No menu items!

திருமணத்தை தள்ளிப்போட்ட த்ரிஷா

திருமணத்தை தள்ளிப்போட்ட த்ரிஷா

சினிமாவில் ட்ரெண்ட்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. நடிகைகள் வந்து கொண்டே இருக்கிறார்கள். கவர்ச்சியோ நடிப்போ எதற்கு தயாராக இருக்கிறார்கள். இப்படியொரு சூழலில் இருபது ஆண்டுகாலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாகவே தாக்குப்பிடிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல.

இதனால்தான் த்ரிஷா உற்சாகத்தில் இருக்கிறார்.

கடந்த சில வருடங்களாக அவர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. சென்சார் ஆகியும் வெளிவருவதில் பிரச்சினைகள் இருந்தன.

இதனால் பேட்டிகள் கூட கொடுக்க த்ரிஷா விரும்பவில்லை. தமிழ் சினிமாவில் பரபரப்பாக இருந்து கொண்டு, சும்மாவே வீட்டில் இருந்தால் அது மனரீதியாக பாதித்துவிடும் என்பதால் த்ரிஷா அம்மா கொஞ்சம் வருத்தத்தில் இருந்தாராம்.

இவ்வளவு நாட்கள் ஒரு மெகா ரவுண்ட் வந்தாயிற்று. போதும். திருமணம் செய்து கொள் என்று த்ரிஷாவின் அம்மா தொடர்ந்து வற்புறுத்தி வந்தும் த்ரிஷா அதற்கு மசிந்ததாக தெரியவில்லை.

புகழ் இருக்கும் போது சினிமாவில் இருந்து விலகினால்தான் மவுசு இருக்கும் என்ற த்ரிஷா திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இப்பொழுது பொன்னியின் செல்வன் பட மூலம் கிடைத்திருக்கும் மவுசு த்ரிஷாவை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம்.

சரி இப்பொழுதாவது திருமணம் செய்து கொள் என அம்மா ஆரம்பிக்க, இந்த செகண்ட் ரவுண்டை முடித்துவிட்ட பிறகு பார்க்கலாம் என்று த்ரிஷா சொல்கிறாராம்.


நான்கு ஹீரோக்கள் ரிஜெக்ட் செய்த வாரிசு கதை

ஒரே பேட்டிதான். 20 விநாடிகள் மட்டுமே இருக்கும் அந்த கமெண்ட். அது அடித்து தூக்கிவிட்டது. இப்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கலககார தயாரிப்பாளராக பாப்புலர் ஆகியிருக்கிறார் தயாரிப்பாளர் தில் ராஜூ.

அஜித் விஜய் ஒப்பீடு ஒரு பக்கம் இன்றும் சூட்டைக் கிளப்பி கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் அடுத்த குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார் தில்ராஜூ.

’’வாரிசு’ கதை உண்மையில் மகேஷ் பாபுவை மனதில் வைத்து, அவருக்காகவே எழுதப்பட்டது. ஆனால் மகேஷ் பாபு வேறு சில ப்ராஜெக்ட்களில் பிஸியாக இருந்ததால் அந்த நேரத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது.

மகேஷ் பாபு இல்லை என்று ஆனதும் அடுத்து அல்லு அர்ஜூனிடம் இந்த கதையைச் சொன்னோம். அவரால் நடிக்க முடியாமல் போனது.

அல்லு அர்ஜூனை அடுத்து ராம் சரணிடம் கேட்டோம். அவராலும் நடிக்க முடியவில்லை.

சரி பிரபாஸிடம் கேட்போம் என்று போனால் அவராலும் முடியவில்லை.
இப்படி நாங்கள் திட்ட நாட்களில் இவர்களால் நடிக்க முடியாமல் போனது. அதன் பின்னரே இந்த கதையை விஜயை வைத்து எடுக்க முடிவு பண்ணினோம். விஜய் உடனே நடிக்க ஒப்புக்கொண்டார்.’ என்று வெளிப்படையாகவே பேசியிருக்கிறார் தில் ராஜூ.

இதனால் நான்கு ஹீரோக்கள் வேண்டாமென்று ஒதுக்கிய கதையை விஜய் ஏன் ஒகே சொன்னார் என்ற சலசலப்பு கிளம்பியிருக்கிறது.

வாரிசு ஃபாலோ அப்

அஜீத்தை விட விஜய்க்குதான் பிஸினெஸ் அதிகம். அவர்தான் நம்பர் 1. அதனால் வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட வேண்டும். துணிவுக்கு ஒதுக்கிய திரையரங்குகளை விட குறைந்தப்பட்சம் 20 சதவீதம் கூடுதல் திரையரங்குகள் ஒதுக்கவேண்டும் என்றார் வாரிசு படத்தயாரிப்பாளர் தில் ராஜூ.

இப்போது இந்த கமெண்ட் தெலுங்கு சினிமாவிலும் அதிர்வை உண்டாக்கி இருக்கிறது.

இதனால் வாரிசுடுவுக்கு புதிய சிக்கல் கிளம்பியிருக்கிறது.

தெலுங்கில் விஜய்க்கு பெரிய மார்க்கெட் இல்லையென்றாலும், வாரிசுடுவுக்கு அதிக திரையரங்குகளை கைப்பற்றி இருக்கிறார்கள். காரணம் தில் ராஜூ கைவசம் நிறைய ஸ்கிரீன்கள் இருப்பதே.

இப்பொழுது தில் ராஜூ அடித்த கமெண்டை வைத்து, தெலுங்கில் விஜயை விட சிரஞ்சீவிக்கும், பாலகிருஷ்ணாவுக்கும் மார்க்கெட் அதிகம். அதனால் வாரிசுடு படத்தை விட வால்டர் வீரய்யாவுக்கும், வீரசிம்ம ரெட்டிக்கும் அதிக திரையரங்குகள் வேண்டுமென ஏன் கேட்க கூடாது என்று தெலுங்கு சினிமாவில் சர்ச்சை கிளம்பியிருக்கிறதாம்.


பாலாஜி மோகன் – தன்யா ரகசிய திருமணம் தகவல் கசிந்தது எப்படி?

சில வருடங்களுக்கு முன்பு காவிரி நீர் பிரச்சினையில் தமிழர்களை தனது கமெண்ட்களால் காயப்படுத்திய தன்யா பாலகிருஷ்ணன் இப்போது புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

தன்யா பாலகிருஷ்ணன், மாரி 2 பட இயக்குநர் பாலாஜி மோகனை ரகசிய திருமணம் செய்திருக்கிறார் என்று தகவல் கசிந்திருக்கிறது.

தன்யா பாலகிருஷ்ணன் தமிழ் இயக்குநர் பாலாஜி மோகனை இந்தாண்டு ஆரம்பத்தில் திருமணம் செய்துவிட்டார். இதற்காக பாலாஜி மோகன் தனது முதல் மனைவியையும் விவாகரத்து செய்திருக்கிறார். இப்பொழுது தன்யா எந்த பட ப்ரமோஷனுக்கும் வருவதில்லை. ஏதோ பிரச்சினை போலிருக்கிறது’ என்று நடிகை கல்பிகா தனது யூட்யூப் சேனலில் கூற, இப்போது இந்த விஷயம் பரபரப்பாகி இருக்கிறது.

இந்த வீடியோ வைரல் ஆன வேகத்தில் சில நாட்களிலேயே யூட்யூப்பில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.

தன்யா வேண்டுகோளுக்கு இணங்க இந்த வீடியோ நீக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லும் கல்பிகாவுக்கும் தன்யாவுக்கும் இடையே எக்கச்சக்கமான பஞ்சாயத்துகள் ஓடிக்கொண்டிருக்கிறதாம். இருவருக்கும் இடையிலான சண்டையினாலேயே ரகசிய திருமணம் பற்றி பேச்சு கிளம்பியிருக்கிறது.

ரகசியம் திருமணம் பற்றி தன்யாவிடம் கேட்டால், அதற்கு பதிலளிக்க தன்யா மறுத்துவிடுகிறாராம். இந்த மாதிரி கிசுகிசுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது என்று கழன்று கொள்கிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...