No menu items!

மீண்டும் சிக்கலில் ‘விடாமுயற்சி’?

மீண்டும் சிக்கலில் ‘விடாமுயற்சி’?

’விடாமுயற்சி’ என்று படத்திற்கு பெயர் வைத்ததாலோ என்னவோ படத்தின் ஆரம்பம் முதலே ஷூட்டிங்கை நடத்துவதற்கு விடாமுயற்சியுடன் அப்படக்குழுவினரும் தயாரிப்பு நிறுவனமும் விடாமுயற்சியுடன் போராட வேண்டியிருக்கிறது.

அஜித் தனது பைக் டூர்ரை முடித்து வந்ததுமே தொடங்க வேண்டிய ஷூட்டிங் தொடங்கப்படவில்லை. ஏறக்குறைய 4 மாதங்கள் எந்தவிதமான சலனமும் இருந்தத்து விடாமுயற்சி குழு.

இந்நிலையில் ஒரு வழியாக அக்டோபர் 4-ம் தேதி துபாயில் ஷூட்டிங்கை தொடங்கிய இப்படக்குழுவினர் ஆக்‌ஷன் காட்சிகளை எடுத்து வருகிறார்கள்.

அப்பாடா என்று மூச்சு விட்ட மகிழ் திருமேனிக்கு மீண்டும் டென்ஷன். ஷுட்டிங்கை தொடர முடியுமா என்ற தயக்கம். இந்த முறை தயாரிப்பு நிறுவனத்திலோ அல்லது நட்சத்திரங்களிடமோ எந்தவித பிரச்சினையும் இல்லை.

ஆனால் இப்பொழுது ஆரம்பமாகி இருக்கும் இஸ்ரேஸ் – பாலஸ்தீனப் போரினால், அதன் பாதிப்பு அஜர்பைஜான், துபாய் போன்ற நாடுகளில் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அஜர்பைஜானில் திட்டமிட்டபடி ஷூட்டிங்கை தொடர முடியுமா என்பது இனிமேல்தான் தெரியும்.

போரின் பாதிப்பு இருந்தால், அவர்கள் திட்டமிட்ட லோகேஷன்களுக்கு செல்ல அனுமதி கிடைக்குமா என்று குழப்பம் ஏற்பட்டுள்ளதாம். இதனால் விடாமுயற்சி ஷுட்டிங் திட்டமிட்டபடி நடக்குமா அல்லது லொகேஷன்களை மாற்ற வேண்டுமா என்ற புதிய சிக்கல் எழுந்திருப்பதாக கூறப்படுகிறது.


ஸ்ரீதேவி இடத்தைப் பிடிப்பாரா நயன்தாரா?

தமிழில் இருந்து ஹிந்தி சினிமாவுக்குச் சென்ற நட்சத்திரங்களில் பலர் பாலிவுட்டில் தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிருந்து கிளம்பிய வேகத்திலேயே திரும்பி வந்திருக்கின்றனர்.

இந்தப் பட்டியலில் ரஜினி, கமல் உட்பட பெரும் நட்சத்திரப் பட்டாளமே இருக்கிறது. ஆனால் ஸ்ரீதேவி மட்டுமே பாலிவுட்டின் கனவுக்கன்னியாக ஹிந்தி சினிமா ரசிகர்களின் கனவில் அவர்களை ஆக்ரமிப்பு செய்தார்.

ஸ்ரீதேவிக்குப் பிறகு அசின், த்ரிஷா என முன்னணி நடிகைகள் அங்கே போனாலும், தாக்குப்பிடிக்க முடியவில்லை.

ஆனால் இப்போது நயன்தாராவுக்கு ஒரு வாய்ப்பு வந்திருப்பதாக கூறப்படுகிறது. நயன்தாராவின் முதல் பாலிவுட் படமான ‘ஜவான்’ வசூலில் பல புதிய சாதனைகளைப் படைத்திருக்கிறது. மேலும் முதல் படத்திலேயே ஷாரூக்கானுக்கு ஜோடியாகவும் அறிமுகமானது நயன்தாராவுக்கு கூடுதல் வரவேற்பை உருவாக்கி இருக்கிறது.

முதல் படமே ஹிட்டடித்ததால், இப்போது நயனை ஒப்பந்தம் செய்ய பாலிவுட் ஏஜென்ஸிகள் மும்முரமாக இருக்கின்றன என்கிறார்கள். இதில் முக்கியமான ப்ராஜெக்ட்டாக இருக்கிறது பாலிவுட்டின் அழகியல் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பைஜூ பாவ்ரா’ [Baiju Bawra].

சஞ்சய் லீலா பன்சாலி, வரலாற்று புனைவுகளை திரைப்படமாக எடுப்பதில் கில்லாடி. ‘பைஜூ பாவ்ரா’ படத்தில் ரன்வீர் சிங், ஆலியா பட் இருவரும் நடிக்க இருக்கிறார்கள். இதில் நயன்தாராவுக்கும் முக்கிய கதாபாத்திரம் என்கிறார்கள்.

நயன்தாரா இப்படத்தை ஒப்புக்கொள்வாரா மாட்டாரா என்பதை பொறுத்து ஸ்ரீதேவி இடத்தைப் பிடிக்கும் அவருடைய பாலிவுட் பயணம் இருக்கும். ஆனாலும் நயன்தாராவுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பாக அமையும், அவர் விரைவில் இப்படக்குழுவில் இணைவார் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...