No menu items!

சூடுப் பிடிக்கும் சாய் பல்லவி மார்க்கெட்!

சூடுப் பிடிக்கும் சாய் பல்லவி மார்க்கெட்!

சமந்தாவுக்கு முன்பே திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து ஒரு இடைவெளி விட்டவர் சாய் பல்லவி. கிட்டத்தட்ட ஒரு வருடமாக புதிய படங்கள் எதிலும் சாய் பல்லவி நடிக்கவே இல்லை.

என்னைக் கவரும் வகையிலான கதைகள் வரவில்லை. வெறும் பணத்திற்காக மட்டும் நான் நடிக்க விரும்பவில்லை என்று சாய் பல்லவி கூறியிருந்தார்.

இந்நிலையில், விக்ரம் பட வெற்றிக்குப் பிறகு சுறுசுறுப்பாகி இருக்கும் கமலின் ராஜ் கமல் ஃப்லிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்தப் படத்தில் சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இதனால் சாய் பல்லவியின் கால்ஷீட்டை கேட்டு படையெடுத்திருக்கிறது இங்குள்ள புதிய இயக்குநர்கள் படை. தங்களது முதல் படத்தில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்குமென மின்னஞ்சல்களைத் தட்டிவிட்டிருக்கிறார்கள்.

ஆனால் வழக்கம் போல் சாய் பல்லவியிடமிருந்து பதில் எதுவும் உடனடியாக வரவில்லையாம்.

சிவகார்த்திகேயன் படம் மட்டுமில்லாமல், தெலுங்கிலும் படமொன்றில் கமிட்டாகி இருக்கிறார் சாய் பல்லவி. ‘லவ் ஸ்டோரி’ என்ற பெரும் ஹிட்டுக்கு பின்பு சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் மீண்டும் இணைகிறார் சாய் பல்லவி.

இந்த இரண்டுப் படங்களும் ஒருபுறம் இருக்க, நயன்தாரா, ராஷ்மிக மந்தனாவை அடுத்து சாய் பல்லவியும் பாலிவுட்டில் நுழைய இருக்கிறாராம். பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்படவிருக்கும் ராமாயணம் படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக, சீதை கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தமாகிவிட்டாராம்.

இப்படி கைவசம் தமிழ், தெலுங்கு, ஹிந்திப் படங்கள் வைத்திருக்கும் சாய் பல்லவி சம்பளத்தை இன்னும் உயர்த்தவில்லை என்பது ஆறுதலான விஷயம் என்கிறார்கள்


அட்லீயின் 3,000 கோடி வசூல்

நம்மூர் இயக்குநரான அட்லீ இயக்கத்தில் வெளியான ’ஜவான்’ பல வசூல் சாதனைகளைப் படைத்திருக்கிறது.

படம் வெளியாகி 30 நாட்கள் ஆன சூழலில் ஜவானின் வசூல் இப்போது 1.5 கோடியாக குறைந்திருக்கிறது.

இந்தியாவில் மட்டும் இப்படம் வெளியான முதல் வாரம், 389.88 கோடி வசூல் செய்தது. இரண்டாவது வாரம் 136.1 கோடி, மூன்றாவது வாரம் 55.92 கோடி, நான்காவது வாரம் 35.63 கோடி வசூல் செய்திருக்கிறது.

ஒட்டுமொத்த உலக வசூலாக இப்படம் 1,100 கோடி வரை வசூல் செய்து புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. இவ்வளவு வசூல் செய்த முதல் பாலிவுட் படம் என்ற பெருமையை ‘ஜவான்’ பெற்றிருக்கிறது.

இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், அட்லீ கலந்து கொண்டு பேசினார். ஷாரூக்கான் மற்றும் தளபதி விஜய் இவர்கள் இருவரையும் ஒரேபடத்தில் நடிக்க வைத்து ஒரு 3,000 கோடி வசூல் செய்யுமளவிற்கு படமொன்றை இயக்க விரும்புவதாக கூறியிருக்கிறார்.

ஷாரூக்கான், விஜய் இருவரும் ஒரே படத்தில் தோன்றினால், அதன் வியாபாரம் வேறு மாதிரியாக இருக்கும். இவர்கள் இருவரின் தொடர் வெற்றிகள் மார்க்கெட்டில் வசூலை அள்ள உதவும் என அட்லீ கணக்குப்போட்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...