No menu items!

இன்று தங்கம் விலை ஒரு பவுன் ரூ.1,23,200

இன்று தங்கம் விலை ஒரு பவுன் ரூ.1,23,200

தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி உள்ளது மத்திய அரசு. இதனால், ஆபரணத் தங்கம் விலையும் வெகுவாக அதிகரிக்கும் என்பதால் தங்கம் வாங்குவதை மக்கள் தவிர்ப்பதும், தள்ளிப் போடுவதும் நடக்கும் எனத் தெரிகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ‘நாட்டு மக்கள் தங்கம் வாங்குவதை ஓராண்டு காலம் தவிர்க்க வேண்டும்’ என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருருந்த நிலையில், தங்கத்தின் மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

உலக அளவில் தங்கத்தை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. இதோடு வெள்ளியையும் அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்திய தேசம் உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் அதிகளவில் தங்கம் வாங்கி வருவதாக தகவல். உலகளாவிய தங்கத்தில் சுமார் 11 சதவீதம் இந்திய குடும்பங்களிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தங்கம் சார்ந்த கோல்டு இடிஎஃப்-பில் பல மடங்கு அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில்தான் தங்கத்தின் மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தங்கத்தின் மீதான சுங்க வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி உள்ளது மத்திய அரசு. இதில் 10 சதவீதம் அடிப்படை சுங்க வரி என்றும், 5 சதவீதம் வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக் கூடுதல் வரி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தங்கம் உள்ளிட்ட உலோக இறக்குமதியை குறைப்பது, வர்த்தகப் பற்றாக்குறையை மட்டுப்படுத்துவதுதான் அரசின் திட்டம் என வர்த்தக துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த 2024 ஜூலையில் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதமாக மத்திய அரசு குறைத்திருந்தது. தற்போது அதை 15 சதவீதமாக அரசு உயர்த்தி உள்ளது. இதுமட்டுமல்லாது தங்கத்தின் மீது ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.15400-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் ஒரு கிராம் ரூ.300-ஐ கடந்து அதிர்ச்சியளித்துள்ளது.

பொதுவாகவே, சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை முதலீடு உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இத்துடன், மத்திய அரசு தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி உள்ளதும் தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்து உள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.1070 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,400-க்கும், பவுனுக்கு ரூ.8560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,23,200-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் கடும் உயர்வு: தங்கம் விலையைப் போல வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.330-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.3,30,000-க்கும் விற்பனையாகிறது. இந்த திடீர் அதிரடி விலையேற்றம் நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...