No menu items!

சரண்யா பொன்வண்ணன் மீது வழக்கு – பார்க்கிங் பிரச்சினை வம்பு!

சரண்யா பொன்வண்ணன் மீது வழக்கு – பார்க்கிங் பிரச்சினை வம்பு!

பார்க்கிங் பட பாணியில் காரை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறால் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது போலீஸில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

கமல் நடித்த நாயகன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சரண்யா. இதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்த சரண்யா, இயக்குநர் பொன்வண்ணனை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு சில காலம் நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்த சரண்யா, பின்னர் மீண்டும் நடிக்க வந்தார். கடந்த சில ஆண்டுகளாக தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களை ஏற்று அவர் நடித்து வருகிறார்.

சரண்யா பொன்வண்ணனின் வீடு சென்னை விருகம்பாக்கத்தில் உள்ளது. அவரது வீட்டுக்கு அருகில் ஸ்ரீதேவி என்பவரின் வீடு உள்ளது. இந்நிலையில் சரண்யா தனது காரை வீட்டுக்கு வெளியில் நிறுத்தி இருந்தார்.

அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்ரீதேவி, தங்கள் காரை வீட்டில் இருந்து எடுப்பதற்காக தனது வீட்டின் கேட்டை வெளிப்புறமாக திறந்திருக்கிறார். 20 அடி நீளம் கொண்ட அந்த கேட், சரண்யாவின் கார் மீது உரசச் சென்றதால், சரண்யாவுக்கும், ஸ்ரீதேவிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீதேவி வேண்டுமென்றே காரை உரசும் நோக்கத்துடன் கேட்டை திறந்த்தாக சரண்யா குற்ரம் சாட்டியிருக்கிறார். ஆனால் தனது வீட்டு கேட்டுக்கு அருகில் அவர் காரை நிறுத்தி இருந்ததாக ஸ்ரீதேவி கூறியுள்ளார்.

இரு தரப்பினருக்கும் இடையே இது தொடர்பாக மோதல் எழுந்துள்ள நிலையில், சரண்யா குடும்பத்தினர் தங்கள் வீட்டுக்குள் புகுந்து கொலை மிரட்டல் விடுத்ததாக பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஸ்ரீதேவி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தகராறு தொடர்பான சிசிடிவி காட்சிகள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன் வெளியான பார்க்கிங் படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். காரை பார்க்கிங் செய்வதில் இரு வீட்டினர் இடையே ஏற்படும் ஈகோ மோதலை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருந்த்து. இப்போது அதே பார்க்கிங் பட பாணியில் காரை நிறுத்தும் பிரச்சினையால் சரண்யா பொன்வண்ணனுக்கும் அவரது பக்கத்து வீட்டினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, அது காவல் நிலையம் வரை போயிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...