No menu items!

விஜய் – ராஷ்மிகா கால்ஷீட் பஞ்சாயத்து!

விஜய் – ராஷ்மிகா கால்ஷீட் பஞ்சாயத்து!

விஜய் நடித்து வரும் படத்தின் ஷூட்டிங் மிக வேகமாக நடந்து வருகிறது. ஒரே மூச்சில் முக்கியமான காட்சிகளை முதலில் ஷூட் செய்துவிட வேண்டுமென இயக்குநர் வம்சி படிபள்ளி மும்முரமாக இருக்கிறார்.

ஏன் இந்த பரபரப்பு என்று கேட்டால் ராஷ்மிகா கால்ஷீட் பிரச்னைதான் என்கிறார்கள்.

புஷ்பா படத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து, ‘புஷ்பா -2’-வை வெகு சீக்கிரமே எடுத்துவிட வேண்டுமென அப்பட இயக்குநர் சுகுமாரும், தயாரிப்பாளர்களும் முடிவு செய்துவிட்டனர்.

அல்லு அர்ஜூன் அதிக சம்பளம் கேட்டதும், தொகையை ஏற்றியதோடு, சில ஏரியாக்களின் விநியோக உரிமையையும் கொடுக்க தயாரிப்பாளர்கள் ஒப்புக் கொண்டனர்.

இதைப் பார்த்து, ராஷ்மிகாவும் சம்பளத்தை உயர்த்தி கேட்க, அதற்கும் தயாரிப்பாளர்கள் தரப்பு ஒகே சொல்லிவிட, ’புஷ்பா- 2’ வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.

ஆனால் கிடைத்த இடைவெளியில் ராஷ்மிகா, விஜய் படத்தில் கமிட்டாகி விட்டார். விஜய் படத்திற்கு மொத்தமாக 40 நாட்கள் கால்ஷீட் தேவைப்பட்டதால், கால்ஷீட் டைரியை திரும்பத் திரும்ப பார்த்து கொண்டிருந்தாலும், அதிக நாட்கள் மொத்தமாக இல்லையென்பதால் என்ன செய்வதென தெரியாமல் யோசித்து கொண்டிருப்பவருக்கு வசதியாக போனது புஷ்பா இயக்குநர் சுகுமாரின் அமெரிக்கா விசிட்.

புஷ்பா இயக்குநர் சுகுமார் அமெரிக்காவில் இரண்டு மாதம் இருக்க வேண்டியிருப்பதால், அந்நேரத்தில் புஷ்பா இரண்டாம் பாகத்திற்கான ப்ரீ ப்ரொடக்‌ஷன் வேலைகளைப் பார்க்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள்.

அதனால் அந்நாட்களில் ஷூட் இருக்காது என்பதால், விஜய் படத்திற்கான கால்ஷீட்டில் பிரச்னை வராது என ராஷ்மிகா உற்சாகமாக ஷூட்டில் கலந்து கொண்டிருக்கிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...