No menu items!

அஜித்துக்கு என்ன ஆச்சு? நலம் விசாரித்த ரஜினி!

அஜித்துக்கு என்ன ஆச்சு? நலம் விசாரித்த ரஜினி!

நடிகர் அஜித் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி இன்று கோலிவுட் வட்டாரத்தில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். த்ரிஷா கதாநாயகியாக நடிக்கும் இப்படம் வரும் மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும்  வெளிநாடுகளில் நடந்து வருகிறது. படப்பிடிப்புக்கு சில நாட்கள் பிரேக் விடப்பட்டதால் அஜித் இப்போது சென்னையில் இருக்கிறார். அவர் தனது மகன் ஆத்விக்கின் பிறந்த நாளை கொண்டாடிய படங்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில்  வெளியாகின

இந்நிலையில் சென்னை அப்பலோ மருத்துவமனையில்  அஜித் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இன்று செய்திகள் வெளியானது.  திடீர் உடலநலக் குறைவால் பாதிக்கப்பட்ட அஜித்துக்கு  மூளைப் பகுதியில் ‘ஸ்டன்ட்’ வைக்கப்பட்டிருப்பதாகவும், அவரது உடல்நலம் குறித்து ரஜினிகாந்த விசாரித்ததாகவும்  சில தகவல்கள் சமூக வலைதலங்களில் வெளியாகின. இது அஜித்தின்  ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் அஜித்துக்கு நெருங்கிய வட்டாரங்கள் இந்த செய்தியை மறுத்தன. அஜித்தின் உடல்நிலையில் எந்த பாதிப்பும் இல்லை என்றும், வழக்கமான உடல்நிலை பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.  மேலும் வெளிநாட்டில் படப்பிடிப்புக்காக செல்லும்போது முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது அங்கு மருத்துவ காப்பீடு பெற உதவும் என்பதால் அவர் இந்த பரிசோதனைக்காக சென்றதாகவும் அஜித்துக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, “வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் அஜித்குமார் மருத்துவமனை சென்றுள்ளார். விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக அஜித்குமார் அஜர்பைஜான் செல்ல உள்ளார். அஜர்பைஜானில் வரும் 15-ம் தேதி நடைபெறும் படப்பிடிப்பில் அஜித் கலந்துகொள்வார்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...