No menu items!

சூர்யா Vs பாலா – என்ன நடந்தது? வெளிவரும் ரகசியங்கள்

சூர்யா Vs பாலா – என்ன நடந்தது? வெளிவரும் ரகசியங்கள்

சூர்யா 41’ படப்பிடிப்பின்போது இயக்குநர் பாலாவுடன் நடிகர் சூர்யா வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், இந்த படப்பில் இருந்து பாதியில் வெளியேறியதும்தான் கோலிவுட்டின் ஹாட் டாபிக். இதை தொடர்ந்து வணங்கான் படத்தில் சூர்யா நடிக்க மாட்டார் என்று அறிக்கை கொடுத்துள்ளது 2டி நிறுவனம்.

என்ன நடந்தது?

தமிழ்சினிமாவின் முன்னனி இயக்குநர்களில் ஒருவரான பாலா, கடந்த நான்கு ஆண்டுகளாக படங்கள் இயக்காமல் இருந்தார். தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட சிக்கல்கல்கள் இதற்கு காரணமாக கூறப்பட்டது. திருமண வாழ்க்கை முறிந்து, விவாகரத்துக்குப் பிறகு பாலா மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தை தொடங்கினார். 2டி என்டர்டயின்மண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிக்க முடிவாகியிருந்தது.

18 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் என்பதால் இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. பாலா – சூர்யா கூட்டணியில் வெளியான ‘நந்தா’, ’பிதாமகன்’ பெரிய அளவில் வெற்றி பெற்றது போல் இந்தப் படமும் அதே அளவில் வெற்றியை ஈட்டும் என்ற நம்பிக்கையில் சூர்யா ரசிகர்கள் இருந்தார்கள்.

கன்னியாகுமரியில் பூஜையுடன் தொடங்கிய ‘சூர்யா 41’ படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வந்தது.இதில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்தார். முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் மமிதா.

பாலா படம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் அப்போது பதிவிட்டிருந்த சூர்யா… ‘ மீண்டும் பாலா சாரின் ‘ஆக்‌ஷன்’ குரலை 18 ஆண்டுகளுக்கு பிறகு கேட்க துவங்கியதால் பெரும் மகிழ்ச்சி. வேண்டும் உங்கள் ஆசி’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின்போது சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனால் கோபமடைந்த சூர்யா பேக்கப் சொல்லி கோபமாக வெளியேறியதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் இரு தரப்புமே அதை மறுத்தது. ஆனால் ஷூட்டிங் தொடங்கப்படவே இல்லை.

நேற்று இயக்குநர் பாலா தரப்பிலிருந்து அறிக்கை ஒன்று வெளியானது. அதில் அவர் குறிப்பிட்டிருந்தது, வணங்கான் படத்திலிருந்து நானும், சூர்யாவும் ஒருமனதோடு விலகிக்கொள்கிறோம் என்றும், கதையில் ஏற்பட்ட ஒரு சில மாற்றத்தினால் சூர்யாவுக்கு உகந்த கதையாக இருக்காது என்று கருதி அவர் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு என்றும் தெரிவித்திருந்தார்.

பாலாவிடமிருந்து அறிக்கை வந்ததுமே சூர்யா – ஜோதிகாவின் 2டி நிறுவனம் டிவிட்டர் கணக்கிலிருந்து வணங்கான் படத்திலிருந்து விலகிக்கொள்கிறோம் என்று பதிவு வந்தது.

ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சூர்யாவிடமிருந்து எந்தக் கருத்தும் வராமல் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து பதில் வந்திருப்பதைக் கவனிக்க வேண்டும். அந்த அளவு சூர்யா அப்செட்டாகியிருக்கிறார் என்று இதிலிருந்து தெரிகிறது.

உண்மையில் நடந்தது என்ன?

வணங்கான் படப்பிடிப்பின்போது நடிகர் சூர்யாவை இயக்குநர் பாலா ஒருமையிலேயே பேசியிருக்கிறார்.

சூர்யா வாடா சூர்யா ஓடுறா சூர்யா நடிடா என்று பாலா பேசியது சூர்யாவுக்கு சங்கடத்தைக் கொடுத்திருக்கிறது. ஒரு காட்சிக்காக மீண்டும் மீண்டும் சூர்யாவை ஓட வைத்திருக்கிறார் இயக்குநர் பாலா. தொடர்ந்து ஓடியதால் வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. இதை அருகிலிருந்தவர்களிடம் சூர்யா சொல்லியிருக்கிறார். அவர்கள அதை பாலாவிடம் கூற, ’அவருக்கு என்ன பீரியட்ஸா?’ என்று பாலா நக்கலாய் கேட்டிருக்கிறார். இதை அருகிலிருந்து கேட்ட சூர்யாவுக்கு கோபம். உடனே படப்பிடிப்பிலிருந்து கிளம்பிவிட்டாராம். படப்பிடிப்பு நின்றுவிட்டது.

சூர்யா கதையை மாற்றச் சொன்னார், பாலா யாருக்காகவும் கதையை மாற்றுபவர் அல்ல என்று பால தரப்பில் கூறப்பட்டது.

சூர்யா – பாலா இருவருக்குமிடையே ஏற்பட்ட சிக்கல்களை தீர்க்க ஜோதிகா முயற்சித்திருக்கிறார். பாலாவிடம் பேசியிருக்கிறார். ஆனால் பாலா சரியாக பதிலளிக்கவில்லையாம்.

“இதுவரை 21 நாட்கள் எடுத்த காட்சிகள் எனக்கு திருப்தி இல்லை. அதனால் மீண்டும் அவற்றை எடுக்க வேண்டும்” என்று பாலா கூறியிருக்கிறார். இது சூர்யாவுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வணங்கான் படத்தில் நடிக்கவே வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார் என்கிறார்கள்.

சூர்யா விலகிவிட்டதால். அநேகமாக விஷால், ஆர்யா, விமல் இவர்களில் ஒருவரை முதல் கட்டமாக பாலா தரப்பு அணுகலாம் என்றும் சொல்கிறார்கள். இவர்கள் இல்லையென்றால் அடுத்த கட்டமாக ஜி.வி. பிரகாஷையே நடிக்க வைக்கலாமா என்றும் யோசிக்கிறார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...