெரும்பாலும் தனது பெற்றோர் வீடு இருக்கும் கூர்க்கிலேயே தங்கியிருந்து நடிக்கும்போது மட்டும் சென்னை வந்தார். சமீபத்தில் ஒரு பெரிய தயாரிப்பாளர் ரச்சிதாவுக்காக ஒரு படத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார். அந்த “பயர் ” படத்தின் அறிவிப்பை ரச்சிதாவின் பிறந்த நாளன்று வெளியிட்டு சென்னையை மேலும் சூடாக்கினார் தயாரிப்பாளர். அந்தளவுக்கு க்ளாமரைக் கொட்டியிருந்தார் ரச்சிதா. படத்தின் வேலைகளில் தீவிரம் காட்டி வரும் தயாரிப்பு தரப்பு விரைவில் குளு குளு இடத்தை நோக்கி ரச்சிதாவை அழைத்துச் செல்ல இருக்கிறது.

கலையுலக வாழ்க்கையில் ஜெயித்த ரக்சிதாவுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் சில சிக்கல்கள் உள்ளன. கணவருடன் அவருக்கு மோதல் இருந்து வருகிறது. தயாரிப்பாளருக்கு படத்தை விரைவாக எடுத்து முடிக்க வேண்டும் என்கி்ற கட்டயம் இருப்பதால் ரச்சிதாவை தனது கண் பார்வையிலேயே வைத்திருக்கிறார். பயர் படத்தின் கதை முடுவதும் நாயகியை சுற்றி வருமாறு அமைக்கப்பட்டிருப்பதால் உடனே சம்மதித்திருக்கிறார் ரச்சிதா.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம்… ரச்சிதாவின் பிறந்த நாளன்று சென்னை முடுக்க ஒட்டப்பட்ட போஸ்டர்களில் க்ளாமர் தூக்கலாக இருக்கும் போட்டோவை போட்டு அவருக்கு வாழ்த்து சொல்லியிருந்ததுதான். அதுவும் பில்லா படத்தில் நயன்தாரா அணிந்து வந்த அதே வெள்ளை உடையில் தொடை வரை சட்டை அணிந்து காட்டிய அந்த போட்டோக்களை சிட்டியை பரபரக்க வைத்து விட்டது. சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகர்கள் சொல்லும் அடைமொழிக்கேற்ப போட்டோவை போட்டு ரச்சிதாவை குளிர வைத்திருந்தார் தயாரிப்பாளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...