No menu items!

கோவாக்சின் தடுப்பூசியும் ஆபத்தா? – அதிர்ச்சி தகவல்

கோவாக்சின் தடுப்பூசியும் ஆபத்தா? – அதிர்ச்சி தகவல்

கொரோனாவுக்காக போடப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசியானது, பக்க விளைவாக இரத்த உறைவு மற்றும் குறைந்த ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கைக்கு வழிவகுக்கும் என்று தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமே தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது கோவாக்சின் தடுப்பூசியாலும் பிரச்சனைகள் ஏற்படுவது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தடுப்பூசியும் மாரடைப்பும்

சீனாவில் கடந்த 2019இல் தொடங்கி உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்று மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் கொரோனா பாதிப்பு மிக மோசமாக இருந்தது. அதில் இருந்து உலகம் மீண்டு வர நான்கு ஆண்டுகள் ஆனது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர கொரோனா தடுப்பூசிகள் முக்கிய காரணமாக இருந்தது. இருப்பினும், கொரோனா தடுப்பூசி சில பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகச் சொல்லப்பட்டது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அன்றே திரைப்பட நடிகர் விவேக் மாரடைப்பால் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோல் கொரோனாவுக்கு பின்னரும் இன்று வரை மாரடைப்பு மரணங்கள் ஒரு தொடர் நிகழ்வாக உள்ளது. குறிப்பாக இளம் வயது மாரடைப்பு மரணங்கள் அதிகரித்துள்ளது. இதற்கு கொரோனா தடுப்பூசிகளும் ஒரு காரணம் என சில மருத்துவர்களே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே,  பிரிட்டனில் ஏப்ரல் 2021 அன்று அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைப் பெற்ற பிறகு, மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி ஜேமி ஸ்காட் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். மேலும், அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசியானது, இறப்புகளையும் கடுமையான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தியதாகக் கூறியும் இங்கிலாந்து நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த  வழக்கில் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் கோவிட்ஷீல்ட் தடுப்பூசி தொடர்பாக அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில், அரிதான நிகழ்வுகளில் கோவிஷீல்டு பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று ஒப்புக்கொண்டுள்ளது.  மேலும், “கோவிஷீல்ட் தடுப்பூசி மிக அரிதான சந்தர்ப்பங்களில், இரத்த உறைவுக்கும் குறைந்த ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கைக்கும் வழிவகுக்கும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை த்ரோம்போசிஸ் வித் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் (TTS) என்றும் அழைக்கப்படுகிறது.

இரத்தம் உறைதல் ஏற்பட்டால், ரத்த ஓட்டமானது பாதிக்கும் சூழல் உருவாகும், பிளேட் செல் குறைந்தால், இரத்த வெளியேற்றத்தின்போது கட்டுப்படுத்தும் தன்மையானது குறையும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தடுப்பூசியை திரும்பப் பெற்ற அஸ்ட்ராசெனகா

கொரோனாவுக்காக போடப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசி, பக்க விளைவாக இரத்த உறைவு மற்றும் குறைந்த ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கைக்கு வழிவகுக்கும் என்ற தகவல் இது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்ப பெறுவதாக அஸ்ட்ராசெனகா  நிறுவனம் அறிவித்தது. புதிய வகை கரோனாவை எதிர்கொள்ளும் பல தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு சந்தைகளில் இருப்பதால், கோவிஷீல்டு தடுப்பூசிக்கான தேவை குறைந்துள்ளதாகவும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

கோவாக்சின் தடுப்பூசியாலும் பிரச்சனை

கோவிஷீல்ட் தடுப்பூசியால் பிரச்சினை என்ற தகவல் வெளியான நிலையில், கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கொஞ்சம் நிம்மதியாக இருந்தார்கள். இந்நிலையில், கோவாக்‌சின் தடுப்பூசியாலும் பிரச்சனைகள் ஏற்படுவது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசியை பயன்படுத்தியவர்களுக்கு பக்க விளைவு ஏற்பட்டுள்ளது என்பது பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் மருத்துவர் சங்க சுப்ரா சக்ரபர்தி மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஜனவரி 2022 முதல் ஆகஸ்ட் 2023 வரை ஒரு வருட காலம் கோவாக்சின் தடுப்பூசியை பயன்படுத்திய 1024 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 40% மேற்பட்டோருக்கு சுவாச நோய்கள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தோல் நோய்கள் 10.5 சதவீதம் பேருக்கும், நரம்பு மண்டலக் கோளாறுகள் 4.7 சதவீதம் பேருக்கும் ஏற்பட்டுள்ளது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடூப்பூசி போட்டவங்களுக்கு இனியும் பாதிப்பு இருக்குமா?

இது தொடர்பாக ’வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த, தொற்று நோய் சிறப்பு மருத்துவர் சுரேஷ்குமார், “தடுப்பூசிகளை பொறுத்தவரை நமக்கு கிடைத்துள்ள நன்மைகளை பொறுத்துத்தான் பக்கவிளைவுகளை மதிப்பீடு செய்ய வேண்டும். அப்படி பார்த்தால் அதிக அளவிலான நன்மைகளே தடுப்பூகளால் கிடைத்துள்ளன.

நவீன மருத்துவத்தில் மருந்தானாலும் சரி, தடுப்பூசியானாலும் சரி, எத்தனை பேருக்குப் பலன் கிடைக்கும், எத்தனை பேருக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதைக் கவனித்து, பலன் மிக அதிகமாகவும் பாதிப்பு மிக மிகக் குறைவாகவும் உள்ளவை மட்டுமே நடைமுறைக்கு வருகின்றன. அப்படிப் பாதிப்பு உள்ளவற்றையும் மறுபடி மறுபடி ஆய்வுக்கு உள்படுத்தி, பாதிப்பைக் குறைக்கும் பணியைத்தான் நவீன மருத்துவம் முன்னெடுக்கிறது.

10 லட்சம் பேர் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார்கள் என்றால், அவர்களில் நான்கு அல்லது ஐந்து பேர்தான் (0.0005%) ரத்தம் உறையும் பிரச்சினையால் அவதிப்பட்டார்கள். ஆக, இந்தத் தடுப்பூசியால் கரோனாவின் இரும்புப் பிடியிலிருந்து காப்பாற்றப்பட்டவர்கள்தான் அதிகம்; பாதிக்கப்பட்டவர்கள் மிக மிகக் குறைவு.

மேலும், தடுப்பூசி செலுத்திக்கொண்டு, மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இனிமேல் பக்க விளைவுகள் குறித்த அச்சம் தேவையே இல்லை” என்று டாக்டர் சுரேஷ் குமார் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...