No menu items!

நயனுக்கு எட்டுக் கோடி

நயனுக்கு எட்டுக் கோடி

திருமணத்துக்குப் பின் கணவருடன் ஹனிமூன் கொண்டாடிவிட்டு திரும்பி விட்டார் நயன்தாரா. வடக்கில் ஆலியா பட் திருமணம் முடிந்து ஷார்ட் ஹனிமூனை முடித்துக் கொண்டு நடிப்புக்கு வேகமாக திரும்பியதைப் போல் நயனும் படப்பிடிப்பு வர துவங்கிவிட்டார்.

ஷாருக்கானுடன் நடிக்கும் ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டிருக்கிறார். அவர் மும்பையில் ஷூட்டிங் ஸ்பாட் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. இந்தப் படத்துக்கு இதுவரை வாங்காத சம்பளமான எட்டு கோடி ரூபாயை பெற்றிருக்கிறார் என்கிறது பாலிவுட் வட்டாரம். ஆனால் பாலிவுட் நட்சத்திரங்களுடன் ஒப்பிட்டால் இந்த சம்பளம் குறைவுதான். அங்கே சம்பளத்தில் உச்சத்தில் இருப்பவர் தீபிகா படுகோன். அவரது அதிகபட்ச ஊதியம் 30 கோடி என்றும் குறைந்தபட்ச ஊதியம் 15 கோடி என்றும் கூறுகிறார்கள்.

சரி, நயனைத் திருமணம் செய்துள்ள விக்னேஷ் சிவன் என்ன செய்கிறார்?

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் ஜூலையில் சென்னையில் நடக்க உள்ளது. அதன் துவக்க விழாவை பிரமாண்டமாக நடத்த தமிழ் நாடு அரசு முடிவு செய்துள்ளது. அந்த விழாவை இயக்கித் தரும் பொறுப்பு விக்னேஷ் சிவனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

ஆந்திர அரசியலில் விஷால்

ஆந்திராவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தற்போதையை முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 175 தொகுதியில் 151 தொகுதிகளை கைப்பற்றி ராட்சச பலத்துடன் ஆட்சியை கைப்பற்றியது, இவரை எதிர்த்து நின்ற சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வெறும் 23 தொகுதிகளை மட்டும் கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்த்துக்கூட கிடைக்காத நிலைமைக்கு தள்ளப்பட்டது, நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி வெறும் 1 தொகுதியை மட்டும் கைப்பற்றியது பவன் கல்யாணும் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார். ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி வெற்றிகரமாக மூன்று ஆண்டுகளை கடந்த நிலையில் வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் இணைந்து ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது.

தற்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் சந்திரபாபு நாயுடு எம்.எல்.ஏவாக இருக்கும் குப்பம் தொகுதியில் வலுவான வேட்பாளரை நிற்க வைக்க வேண்டும் என்று எண்ணிய ஜெகன் மோகன் ரெட்டி அதற்காக நடிகர் விஷாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஆந்திராவில் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.


சந்திரபாபு நாயுடுவின் குப்பம் தொகுதி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, இப்பகுதி கர்நாடக மற்றும் தமிழகத்தின் எல்லை பகுதி, கர்நாடகாவின் கே.ஜி.எஃப் லிருந்து வெறும் 22 கிலோமீட்டர் மட்டுமே அதே போல் சித்தூரிலிருந்து தமிழக எல்லையான காட்பாடி வெறும் 30 கிலோமீட்டர் மட்டுமே ஆகும்.

குப்பம் தொகுதி உட்பட சித்தூர் மாவட்டத்தில் பெரும் அளவில் தமிழகத்திலிருந்து வேலைக்கு சென்று குடியேறியவர்வர்களே தற்போது அங்கு பெரும் வாக்காளர்களாக உள்ளனர், இதனால் தமிழக மக்களுக்கு மிகவும் அறிந்த முகமான அதே வேளையில் ஆந்திர மக்களுக்கும் தெரிந்த முகமான ஒருவரை தேர்வு செய்ய ஆலோசித்த பொது சித்தூர் மாவட்டத்தில் உள்ள புங்கனூர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ வும் மாநில அமைச்சருமான பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டி பரிந்துரைத்த பெயர் நடிகர் விஷால்.

ஏற்கனவே மேற்கூறிய காரணமான தமிழ் மக்களுக்கும் ஆந்திர மக்களுக்கும் நன்கு அறிமுகமான நபர் நடிகர் விஷால், அது மட்டுமின்றி நடிகர் விஷால் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக அவரது தந்தை ஜி.கே.ரெட்டியின் கிரானைட் குவாரியில் வேலை செய்து வந்தார். நடிகர் விஷாலின் தந்தை அதிகமான கிரானைட் குவாரி நடத்திவந்தது ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அதிலும் குறிப்பாக குப்பம் தொகுதியை மையப்படுத்தியே இருந்தது, பல ஆண்டுகாலம் விஷால் அங்கே தங்கி வேலைப்பார்த்த காரணத்தால் அத்தொகுதி முழுவதும் விஷாலிற்கு தெரிந்த இடங்கள் என்பதாலும் தான், அமைச்சர் பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டி விஷாலை பரிந்துரைத்தாக கூறப்படுகிறது இதற்கிடையே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தரப்பிலிருந்து விஷாலிடம் பேசியதாகவும் விஷாலின் பதிலிற்காக காத்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

ஓய்வு பெறுகிறாரா நாசர்?

இல்லை என்கிறார் நாசர்.

சமீபத்தில் வொட்ஸப் பல்கலைக்கழகத்தில் நடிகர் நாசர் நடிப்பிலிருந்து ஓய்வுப் பெறுகிறார். அவருக்கு உடல்நிலை ஒத்துழைக்கப் போகிறார். திரைப்படங்களில் இனி அவரை பார்க்க இயலாது என்ற தகவல் தீவிரமாக பரப்பப்பட்டது.
இந்தச் செய்திகளை மறுக்கிறார் நாசர். அப்படியெல்லாம் இல்லை. நடிப்பையும் என்னையும் பிரிக்க முடியாது என்று அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...