No menu items!

ராஷ்மிகாவின் அடாவடி.

ராஷ்மிகாவின் அடாவடி.

’நேஷனல் க்ரஷ்’ ஆக கொண்டாடப்பட்ட ராஷ்மிகாவுக்கு அடுத்தடுத்து ஃப்ளாப். ஆனாலும் ராஷ்மிகா கொஞ்சம் கூட அலறவில்லை. போகிற போக்கில் வெளியான ’அனிமல்’ படம் கன்னாபின்னாவென சர்ச்சைகளை கிளப்பினாலும், வசூலையும் அள்ளியிருக்கிறது.

தொடர் தோல்விகளுக்கு நடுவே, ராஷ்மிகா ஒப்புக்கொண்ட படம் ‘ரெயின்போ’. இது ராஷ்மிகாவை மையமாக கொண்ட கதை. நயன்தாரா மாதிரி நாமும் நடிக்கவேண்டுமென ராஷ்மிகா விரும்பி ஒப்புக்கொண்ட படம்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகும் இந்தப் படத்தை சாந்தரூபன் இயக்குகிறார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் பரபரவென ஆரம்பமானது. இரண்டு ஷெட்யூல்கள் முடிந்ததும் ஒரு ப்ரேக் விடப்பட்டது. அந்த ப்ரேக் அப்படியே இன்று வரை தொடர்கிறது. மீண்டும் ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை என்கிறார்கள்.

ஏன் இந்த தடை என்று விசாரித்தால், தன்னுடைய முதல் ஷெட்யூல் முடிந்ததுமே, ராஷ்மிகா சம்பளத்தை உயர்த்தி, கூடுதல் சம்பளம் கேட்டாராம். ராஷ்மிகா முகம் இன்று இந்திய முழுவதும் ஓரளவிற்கு பரீட்ச்சயமான முகம் என்பதால் தயாரிப்பு நிறுவனமும், அவரது சம்பளத்தை உயர்த்தி கொடுக்க ஒப்புக்கொண்டதாம்.

சரி சம்பள பிரச்சினைதான் முடிந்துவிட்டதே. ஷூட்டிங் கிளம்பலாம் என இயக்குநர் யோசித்த போது, ராஷ்மிகா தரப்பிலிருந்து ஒரு போன் கால். கதையில் கொஞ்சம் மாற்றங்கள் செய்ய வேண்டும். தன்னுடைய கதாபாத்திரத்திற்கு கொஞ்சம் முக்கியத்தும் கூடுதல் வேண்டும். அதற்கேற்ற மாற்றங்களையும் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டதாம்.

சம்பளம் பேசி முடிவாகி, கதையைக் கேட்டு ஒகே சொன்ன பிறகு இப்படி ஒவ்வொன்றாக மாற்றிக்கொண்டே இருந்தால் என்ன செய்வது என தயாரிப்பு தரப்பு தளர்ந்துப் போயிருக்கிறதாம்.


முதல்ல முகத்தைக் கழுவு – மணி ரத்னம்

1992-ல் ‘ரோஜா’ அடுத்து 1995-ல் ‘பம்பாய்’ இந்த இரண்டு படங்களால் மணி ரத்னத்திற்கு பாலிவுட்டில் பெரும் மரியாதை. மணி ரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு என்றால், வேறெந்த பட வாய்ப்புகளையும் கூட உதறிவிட்டு ஓடி வருவார்கள். அது ஒரு காலம்.

அப்பேர்பட்ட மணி ரத்னம் 1998-ல் ஷாரூக்கானை வைத்து ஒரு படமெடுத்தார். அந்தப் படம்தான் ‘தில் சே’.

அப்போது ‘லிரில்’ சோப்பு விளம்பரத்தில் அருவியில் குளித்த மாடலான ப்ரீத்தி ஸிந்தாவை ஷாரூக்கானுடன் நடிக்க வைத்தார் மணி ரத்னம்.

இப்பட ஷூட்டிங்கின் முதல் நாள் டூஃபா மாதிரி வெள்ளை நிறத்தில் இருக்கும் ப்ரீத்தி ஸிந்தா ஃபுல் மேக்கப்பில் வந்திருந்தார். இவரைப் பார்த்த மணி ரத்னம், இன்னிக்கு மேக்கப் ப்ரீ என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

மணி ரத்னம், அடுத்து ஷாரூக்கான் இப்படி இரு பெரும் புள்ளிகளுடன் இணைந்து பணியாற்றுவதால் கொஞ்சம் டென்ஷனில் இருந்தார் ப்ரீத்தி ஸிந்தா. மீண்டும் ப்ரீத்தியைப் பார்த்த மணி ரத்னம், புன்னகைத்தபடியே, பொறுமையாக ‘முகத்தைக் கழுவிட்டு வாங்க’ என்று சொல்ல, ‘சார் முகம் கழுவினால் மேக்கப் எல்லாம் போயிடும்’னு ப்ரீத்தி ஸிந்தா சிரித்திருக்கிறார்.

‘அதுதான் எனக்கு வேணும். போங்க போய் முகத்தைக் கழுவிட்டு வாங்கன்னு’ மணி ரத்னம் சொல்லிட்டார்.
முதலில் இதை ஜோக் என்று நினைத்த ப்ரீத்தி, அப்புறம்தான் சீரியஸாக போய் முகத்தைக் கழுவிவிட்டு கேமரா முன் நின்று இருக்கிறார். ’நல்லவேளை கேமராமேன் சந்தோஷ் சிவன். என்னை அருமையாக காட்டியிருப்பார்’ என்று சிரிக்கிறார் ப்ரீத்தி ஸிந்தா.

இந்த சம்பவத்தை ப்ரீத்தி ஸிந்தா இப்போது பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...