No menu items!

தமன்னாவுக்கு ரஜினி கொடுத்த பரிசு!

தமன்னாவுக்கு ரஜினி கொடுத்த பரிசு!

ரஜினியின் ‘ஜெயிலர்’ பட ஷூட்டிங் ஒரு வழியாக முடிந்திருக்கிறது. இந்தப்படத்தில்தான் தமன்னா முதல் முறையாக ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஷூட்டிங்கின் கடைசி நாள் ரஜினியுடன் தமன்னாவும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார்.

இதனால் ஷூட்டிங் எல்லாம் முடிந்தப்பின்பும் கூட ரொம்பவே குஷி மூடில் இருக்கிறார். ‘ரஜினியுடன் சேர்ந்து நடிக்க வேண்டுமென்ற நீண்ட நாள் கனவு ‘ஜெயிலர்’ படம் மூலம் நிறைவேறியிருக்கிறது. ‘ஜெயிலர்’ செட்டில் ரஜினியுடன் இருந்தா ஒவ்வொரு நொடியையும் ஆயுள் முழுவதும் நியாபகம் வைத்திருப்பேன்’ என்று ரஜினி புராணம் பாடிக்கொண்டிருக்கிறார் தமன்னா.

ரஜினிக்கு திடீரென ஏதாவது உள்மனதில் தோன்றினால் ஏதாவது ஒரு பரிசைக் கொடுப்பது வழக்கம். தமன்னாவுக்கும் அப்படியொரு பரிசை கொடுத்திருக்கிறார்.

‘ஆன்மிகப் பயணம்’ பற்றிய புத்தகத்தைதான் ரஜினி தனது பரிசாக தமன்னாவுக்கு கொடுத்திருக்கிறார். அதில் முதல் பக்கம் தனது கையெழுத்தையும் ஆட்டோக்ராஃப் ஆக போட்டு கொடுக்க, தமன்னா ஸ்பாட்லேயே உற்சாகத்தில் துள்ளிக்குதித்து இருக்கிறார்.

தமன்னா, ரஜினி கொடுத்த அந்த ஆன்மிக பயண’ புத்தகத்தைப் படித்தால், அப்புறம் விஜய் வர்மா நிலைமை என்னவாகுமோ என்று நீங்கள் நினைத்தால், அதற்கு யாரும் பொறுப்பல்ல.


இந்திய பாக்ஸ்ஆபீஸ் சூப்பர்ஸ்டார் பிரபாஸ்!

’அதிபுரூஷ்’ படம் ஜூன் 16-ல் வெளியாகி இருக்கிறது. படம் வெளியான முதல் நாளிலேயே ஒட்டுமொத்தமாக 140 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், இந்தியாவில் வெறெந்த நடிகரும் எட்டாத சாதனையை போகிறப்போக்கில் தட்டிச் சென்றிருக்கிறார் பிரபாஸ்.

இந்திய சினிமாவில் ஒரு படம் வெளியான முதல் நாளில் 100 கோடிக்கும் மேல் வசூலித்தப்படங்கள் மொத்தம் 6. இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் அந்தப் படங்கள் ‘பாகுபலி’, ’சாஹோ’, ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘கேஜிஎஃப்’, ‘பதான்’ மற்றும் ‘ஆதிபுரூஷ்’.

இந்த ஆறு படங்களில் ‘பாகுபலி’, ’சாஹோ’ மற்றும் ‘ஆதிபுரூஷ்’. ஆகியவற்றில் ஹீரோவாக நடித்திருப்பவர் பிரபாஸ். இதனால் இந்திய அளவில் வெளியான முதல் நாளில் 100 கோடி வசூலித்தப்படங்களில் அதிக எண்ணிக்கையிலான படங்களில் நடித்திருக்கும் நடிகர் என்ற பெரும் சாதனையை பிரபாஸ் படைத்திருக்கிறார்.

மேலும் இவருக்கு அடுத்தடுத்து வரவிருக்கும் படங்களான சலார், ப்ராஜெக்ட் கே மற்றும் ஸ்பிரிட் ஆகிய மூன்றுப்படங்களும், முதல் நாளிலேயே 100 கோடிக்கு மேல் வசூலிக்கும் வாய்ப்புகள் அதிகமுள்ள படங்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஏமாந்த ராஷ்மிகா… பறிப்போன 80 லட்சம்!

ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் ரொம்பவே மூட் அவுட்டில் இருந்திருக்கிறார். காரணம், அவர் நடிக்க வந்த புதிதில் இருந்து, இன்றுவரை அவரது மேனேஜராக இருந்தவர் கூடவே இருந்து ஏமாற்றிவிட்டாராம்.

ராஷ்மிகாவின் சினிமா கேரியரின் ஆரம்பம் முதல் இருப்பவர் என்பதால், மேனேஜர் மீது ராஷ்மிகாவுக்கு நம்பிக்கை ரொம்பவே அதிகம்.

ஆனால் மேனேஜரோ கூடவே இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சுருட்டி இருக்கிறார். இப்படி அவர் ராஷ்மிகாவின் சம்பாத்தியத்தில் இருந்து அடித்த பணம் சுமார் 80 லட்சம் என்கிறார்கள்.

இந்த கும்மாங்குத்து சுருட்டலைக் கண்டுப்பிடித்த ராஷ்மிகா, அதை பிரச்சினை ஆக்காமல் சத்தமில்லாமல் பேசி முடிக்க முயற்சித்து வருகிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

போலீஸில் புகார் கொடுக்காவிட்டாலும், அவரை தனது மேனேஜர் பதவியில் இருந்து அசோசியேஷன் மூலம் நீக்கி விட்டார்.

80 லட்சம் போனாலும், கூடவே இருந்தவர் இப்படி ஏமாற்றிவிட்டாரே என்று வருத்தம்தான் ராஷ்மிகாவுக்கு அதிகமிருக்கிறதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...