No menu items!

லியோ- பணத்தை இறக்கும் விஜய்!

லியோ- பணத்தை இறக்கும் விஜய்!

இன்றைய நிலவரப்படி, ஒரு திரைப்படத்திற்கான உச்சக்கட்ட ப்ரமோஷன் எப்படி இருக்குமென்று யாராவது கேட்டால் இப்படி இருக்கும் என்று விஜய் நடிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ பட ப்ரமோஷனை கைக்காட்டலாம்.

அந்தளவிற்கு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று அப்டேட்களை அள்ளி விட்டுக்கொண்டிருக்கிறது ‘லியோ’ படக்குழு. இதன் பலன் இப்படத்தின் வியாபாரத்தில் நன்றாகவே பிரதிபலிக்க ஆரம்பித்திருக்கிறது.

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி என்றதுமே, படம் ஷூட்டிங் துவங்குவதற்கு முன்பாகவே வியாபாரத்தில் நன்றாகவே கல்லா கட்டியிருக்கிறது. ஒடிடி உரிமை, டிஜிட்டல் உரிமை, ஆடியோ உரிமை, ஒவர்சீஸ் உரிமை என எல்லாவற்றிலும் கோடி கோடியாய் கொட்டிக்கொண்டிருக்கிறது.

இப்படி வியாபாரத்தில் பெரும் தொகை புரளுவதை விஜய் தனது கடந்த படங்களிலேயே நன்றாக புரிந்து கொண்டார். இதன் விளைவாகவே லியோ தயாரிப்பில் விஜய் தனது தரப்பிலிருந்தும் பணத்தை இறக்கியிருக்கிறார் என்று பேச்சு அடிப்படுகிறது.

அதாவது படத்தின் தயாரிப்பாளராக லலித் இருந்தாலும், விஜயும் தனது பங்கிற்கு ஃபைனான்ஸ் செய்திருக்கிறார் என்கிறார்கள். இதன்படி விஜயின் சம்பளமாக 125 கோடியை விஜய்க்கு கொடுக்கவேண்டிய அவசியமில்லை. பணம் போடுபவருக்கு எதற்கு சம்பளம்? லோகேஷ் கனகராஜூக்கு 15 கோடி சம்பளமும், இதர நடிகர்களுக்கான சம்பளமும், ஷூட்டிங் செலவு மட்டும்தான்.

தன்னுடைய் உழைப்பையும், இமேஜையும், மார்க்கெட் வேல்யூவையும் வைத்து யாரோ சம்பாதித்துவிட்டு போவதற்கு, நாமே களத்தில் இறங்கினால் என்ன என விஜய் நினைத்ததன் வெளிப்பாடே இப்படி நிழல் தயாரிப்பாளராக விஜய் களமிறங்க காரணம் என்கிறார்கள்.


இணையத்தை அதிரவிட்ட ’புஷ்பா 2’

ஒரே படம்தான். இன்று அல்லு அர்ஜூனை பான் – இந்தியா நடிகராக்கி இருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களில் அல்லு அர்ஜூனுக்கு புஷ்பா தவிர வேறெந்த படமும் வெளியாகவே இல்லை. ஆனாலும் மனிதன் இன்னும் கூகுளில் அதிகம் தேடப்படும் நடிகர்களில் ஒருவராக ரவுசு காட்டி வருகிறார்.
’புஷ்பா 2’ படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டாலும், அப்படம் குறித்த எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

ரொம்பவே ஆறப்போட்டால் சூடு குறைந்துவிடுமென்பதை புரிந்து கொண்ட அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குநர் சுகுமார், ’புஷ்பா 2’ முதல் பார்வை டிஜிட்டல் சுவரொட்டியை வெளியிட்டார்கள்.

புஷ்பாவில் இருந்த அதே உடல்மொழியில் அல்லு அர்ஜூன், சேலையில் ஒரு அம்மனைப் போலவே இருக்கும் ஒரு படத்தை வெளியிட்டது ’புஷ்பா 2’ படக்குழு/.

சட்டென்று இணையம் பற்றிக்கொண்டு விட்டது. சமூக ஊடகங்களில் அல்லு அர்ஜூனின் அந்த மிரட்டல் தோற்றம்தான் இப்பொழுது வைரல்.

திருப்பதி பகுதியில் நடக்கும் உள்ளூர் திருவிழாவில் பாதிப் பெண்ணைப் போலவே உடையணிந்து கொண்டாடுவது வழக்கம். அந்த சமாச்சாரத்தை வைத்து இப்பொழுது ஒரு டிஜிட்டல் போஸ்டரை தயார் பண்ணிவிட்டார்கள்.

இப்பொழுது ட்விட்டர், இன்ஸ்டாக்ராம், ஃபேஸ்புக் என எல்லா தளங்களிலும் ’புஷ்பா 2’ போஸ்டர் ரசிகர்களால் அதிக பகிரப்பட்டு வருகிறது. ட்விட்டரில் மட்டும் 2,07,000 லைக்குகள், இன்ஸ்டாக்ராமில் 50 லட்சம் லைக்குகள், ஃபேஸ்புக்கில் 8 லட்சத்து 50 ஆயிரம் லைக்குகள் என புஷ்பாவின் ஃபயர் சமூக ஊடகங்களில் பற்றிக்கொண்டு எரிகிறது.

இப்படி லைக்குகளை எல்லா சமூக ஊடகத் தளங்களிலும் அள்ளிக்கொண்டிருப்பது ஒரு புது சாதனை என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...