No menu items!

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா லிவ்விங் டுகெதர்?

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா லிவ்விங் டுகெதர்?

விஜய் தேவரகொண்டா – சமந்தா இருவரும் நடித்திருக்கும் தமிழ், தெலுங்குப் படமான ’குஷி’, தமிழ்நாட்டில் ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. வெளியான நாள் முதல் இதுவரையில் ஏறக்குறைய 7 கோடி வசூலைக் கடந்திருக்கிறது. 2023-ல் ஒரு தெலுங்குப் படம் தமிழ் நாட்டில் செய்த அதிக வசூல் என்ற பெருமையை குஷி தட்டிச்சென்றிருக்கிறது.

விஜய் தேவரகொண்டா நடித்த ‘அர்ஜூன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ ஆகிய இருப்படங்களுக்கும் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு இருந்தது. இப்போது கூடவே சமந்தாவும் இருப்பதால் ‘குஷி’ படத்திற்கு குறிப்பிடுமளவிற்கு ஒபனிங் இருந்தது.

இந்தப்படத்தைப் பார்க்க சென்ற சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா, விஜய் தேவரகொண்டா – சமந்தா இடையிலான நெருக்கமான காட்சிகளைப் பார்த்துவிட்டு, திரைப்படம் பார்க்காமல் பாதியிலேயே கிளம்பி சென்றதாகவும் கூறப்படுகிறது.

அந்தளவிற்கு விஜய் தேவரகொண்டாவுக்கும், சமந்தாவுக்கும் இடையில் கெமிஸ்ட்ரி இருப்பதாகவும், இதனால் இவர்கள் இருவரும் நெருக்கமாகி விட்டார்கள் என்றும் ஒரு புது கிசுகிசுவைக் கிளப்பிவிட்டார்கள்.

ஆனால் அது உண்மையில்லை. விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தானாவும்தான் இப்பொழுதும் நெருக்கமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் தங்களது உறவைப் பற்றி கேட்டால் மழுப்பலாக பதிலளிக்கிறார்கள் என்று சினிமா ஊடகங்களில் இன்றளவும் பேசப்படுகிறது.

பல விதமான யூகங்களை கிளப்பிவிட்டு கொண்டு தங்களது வேலைகளைப் பார்த்து கொண்டிருக்கும் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தானாவும் இப்போது இரு புகைப்படங்களால் வைரலாகி கொண்டிருக்கிறார்கள்.

விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் லிவ்விங் டு கெதராக இருக்கிறார்கள். அதற்கு உதாரணம் அவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்ட இரு புகைப்படங்கள்தான். ராஷ்மிகா ஒரு புகைப்படத்தில், ஒரு வீட்டின் மொட்டை மாடியில் நின்றப்படி இருக்கிறார். விஜய் தேவரகொண்டா வெளியிட்ட புகைப்படமொன்றில் அவர், மொட்டை மாடியில் புல் தரை மீது அமர்ந்திருக்கிறார்.

இந்த இரு புகைப்படங்களும் ஒரே வீட்டின் மொட்டை மாடியில் எடுக்கப்பட்டவை. அது ஹைதராபாத்தில் இருக்கும் விஜய் தேவரகொண்டா அப்பார்ட்மெண்ட்டின் மொட்டை மாடி.

ராஷ்மிகா தனது உதவியாளர் திருமணத்திற்கு சென்ற போது அணிந்திருந்த அதே புடவை. அதனால் இந்தப் புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்பட்டது என்று ஸ்காட்லாந்து யார்ட் போலீஸ் போல் புகைப்பட விசாரணையில் இறங்கி இருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

சமீபத்தில்தான் விஜய் தேவரகொண்டா, திருமணம் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று சொல்லியிருந்தார்.

இதனால் எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால், சரியாக வருகிறது என்று இணையத்தில் ரசிகர்கள் கமெண்ட் அடித்துவருகிறார்கள்.


தடுமாறும் விஜய் சேதுபதி!

கதைகளை, கதைக்கான களத்தை தேர்ந்தெடுப்பதில் கில்லாடி விஜய் சேதுபதி. இந்த கூர்மையான கணிப்பே அவரை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக முன்னிறுத்தியது.

ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குப் பிறகு, கதையை ஓரங்கட்டி விட்டு, பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார். இதனால் இவர் கதாநாயகனாக நடித்தப் படங்கள் எதுவும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால் இவர் வில்லனாக நடித்த படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. ஆனால் இதில் விஜய், கமல் என முக்கிய நட்சத்திரங்கள் இருந்தார்கள்.

மேலும் ஹிந்திப் படம், ஒடிடி-யில் நடிக்க ஆரம்பித்தார். ஹிந்திப் படம் வெளியாகாத நிலையில் ஒடிடி-யில் இவர் நடித்த வெப்சிரீஸூக்கு நல்ல பெயர் கிடைத்தது. இப்பொழுது அட்லீ இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ’ஜவான்’ படத்திலும் நடித்திருக்கிறார்.

இப்படி விஜய் சேதுபதி விட்ட இடைவெளி அவருடைய இடத்தைக் கேள்விக்குறியாகி இருக்கிறது என்கிறார்கள்.

மேலும் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிப்பாரா, அப்படி நடித்தாலும் அது எடுப்படுமா என்ற கேள்வி இப்போது தமிழ் சினிமாவில் முக்கியகேள்வியாகி இருக்கிறது.

இப்படி விஜய் சேதுபதிக்கு ஒரு தடுமாற்றம் இருக்கும் போது கூட அவர் தன்னுடைய சம்பளத்தை கணிசமாக உயர்த்தி விட்டாராம். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் வியாபார கணக்கைப் போட்டு பார்த்து கொண்டிருக்கிறார்கள் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்.


கிறங்கடிக்கும் ராய் லக்‌ஷ்மி!

ராய் லக்‌ஷ்மி, அதாவது தமிழ் சினிமாவில் ‘கற்க கசடற’ படத்தின் மூலம் அறிமுகமான அதே லக்‌ஷ்மி ராய்தான் இவர். பட வாய்ப்புகள் வந்து குவியாத காரணத்தினால் தனது பெயரை ராய் லக்‌ஷ்மி என்று மாற்றி வைத்து கொண்டார். பெயர் மாற்றிய பின்பும் கூட அவருக்கு வாய்ப்புகள் வந்தப்பாடில்லை. இதனால் சமூக ஊடகங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து பதிவிடுவதில் பரபர பிஸியாக இருக்கிறார்.

இதனால் சமூக ஊடக ப்ரியர்கள் மத்தியில் ராய் லக்‌ஷ்மி இப்பொழுதும் ஹாட் கேக் ஆக இருந்து வருகிறார்.
ஒபன் டாப்ஸ், பிகினி, பீச் உடைகளுடன் கண்களைக் கவரும் வகையில் இவர் கொடுக்கும் போஸ்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

தமிழில் இவருக்கு சொல்லிக்கொள்கிற மாதிரி படங்கள் எதுவும் பெரிய ஹிட்டாக அமையவில்லை. ஆனால் இவரை தெலுங்கு சினிமா தத்தெடுத்து கொண்டது. குறிப்பாக சிரஞ்சீவியுடன் இவர் நடித்த கைதி நம்பர் 150 இவரை தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே பிரபலமாக்கியது. அடுத்து வந்த ‘சர்தார் கப்பார் சிங்’ படமும் இவர் அழகை ரசிகர்கள் கொண்டாட வைத்தது.

பாலிவுட்டில் இவர் அறிமுகமான ‘ஜுலி 2’ படமும் கைக்கொடுக்கவில்லை. இதனால் போன வேகத்திலேயே நம்மூர் பக்கம் திரும்பிவிட்டார். அடுத்து இவர் நடித்த ‘பாய்ஸன் 2’ வெப் சிரீஸ் ஓரளவிற்கு கைக்கொடுத்தது.

’லெஜண்ட்’ படத்தில் ஒரேயொரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். ஆனாலும் சுக்ர திசை இவருக்கு இல்லாமலேயே போய்விட்டது.

இதனால் சமூக ஊடகங்களில் ஹாலிவுட் நடிகைகளின் பாணியில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு கிடைக்கும் கமெண்ட்கள், வாய்ப்புகளாக மாறும் என்ற கனவில் இருக்கிறார் ராய் லக்‌ஷ்மி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...