No menu items!

விஜய் – கீர்த்தி சுரேஷ் – உண்மையா? வதந்தியா?

விஜய் – கீர்த்தி சுரேஷ் – உண்மையா? வதந்தியா?

வாரிசு தியேட்டர்களில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் விஜயையை பற்றி ஒரு செய்தியும் சோஷியல் மீடியாவில் இரண்டு நாட்களாய் சுற்றிக் கொண்டிருக்கிறது.

விஜய் – கீர்த்தி சுரேஷ் நெருங்கிய நட்பால் அவரது வீட்டில் குழப்பம், விஜய்யின் மனைவி சங்கீதா தனியாக சென்று விட்டார் என்பதுதான் அந்த செய்தி.

சில காலமாகவே இந்த கிசுகிசு தமிழ் சினிமாவை சுற்றி வந்துக் கொண்டிருந்தது. இப்போது மீண்டும் இந்த செய்தி சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாக காரணம் ஒரு போட்டோ.

அந்த போட்டோவில் விஜய் தரையில் உட்கார்ந்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் சோஃபாவில் உட்கார்ந்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ்ஷின் கால் விரல்கள் விஜய்யின் கால்களை மிதித்துக் கொண்டிருக்கிறது.

இந்தப் புகைப்படத்தின் உண்மைத் தன்மை குறித்து யாருக்கும் தெரியவில்லை. ஆனால் சோஷியல் மீடியாவில் வலம் வந்துக் கொண்டிருக்கிறது.

விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார்.

பைரவா, சர்கார்.

இதில் பைரவா வெற்றிப் படம் இல்லை.

பொதுவாய் சினிமாவில் வெற்றிப் படங்களில் இணையும் ஜோடிதான் அடுத்த

 அடுத்தப் படங்களில் ரீபீட் செய்யப்படும்.

விஜய் – சிம்ரன்

விஜய் -த்ரிஷா

விஜய் – அசின்

விஜய் – ஜோதிகா

இப்படி ஒரு பட்டியலை சொல்லலாம்.

ஆனால் பைரவா வெற்றிப் படம் இல்லாத போதும் விஜய் ஜோடியாக சர்கார் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்தார்.

அப்போதே கிசுகிசுக்கள் திரையுலகில் கிளம்பின. ஆனால் அந்த சமயத்தில் கீர்த்தி சுரேஷ் நிறைய படங்களில் நடித்துக் கொண்டிந்தார். தெலுங்கில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை சொல்லிய மகாநாதி, விகரமுடன் சாமி ஸ்கொயர், சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம்..இப்படி பல படங்கள். மார்கெட் உள்ள நடிகை என்பதால் சர்காரில் விஜயுடன் ஜோடி சேர்கிறார் என்று அப்போது கூறப்பட்டது.

கீர்த்தி சுரேஷ்க்கு இப்போது 30 வயதாகிறது. மலையாளத்தில் அறிமுகமானாலும் சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த ரஜினிமுருகன், ரெமோ போன்ற படங்கள் சூப்பர் ஹிட் ஆக தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்தார். அந்த வெற்றிகளின் அடிப்படையில்தான் அவருக்கு விஜய்யுடன் பைரவா படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

சர்காருக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ்க்கு பெரிய அளவில் வெற்றிப் படங்கள் அமையவில்லை. தன்னுடைய ஹோம்லி லுக்தான் பட வாய்ப்புகளுக்கு தடையாக இருக்கிறது என்று எண்ணிய கீர்த்தி சுரேஷ் தனது உடைகளை மாற்றி கவர்ச்சிக்கு மாறினார். ஆனாலும் வாய்ப்புகள் அதிக அளவில் வரவில்லை.

பொதுவாய் சினிமாவில் ஹீரோயின்களுக்கு திடீரென்று வாய்ப்புகள் குறைந்தால் மூன்று காரணங்கள் இருக்கும்.

அவர் நடித்த படங்கள் ஓடாமலிருப்பது.

சம்பளம் அதிகமாய் கேட்பது.

எதாவது ஒரு ஹீரோவுடன் நெருங்கிய நட்பில் இருப்பது.

கீர்த்தி சுரேஷ் அதிக சம்பளம் கேட்கிறார் என்பதுதான் அப்போது கீர்த்தி சுரேஷ் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டாய் இருந்தது. அதனால்தான் அவருக்கு பட வாய்ப்புகள் குறைகிறது என்று கூறப்பட்டது.

தொடர்ந்து பல வருடங்களாக தமிழ்நாட்டின் மாஸ் ஹீரோவாக வசூல் ஸ்டாராக இருக்கும் விஜய் இதுவரை எந்த கிசுகிசுவிலும் சிக்கியதில்லை.

அப்பா- பிள்ளை பிரச்சினை, அரசியல் ஆர்வம் இவை குறித்துதான் அவரைச் சுற்றி சர்ச்சைகள் இருக்கும்.

பல ஹீரோக்கள் மீது இருக்கும் ’ஹீரோயின்களுடன் நெருக்கம்’ என்ற கிசுகிசு விஜய் மீது வெளியுலகில் பேசப்பட்டது இல்லை.  

ஆனால் இந்த முறை பேசப்படுகிறது.

இதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.

கீர்த்தி சுரேஷுடன் தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்தது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் கீர்த்தியுடன் உற்சாகமாய் பழகி நடித்தது

விஜய் வசிக்கும் ஈசிஆர் பகுதியிலேயே கீர்த்தி சுரேஷும் வசிப்பது

சமீபத்திய வாரிசு விழாவுக்கு விஜய் மனைவி சங்கீதா வராதது

விஜய் மனைவி சங்கீதா லண்டனிலேயே இருக்கிறார் என்று வரும் செய்தி….

இப்போது விஜய் காலை கீர்த்தி சுரேஷ் மிதித்துக் கொண்டிருக்கும் புகைப்படம்.

இந்த கிசுகிசுக்களை விஜய் தரப்பினர் முழுமையாக மறுக்கிறார்கள்.

எல்லா விழாக்களுக்குமே விஜய் மனைவி சங்கீதா வந்ததில்லை. சில விழாக்களுக்கு மட்டுமே வந்திருக்கிறார். பிள்ளைகள் படிப்பு விஷயமாக லண்டன் சென்றிருக்கிறார் என்கிறார்கள்.

வாரிசு – துணிவு சண்டையில் விஜய்யை பிடிக்காதவர்கள் கிராஃபிக்ஸ் செய்யப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

விஜய் இப்போது அடுத்ததடுத்த முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைப்பது, தனது திரைப்படங்களை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்வது என பல முயற்சிகளில் இருக்கும்போது அவரை தடுக்க வேண்டுமென்பதற்காக சிலர் சூழ்ச்சி செய்து இது போன்ற தவறான செய்திகளை சோஷியல் மீடியாவில் கசிய விடுகிறார்கள் என்கின்றனர் விஜய் தரப்பினர்.

சரி, இந்த கிசுகிசுக்களை விஜய் பார்த்தாரா? அவர் என்ன நினைக்கிறார் என்று விஜய்க்கு நெருக்கமானவர்களிடம் கேட்டோம்.

விஜய் உற்சாகமாய் இருக்கிறார். வாரிசு கலெக்‌ஷனினால் அவர் ஹேப்பி. ஹைதராபாத் சென்று அங்கு சக்சஸ் பார்ட்டீயில் கலந்துக் கொண்டிருக்கிறார். இந்தக் கிசுகிசுக்களை அவர் பொருட்படுத்தவேயில்லை. எப்போதும் போல் ஜாலியாக இருக்கிறார் என்று பதிலளித்தார்கள்.

கீர்த்தி சுரேஷ் தரப்பிலும் எந்த ரியாக்‌ஷனும் இல்லை.

எத்தனையோ தடைகளை கடந்துதான் விஜய் இன்று இந்த இடத்துக்கு வந்திருக்கிறார்.

இந்த கிசுகிசுக்களையும் அவர் தாண்டுவார் என்ற நம்பிக்கை அவரது ரசிகர்களிடம் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...