No menu items!

வடிவேலு VS பி.வாசு – வெளியே போ!

வடிவேலு VS பி.வாசு – வெளியே போ!

ரஜினிக்கு மட்டுமில்லாமல் வடிவேலுவுக்கும் வேற மாதிரியான ஹிட்டாக அமைந்தது ‘சந்திரமுகி’.

’சந்திரமுகி’ படத்திற்கு பிறகு பிரம்மாண்டமான பட்ஜெட்டில் மட்டுமே கமிட்டாகி வரும் ரஜினி ஏனோ சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பம் காட்டவில்லை. இதனால் லைகா தயாரிக்க, ரஜினியின் ரசிகரான டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸை வைத்து ஷூட்டிங்கை ஆரம்பித்துவிட்டார் பி.வாசு.

ரஜினி இல்லையே தவிர வடிவேலு இப்படத்தில் இருந்தார்.

ஆனால் இப்படத்தில் அவர் கமிட்டானது முதலிருந்தே கைப்புள்ள ரேஞ்சுக்கு ஏக ரவுசு காட்டியதாக கூறுகிறார்கள். இதற்கு காரணம் லைகா தயாரிப்பில் எடுக்கப்பட்ட ’நாய் சேகர்’ படத்தில் ஹீரோவாக நடித்து கொண்டிருந்தார்.

இதனால் வடிவேலு ‘நாய் சேகர்’ படத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தாராம்.

’சந்திரமுகி 2’ சம்பந்தப்பட்ட காட்சிகளை முடிக்க இரண்டு அல்லது மூன்று நாட்கள் தேவைப்பட்டிருக்கிறது. அதை முடித்துவிட்டால் வடிவேலு சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் எடுக்கப்பட்டுவிடும். இதைச் சொல்லி வடிவேலுவிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள் சந்திரமுகி 2 படக்குழுவினர். ஆனால் வடிவேலு ’நாய் சேகர்’ படத்திற்குதான் முதலில் கால்ஷீட் என்று கறாராக கூறியிருக்கிறார்.

இத்தனை பிடிவாதம் பிடித்தால் படத்திலிருந்து வடிவேலு காட்சிகளை தூக்கிவிடுவேன் என்று கூறியிருக்கிறார் பி.வாசு.

இந்தப் பின்னணியில், வடிவேலு பெரிதும் எதிர்பார்த்த ’நாய் சேகர்’ வந்த வேகத்திலேயே எந்த வரவேற்பும் இல்லாமல் அப்படியே தியேட்டரைவிட்டு ஓடி விட, ‘சந்திரமுகி 2’ பக்கம் தலைகாட்டியிருக்கிறார் வடிவேலு.

ஆனால் அங்கு மீண்டும் பிரச்சினைகள் தொடங்கியிருக்கிறது.

தான் ஷூட்டிங்குக்கு வந்தால் தன் காட்சிகளைதான் முதலில் எடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருக்கிறார் வடிவேலு. ஆனால் அதற்கு பி.வாசு ஒப்புக் கொள்ளவில்லை.

தான் விரும்பியபடிதான் காட்சிகளை எடுப்பேன் என்று வடிவேலுவிடம் சொன்னாராம் பி.வாசு. இதனால் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கனவே நாய் சேகரால் ஷூட்டிங் வராமல் இருந்த வடிவேலு மீது சந்திரமுகி 2 படக் குழுவினர் கடுப்பில் இருந்திருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, ‘பிடிக்கவில்லை என்றால் வெளியே போ’ என்று பி.வாசு கத்தியதாக ஷூட்டிங் ஸ்பாட்டில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.

இது குறித்து கேட்டால் இருவருமே வாய் திறக்க மறுக்கிறார்கள்.

மாப்பு வச்சிட்டேயே ஆப்பு என்று சந்திரமுகியில் கலாட்டா காமெடி செய்த எல்லோரையும் சிரிக்க வைத்த

வடிவேலு இந்த சந்திரமுகி 2இல் எல்லோரையும் டென்ஷனாக்கிக் கொண்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...