No menu items!

அள்ளித் தரும் பணக்காரர்கள் – இந்தியாவின் TOP 10

அள்ளித் தரும் பணக்காரர்கள் – இந்தியாவின் TOP 10

பணம் என்பது சம்பாதிப்பதற்கு மட்டுமல்ல… தேவைப்படும் மக்களுக்கு கொடுப்பதற்கும்தான். ஆனால் பணத்தை தேடிச் தேடி சம்பாதிக்கும் பலருக்கும் அதை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை. வெகு சிலருக்கே இந்த வள்ளல் குணம் வருகிறது.

இந்த வகையில் இந்தியாவின் மிகச்சிறத்த, அதாவது மிக தாரளமாக தங்கள் செல்வங்களை நன்கொடையாக வழங்கிய வள்ளல்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. EdelGive Hurun India Philanthropy List 2022 என்ற இந்த லிஸ்ட்டில் முதல் இடத்தில் இருப்பவர் ஷிவ் நாடார்.

புகழ்பெற்ற ஹெச்சிஎல் (HCL) நிறுவனத்தின் நிறுவனரான இவரது மொத்த சொத்து மதிப்பு 2,310 கோடி அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய். இத்தனை பணத்தை சேர்த்து வைத்துள்ள சிவ் நாடாருக்கு, தனது செல்வத்தை ஏழை எளியவர்களுக்கும் பிரித்துக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணமும் நிறையவே உண்டு. இதன் காரணமாக கடந்த ஆண்டில் மட்டும் 1,161 கோடி ரூபாயை பல்வேறு அறப்பணிகளுக்காக தானமாக வழங்கியுள்ளார் சிவ் நாடார். இவர் நன்கொடையாக கொடுத்துள்ள பணத்தை வருடத்தின் நாட்களை வைத்து வகுத்துப் பார்த்தால் நாளொன்றுக்கு சுமார் 3 கோடி ரூபாய் வரை இவரது பர்ஸில் இருந்து தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பணத்தை கலை மற்றும் கலாச்சார பணிகளுக்காக சிவ் நாடார் செலவழித்துள்ளார்.

சிவ் நாடாருக்கு அடுத்ததாக இந்தியாவில் அதிக வள்ளல்தன்மை கொண்ட நபர் என்ற பெருமை அசிம் பிரேம்ஜிக்கு கிடைத்துள்ளது. விப்ரோ நிறுவனத்தின் தலைவராக இருந்த இவரது சொத்து மதிப்பு 910 கோடி அமெரிக்க டாலர்கள். இதில் இந்த நிதியாண்டில் மட்டும் 484 கோடி ரூபாயை பல்வேறு அறக்கட்டளை பணிகளுக்காக அசிம் பிரேம்ஜி வழங்கியுள்ளார். இதில் பெரும்பாலான பணம் கல்வி சார்ந்த விஷயங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது.

இவர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பது முகேஷ் அம்பானியும் அவரது குடும்பத்தினரும்தான். அவர்கள் குடும்பத்தினர் இந்த நிதியாண்டில் 411 கோடி ரூபாய் அளவுக்கு நன்கொடைகளை வழங்கியுள்ளனர். இவர்களின் நன்கொடைகள் பெரும்பாலும் கல்வியைச் சார்ந்து இருந்துள்ளது.

நான்காவது இடத்தில் உள்ள குமாரமங்கலம் பிர்லாவின் குடும்பத்தினர் இந்த ஆண்டில் கல்விப் பணிகளுக்காக 242 கோடி ரூபாய் நன்கடை வழங்கியுள்ளனர்.

இந்திய பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவரும், உலகின் முன்னணி பணக்காரர்கள் வரிசையில் முதல் 5 இடங்களுக்குள் மாறி மாறி வருபவருமான கவுதம் அதானி, இந்த பட்டியலில் 7-வது இடத்தில்தான் இருக்கிறார்.

இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் அவர்கள் கொடுத்துள்ள நன்கொடைகள்…

தொழிலதிபர்நிறுவனம்நன்கொடை
சிவ் நாடார்ஹெச்சிஎல்ரூ.1,161 கோடி
அசிம் பிரேம்ஜிவிப்ரோரூ.484 கோடி
முகேஷ் அம்பானி மற்றும் குடும்பம்ரிலையன்ஸ் ரூ.411 கோடி
குமாரமங்கலம் பிர்லா மற்றும் குடும்பம்பிர்லா குழுமம்ரூ.241 கோடி
சுஷ்மிதா மற்றும் சுபோர்தோ பாகிமைண்ட் ட்ரீரூ.213 கோடி
ராதா மற்றும் என்.எஸ்.பார்த்தசாரதிமைண்ட் ட்ரீரூ.213 கோடி
அதானி மற்றும் குடும்பத்தினர்அதானி குழுமம்ரூ.190 கோடி
அனில் அகர்வால் மற்றும் குடும்பத்தினர்வேதாந்தா குழுமம்ரூ.165 கோடி
நந்தன் நிலன்கெணிஇன்ஃபோசிஸ்ரூ.159 கோடி
ஏ.எம். நாயக்எல்&டிரூ.142 கோடி









LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...