No menu items!

கமலின் மகனாக நடிக்கும் சிம்பு

கமலின் மகனாக நடிக்கும் சிம்பு

ஏறக்குறைய 37 வருடங்களுக்குப் பிறகு கமலும், மணிரத்னமும் இணையும் படம் ‘தக் லைஃப்’. இவர்கள் இருவரும் கடைசியாக இணைந்து பணியாற்றிய படம் 1987-ல் வெளியான ‘நாயகன்’.

’தக் லைஃப்’ படத்தின் ஷூட்டிங் இப்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் பாலிவுட்டின் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு நடித்து வருகிறார்கள். ’மிர்ஸாபூர்’ படத்தின் நட்சத்திரங்களான அலி ஃபஸல், பங்கஜ் த்ரிபாதி இப்போது இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல் ‘டங்கல்’ படத்தில் நடித்தவரும், சமீபத்தில் ’ஜவான்’ படத்தில் நடித்திருக்கும் சான்யா மல்ஹோத்ராவும் கமலுடன் சில காட்சிகள் நடிக்கிறாராம்.

இப்படி பாலிவுட் நட்சத்திரங்களை அடுத்தடுத்து நடிக்க வைக்க காரணம் கடைசியாக வந்த மணிரத்னத்தின் நான்கு படங்கள் பாலிவுட் வட்டாரத்தில் சுத்தமாக எடுப்படவில்லை. அதனால் ஹிந்தி நட்சத்திரங்களை வைத்து, இந்த முறை பான் – இந்தியா படமாக வெளியிடும் எண்ணத்தில் இருக்கிறார் மணிரத்னம். அதற்கான எல்லா வேலைகளையும் பாலிவுட் ஏஜென்சிகள் செய்ய ஆரம்பித்திருக்கின்றன.

இது ஒருபுறம் இருந்தாலும், துல்கர் சல்மான், ஜெயம் ரவி இருவரும் விலகியதை மணிரத்னம் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லையாம். இதனால்தான் அவர்களில் ஒரு ஏற்று கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்க இப்போது சிம்பு ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அதாவது துல்கர் சல்மான், கமலின் மகன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக முதலில் முடிவானதாம். ஆனால் கால்ஷீட் பிரச்சினையக் காட்டி துல்கர் கழன்று கொண்டார். ஆனால் அதில் உண்மையில்லையாம், அதன் பின்னணி இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

துல்கர் விலகியதால், சிம்பு இப்போது அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இதனால் கமலின் மகன் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார்.


’’வாடிவாசல்’ வருவது உறுதி

கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறனும், சூர்யாவும் இணைவதாக கூறப்பட்ட ‘வாடிவாசல்’ படம் வருமா வராதா என்ற குழப்பம் ஒரு வருடமாகவே இருந்து வருகிறது.

’விடுதலை 2’ ஷூட்டிங்கில் வெற்றிமாறன் மும்முரமாக இருப்பதால், வாடிவாசல் கொஞ்சம் தள்ளிப் போகலாம் என்று கூறப்பட்டது. இதற்கிடையில் சூர்யா ‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார் என்றார்கள். சில நாட்களில் ‘புறநானூறு’ என்று டைட்டிலும் வைத்து அறிவித்தார்கள்.

இப்போது அந்தப் படமும் காத்திருப்பு பட்டியலில் இருக்கிறது. காரணம் சூர்யாவின் கால்ஷீட் பிரச்சினைதான் என்று கூறப்பட்டது.

ஆனால் சுதா எழுதிய கதை, ஹிந்தி திணிப்பை எதிர்த்து போராடிய காலக்கட்டத்தைச் சேர்ந்த கதை என்பதால், நிறைய டீடெய்லிங் தேவைப்படுகிறதாம். இதனால் செட் போட்டு ஷூட் செய்தால் செலவு அதிகம் பிடிக்கும். திரைக்கதையை அதன் சாராம்சம் மாறாமல் மாற்றி எழுதினால் நன்றாக இருக்கும் என சூர்யா தரப்பில் கூற இப்போது சுதா திரைக்கதையை மாற்றியமைத்து வருகிறாராம்.

இந்த இரண்டுப் படங்களும் இப்போதைக்கு இல்லை என்பதால், சூர்யா ஹிந்திப்படமொன்றில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.

இப்படியொரு குழப்பம் இருப்பதால், வாடிவாசல் வருமா வராதா என்ற கேள்விக்கு முக்கியத்துவம் கூடியிருக்கிறது.

இந்நிலையில் வாடிவாசல் நிச்சயம் என வெற்றிமாறன் வாக்கு கொடுத்திருக்கிறாராம். இன்னும் சில நாட்களில் விடுதலை 2 ஷுட்டிங் முடிந்துவிடும். சில மாதங்களில் படமும் வெளியாகிவிடும். அதன் பின் வாடிவாசலில்தான் என் கவனம் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

வாடிவாசலில் கதாநாயகன் சூர்யாதான் என்றாலும், அவருக்கு இணையாக காட்சிகள் உள்ள கதாபாத்திரத்தில் அமீர் நடிக்க இருக்கிறார். சூர்யா தரப்பில் உள்ள சிலருக்கும், அமீருக்கு ஏற்கனவே பருத்திவீரன் பட பஞ்சாயத்து இருப்பதால், சூர்யா அமீருடன் நடிக்க ஒப்புக்கொள்வாரா….. அமீர் வேண்டாம் என சூர்யா சொன்னால் வெற்றிமாறன் அமீரை கைவிடுவாரா … சூர்யா சொன்னாலும் அமீரை நடிக்க வைப்பதில் வெற்றிமாறன் பிடிவாதமாக இருப்பாரா என்கிற பிரச்சினை இப்போது வாடிவாசலின் முன் சம்மணமிட்டு உட்கார்ந்து இருக்கின்றன.

இந்த பஞ்சாயத்தை எப்படி தீர்க்கப் போகிறார்கள் என்பதை பொறுத்தே வாடிவாசல் ஷூட்டிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...