No menu items!

தனுஷ் – ஐஸ்வர்யா இணைகிறார்களா??

தனுஷ் – ஐஸ்வர்யா இணைகிறார்களா??

தனுஷ், ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

18 வருட இல்லற வாழ்க்கை நன்றாகதான் போய் கொண்டிருந்தது. ஆனால் எதிர்பாராத வகையில் 2022 ஜனவரியில் இவர்கள் இருவரும் இல்லற வாழ்க்கையிலிருந்து பிரிந்து, தனித்தனியாக வாழ விரும்புவதாக தெரிவித்தனர்.

இவர்களது மூத்த மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்வில் இவர்கள் இருவரும் கலந்து கொள்ள, தனுஷும் ஐஸ்வர்யாவும் மீண்டும் இணைய இருப்பதாக யூகங்கள் கிளம்பின.

ஆனால் அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்த போது, தனுஷூம், ஐஸ்வர்யாவும் மீண்டும் இணைவதில் அதிக விருப்பம் காட்டவில்லையாம். அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் வித்தியாசங்களை சரிப்படுத்தி கொள்ளவேண்டுமானால் அவர்கள் இருவரும் தங்களுக்கு இடையில் இருக்கும் விருப்பங்களை, எதிர்பார்புகளை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். அதனால் அவர்கள் அவர்களாகவே இருக்க முடியாது.

ஆனால் யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருப்பதால், குழந்தைகள் விஷயத்தில் அவர்கள் இருவரும் பெற்றோர்களாக தங்களது கடமைகளை செய்வதில் பின்வாங்கப் போவதில்லை.

அவர்கள் இருவரும் இன்னும் முறைப்படி விவாகரத்து வாங்கிக்கொள்ளவில்லை. திருமண உறவில் இருந்து பிரிந்து கொண்டிருக்கிறார்கள். சட்ட முறைப்படி அவர்கள் பிரியவே இல்லை. அதனால் அவர்கள் இருவரும் மறுமணம் செய்து கொள்ளும் எண்ணமும் இல்லை என்கிறது அவர்களது நட்பு வட்டம்.

யாத்ரா, லிங்கா அம்மாவின் அரவணைப்பில் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் தங்களது பெற்றோர்களுடன் சேர்ந்திருப்பதை விரும்புவதாகவும் கூறப்படுகிறது.


லியோவுக்கு சோதனை மேல் சோதனை!

’லியோ’ படம் போல் இதுவரையில் வேறெந்த தமிழ்ப் படமும் பிரச்சினைகளை சந்தித்து இருக்காது போல.

தினமும் ஒரு புதுப்பிரச்சினை என்று லியோ படக்குழு அல்லோகலப்பட்டு கொண்டிருக்கிறது.

அதிகாலை 4 மணி காட்சிக்கு வாய்ப்பே இல்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துவிட்டது.

படம் வெளியாக இருக்கும் அக்டோபர் 19-ம் தேதிக்கு முன்பாக, பெரும் லாபம் பார்க்கலாம் என்று நினைத்து லியோ குழு திட்டமிட்டு இருந்த 18-ம் தேதி ப்ரீமியர் காட்சிகளை வைக்க முடியாது என்றாகிவிட்டது.

அமெரிக்காவில் ஐமேக்ஸில் திரையிட இருந்த ப்ரீமியர் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இதனால் அங்கே எதிர்பார்த்த வசூலும் பறிப்போனது.

ஹிந்தியில் மல்ட்டிப்ளெக்ஸ் லியோவை திரையிடுவதில் தயக்கம் காட்டி வருகின்றன. காரணம் லியோ வெளியானதும், சில நான்கைந்து வாரங்களிலேயே ஒடிடி-யில் திரையிட இருப்பதால்தான் இந்த தயக்கம். இதனால் ஹிந்தியில் பெரும் வசூல் ஆவது சாத்தியமில்லாத சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டது.

லியோ குழு பெரிதும் நம்பிய தெலுங்கு டப் வெளியீட்டிலும் இப்போது சின்னச்சின்ன சிக்கல்கள் என்கிறார்கள்.

தெலுங்கில் லியோ படத்தின் திரையரங்கு உரிமையை கைப்பற்றியிருக்கும் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

படம் வெளியாக இன்னும் மூன்றே நாட்கள் இருக்கும் சூழலில், இந்நிறுவனம் லியோவை மக்களிடையே கொண்டு சேர்க்கும் ப்ரமோஷன் வேலைகளில் இன்னும் மும்முரமாக இறங்கவில்லை.

அதேபோல் தெலுங்கு டப்பிங் வேலைகளில் அந்தளவிற்கு தரம் இல்லை. ஏதோ கடமைக்கு செய்தது போல் இருக்கிறது என்ற கமெண்ட்கள் அதிகமாகி இருக்கின்றன.

தமிழ்நாட்டில் பரபரப்பை கிளப்பிய ‘நான் ரெடி’ பாடலுக்கு, தெலுங்கு மார்க்கெட்டில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை.

ஆனாலும் விஜய் – லோகேஷ் கூட்டணியின் மேல் பெரும் நம்பிக்கை வைத்து களத்தில் இறங்கியிருக்கிறது லியோ படக்குழு.


நான் சிங்கிள்தான் – மிருணாள் தாகூர்

துல்கர் சல்மானுடன் ’சீதா ராமம்’ படத்தில் நடித்த மிருணாள் தாகூருக்கு அவரது நடிப்பும், அந்த கதாபாத்திரமும் பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்று கொடுத்தன.

’சீதா ராமம்’ பெரும் வெற்றியைப் பெற்ற பிறகும் கூட, ஆறேழு மாதங்களாக வேறெந்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகாமல் இருந்தார் மிருணாள் தாக்கூர்.

நல்ல கதை அமையவில்லை, அதனால் எந்தப் படத்திலும் நான் நடிக்கவில்லை என்று சொன்ன மிருணாள் தாகூர் இப்போது நானியுடன் ஒரு தெலுங்குப் பட த்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்து சூர்யாவுடனும் நடிக்க இருக்கிறாராம்.

இந்நிலையில் நானியுடன் நடித்திருக்கும் படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்து இணைய வட்டாரத்தில் சூட்டைக் கிளப்பி இருக்கிறார் மிருணாள் தாகூர்.

இவரது லிப் லாக் காட்சியைப் பார்த்து ’சீதா ராமம்’ பட ரசிகர்களுக்கு உண்டான அதிர்ச்சி ரிக்டர் ஸ்கேலில் 8-க்கும் அதிகம் இருக்கும் போல. மிருணாள் இப்படி செய்யலாமா என்று பதிவிட்டு வருகிறார்கள்.

ஆனால் இந்த பஞ்சாயத்து எதையும் கண்டுக்கொள்ளாத மிருணாள் தாகூர், ‘நான் இன்னும் சிங்கிள்தான்’ என்று வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்.

இப்படி சொல்வது எல்லாம் இளவட்ட ரசிகர்களை தன்வசம் வளைத்துப் போடுவதற்குதான். தன்னுடைய ப்ரமோஷன் வேலைகளை நன்றாகவே செய்து வருகிறார் மிருணாள் தாகூர்.

மிருணாள் தாகூருக்கு இப்போது வயது 31.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...