No menu items!

பாலா படத்திலிருந்து வெளியேறிய சூர்யா

பாலா படத்திலிருந்து வெளியேறிய சூர்யா

‘சூர்யா 41’ படப்பிடிப்பின்போது இயக்குநர் பாலாவுடன் நடிகர் சூர்யா வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், இந்த படப்பில் இருந்து பாதியில் வெளியேறியதும்தான் கோலிவுட்டின் இப்போதைய ஹாட் டாபிக்.

என்ன நடந்தது?

தமிழ்சினிமாவின் முன்னனி இயக்குநர்களில் ஒருவரான பாலா, கடந்த நான்கு ஆண்டுகளாக படங்கள் இயக்காமல் இருந்தார். தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட சிக்கல்கல்கள் இதற்கு காரணமாக கூறப்பட்டது. திருமண வாழ்க்கை முறிந்து, விவாகரத்துக்குப் பிறகு பாலா மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தை தொடங்கினார். 2டி என்டர்டயின்மண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிக்க ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.

18 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் என்பதால் இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. பாலா – சூர்யா கூட்டணியில் வெளியான ‘நந்தா’, ’பிதாமகன்’ பெரிய அளவில் வெற்றி பெற்றது போல் இந்தப் படமும் அதே அளவில் வெற்றியை ஈட்டும் என்ற நம்பிக்கையில் சூர்யா ரசிகர்கள் உள்ளனர்.

கன்னியாகுமரியில் பூஜையுடன் தொடங்கிய ‘சூர்யா 41’ படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வந்தது.இதில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் மமிதா.

இந்த புதிய பயணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த சூர்யா… ‘ மீண்டும் பாலா சாரின் ‘ஆக்‌ஷன்’ குரலை 18 ஆண்டுகளுக்கு பிறகு கேட்க துவங்கியதால் பெரும் மகிழ்ச்சி. வேண்டும் உங்கள் ஆசி’ என்று குறிப்பிட்டிருந்தார்.


இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின்போது சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனால் கோபமடைந்த சூர்யா பேக்கப் சொல்லி கோபமாக வெளியேறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறனின் ’வாடிவாசல்’ படத்திலும் தற்போது சூர்யா நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கம் குறித்து சூர்யா புகழ்ந்து பேசியது பாலாவுக்குப் பிடிக்கவில்லையாம். அது வாக்குவாதமாக மாறியிருக்கிறது. முடிவில் சூர்யா வேகமாக படப்பிடிப்பு தளத்தைவிட்டு வெளியேறியிருக்கிறார். பாலாவும் அவரை சமாதானப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று படப்பிடிப்பில் இருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த செய்தியை படக் குழுவினர் மறுக்கிறார்கள். ஆனால் நடந்த சம்பவங்கள் உண்மை என்றே அருகிலிருப்பவர்கள் கூறுகிறார்கள்.

பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...