No menu items!

திருமணமா…NO! – த்ரிஷா!

திருமணமா…NO! – த்ரிஷா!

த்ரிஷா தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து இருபது வருடங்களாகிவிட்டன. ஆனால் இன்றும் அவருக்கு மவுசு குறையவில்லை. தொடர்ந்து ஹீரோயினாகவே நடித்து வருகிறார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த காரணத்தினால், தனது திருமணத்தை தள்ளிப்போட்ட த்ரிஷா, அவரது அம்மா உமா கிருஷ்ணனின் வற்புறுத்தலால்தான் காதலரும் தொழிலதிபருமான வருண் மணியனை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார்.

இதனால்தான் த்ரிஷா – வருண் மணியன் இவர்கள் இருவருக்கிடையேயான உறவு, நிச்சயத்தார்த்தம் வரை நீண்டது. ஆனால் அந்த நிச்சயத்தார்த்தை இருவரும் ரத்து செய்துவிட்டனர்.

இதற்கு காரணம் வருண் மணியனும், நடிகை பிந்து மாதவியும் டேட்டிங் போனதுதான் என்ற பேச்சு கிளம்பியதுதான். ஆனால் பிந்து மாதவி, ‘த்ரிஷா-வருண் இருவரும் சேர்ந்திருந்த போது நான் வருணுடன் டேட்டிங் போகவில்லை. அவர்கள் பிரிந்த பிறகே நானும் வருணும் டேட்டிங் போனோம்’ என்று சொன்னாலும் அது எடுப்படவில்லை.

இந்த நிச்சயத்தார்த்த முறிவுக்குப் பிறகு தொடர்ந்து படங்களில் நடித்த த்ரிஷாவுக்கு வாய்ப்புகள் அதிகம் வரவில்லை. இதனால் த்ரிஷா அதிக வெளியே வரவும் இல்லை. மீடியாவில் தலைக்காட்டவும் இல்லை. ஒரு ஹிட்டாவது கொடுத்தப்பிறகே மீடியா வெளிச்சத்திற்குள் வருவேன் என்ற பிடிவாதத்துடன் இருந்துவிட்டார்.

அவர் எதிர்பார்த்தைப் போலவே ‘பொன்னியின் செல்வன்’ த்ரிஷாவுக்கு மீண்டும் ரீஎண்ட்ரியை கொடுத்திருக்கிறது.

ஹிட் கொடுத்ததால் இப்பொழுதாவது திருமணத்தை செய்து கொள் என அம்மா வற்புறுத்தி வருகிறாராம். ஆனால் த்ரிஷாவோ திருமணமே வேண்டாம். இப்படியே இருந்துவிட்டால் எந்தவித பிரச்சினையும் இல்லை. சுதந்திரமாக இருக்கலாம் என்கிறாராம். அப்படியே திருமணம் செய்தால், சினிமாவிலிருந்து யாரையும் மணக்கப் போவதில்லை என்றும் கூறிவிட்டாராம்.

இதனால் த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் ரொம்பவே வருத்தத்தில் இருக்கிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...