No menu items!

விஜய் ‘லியோ’ – காஷ்மீரில் சிக்கல்!

விஜய் ‘லியோ’ – காஷ்மீரில் சிக்கல்!

’லியோ’ படத்தின் முதல் ஷெட்யூலை கொடைக்கானலில் எடுக்க திட்டமிட்டு இருந்தார் லோகேஷ் கனகராஜ்.

விஜயின் காட்சிகள் இல்லாமல் மிஷ்கின் நடிக்கும் காட்சிகளை கொடைக்கானல் காட்டுப் பகுதிகளில் எடுக்க ‘லியோ’ படக்குழு கிளம்பியது. கொடைக்கானலுக்குப் போனதும்தான் அவர்களுக்கு செம ஷாக்.

காட்டுப்பகுதிகளில் ஷூட் செய்ய வனத்துறையினர் ‘லியோ’ படக்குழுவை அனுமதிக்கவில்லையாம். எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் ஷூட் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் சென்னைக்கு திரும்பி வந்துவிட்டார்கள்.

அதன் பிறகே காஷ்மீரில் ஷூட் செய்ய ’லியோ’ படக்குழு சென்றது. இப்பொழுது காஷ்மீரிலும் எதிர்பாராத பிரச்சினை என்கிறார்கள்.

கடும் குளிர் இருப்பதால், குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல் கேமரா சீக்கிரமே வேலை செய்யாமல் முடங்கி விடுகிறதாம். சில மணி நேரம் மட்டும் ஷூட் செய்ய முடிகிறதாம். இதனால் திட்டமிட்டப்படி ஷூட் செய்வதில் சிக்கல் வரவே இந்தக் காட்சிகளை பின்னர் சீசன் மாறிய பிறகு எடுக்கலாமா என்று தீவிர யோசனை நடக்கிறதாம்.


மீண்டும் காதல் கிசுகிசுவில் சிம்பு!

சிம்பு மீண்டும் காதலில் விழுந்துவிட்டார் என்ற கிசுகிசுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் பரபரப்பு.

முதலில் நயன்தாரா. அடுத்து ஹன்சிகா மோத்வானி. இப்படி இரு நடிகைகளுடன் நெருக்கமாக இணைத்து பேசப்பட்ட சிம்பு, அடுத்து எந்த வம்பிலும் சிக்காமல் இருந்துவந்தார்.

இடையில் அவர் நடித்தப் படமும் பெரிதாக ஒடவில்லை. அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் இவர் நடித்த ‘ஈஸ்வரன்’ படம் ஓரளவுக்கு கைக்கொடுத்தது. அந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த நிதி அகர்வால்தான் இப்பொழுது ‘பத்து தல’ படத்திலும் சிம்புவுக்கு ஜோடி.

’ஈஸ்வரன்’ படத்தின் ஷூட்டிங்கின் போதே இவர்கள் இருவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது. இப்பொழுது ‘பத்து தல’ படத்தின் ஷூட்டிங்கின் போது நட்பு காதலாக மாறியிருக்கிறது என்று கிசுகிசுக்கிறார்கள்.

இந்தக் காதல் கிசுகிசு உண்மையா அல்லது ‘பத்து தல’ படத்தின் பப்ளிசிட்டிக்காக இப்படி காதல் கிசுகிசுவைக் கிளப்பி விட்டிருக்கிறார்களா என்பது வெகு சீக்கிரமே வெளிச்சத்திற்கு வந்துவிடும்.


அரண்மனை 4-ல் விஜய்சேதுபதி விலகலா?

சுந்தர்.சி. இயக்கிய ‘அரண்மனை’ செம ஹிட் அடிக்க, அந்த ஹாரர் காமெடி கான்செப்ட்டை வைத்து அடுத்தடுத்து இரண்டு சீக்வல்களை இயக்கினார். அந்த இரண்டுப் படங்களும் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றன.

இதனால் ‘அரண்மனை –4-க்கும் சுந்தர்.சி. தயாராகிவிட்டார்.

‘அரண்மனை -4’ல் விஜய் சேதுபதி நடிப்பதாக முதலில் முடிவானது. விஜய் சேதுபதியை மனதில் வைத்து சுந்தர்.சி. கதையை எழுதும் வேலைகளை ஏறக்குறைய முடிக்கும் தருவாயில்தான் எதிர்பாராத ஒரு திருப்பம்.

விஜய் சேதுபதி தற்போது ‘மெரி கிறிஸ்மஸ்’, ‘ஜவான்’ என ஹிந்திப் படங்களில் நடித்துவருவதால், அந்தப்படங்களுக்கு அவ்வப்போது கால்ஷீட் தேவைப்படுகிறதாம். ‘மெரி கிறிஸ்மஸ்’ ஷூட்டிங் திட்டமிட்ட நாட்களில் இல்லாமல் தள்ளி தள்ளி ஷூட் நடக்கிறதாம். இதனால் விஜய் சேதுபதி கால்ஷீட் கொடுப்பதில் சிக்கல் இருக்கிறதாம்.

’அரண்மனை -4’ ஷூட்டிங் தொடங்கும் நேரம் நெருங்கி வருவதால் விஜய் சேதுபதி இப்படத்தில் இணைய வாய்ப்பில்லையாம். எனவே விஜய் சேதுபதி இப்படத்திலிருந்து விலகிவிட்டார் என்கிறார்கள்.

இதனால் மீண்டும் சுந்தர்.சி ‘அரண்மனை -4’ல் கதாநாயகனாக நடித்து, இயக்க் இருக்கிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...