பழைய தில்லியில் ஒரு இடத்தில் கேங்ஸ்டர்கள் கமல் உடபட பலரையும் போலீஸ் சுற்றி வளைத்து துப்பாக்கி சூடு நடத்துகிறது. இதில் பேப்பர் போட வந்த அப்பாவி குடும்பத்தின் தலைவன் சூட்டுக் கொள்ளப்படுகிறார். அவரது மகனை கமல் எடுத்து வந்து வளர்க்கிறார். தங்கையை அந்த பதட்டத்தில் தவற விடுகிறார்கள். ஆண்டுகள் கடந்து கமல் குடும்பத்தில் ஒருவராக மாறி விடும் அந்த சிறுவன் தான் சிலம்பரசன்.
ஒரு வழக்கில் கமல் சில காலம் சிறையில் இருக்க வேண்டிய சூழல். திரும்பி வரும் போது சிலம்பரசனை கேங்ஸ்டர் கும்பல் மனதை மாற்றி கமலுக்கு அடுத்து நீதான், உன் அப்பாவை கொன்றது அவர்தான் என்று அவரை தூபம் போட்டு அவரை மாற்றி வைத்திருக்கிறது. இந்நிலையில்தான் கமல் சிறையிலிருந்து வெளியில் வருகிறார்.
குடும்பம், தன் ஆசை நாயகி திரிஷா, பிஸினஸ் என்று எல்லாவற்றையும் தனியே விட்டு தனது சகாக்களான சிம்பு, நாசர் கூட்டத்துடன் நேபாளம் செல்கிறார். அங்கு வைத்து அவரை கொலை செய்ய திட்டமிடுகிறது சிம்பு டீம். என்ன நடந்தது என்பதை குடும்ப சகிதமாக பார்க்கும்படி அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் மணிரதனம்.
கமல்ஹாசன் வித்தியாசமாக தன் உருவ அமைப்புக்கு மாறியதுடன், அபிராமியிடமும், சிம்புவிடமும் நடிக்கும் காட்சிகளில் அட்டகாசப்படுத்தியிருக்கிறார். சமையல் அறையில் அபிராமியுடன் போடான்னு சொல்லு, கடற்கரையில் அதே வசனத்தை சொல்லும் அழகும் புதிய உத்தி. அவ்வப்போது சந்தேகப்பட்டு பார்க்கும் பார்வையும், புத்த பிட்சுகளின் சண்டை செய்யும் ஸ்டைலும் கைதட்டல் பெறுகிறது. கமலுக்கு இது ஒரு வித்தியாசமான படமாகவே இருக்கிறது.
சிம்பு ராட்சஷனாகவே மாறி நடித்திருக்கிறார். அப்பாவை கொலை செய்தது கமல்தான் என்றதும் வரும் கோபம், தங்கையை பார்த்ததும் வரும் பாசம் என்று பல இடங்களில் கைதட்டல் வாங்குகிறார். சண்டைக்காட்சிகளில் சிம்புவுக்கு புதிய தெம்பு வந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. திரிஷா அழகாக வந்து இரண்டு பேரையும் காதல் வலையில் வீழ்த்தி இறந்து போகிறார். அபிராமிக்கு அதே கமல் மனைவி ரோல் அழகாக செய்திருக்கிறார். நாசர் ஜோசு ஜார்ஜ் என்று படம் முழுக்க நட்சத்திரக்கூட்டம் கதைக்கு கைக்கொடுக்கிறார்கள்.
பல படங்களில் பார்த்த இடங்களில் கேட்ட குடும்பக்கதைதான் அதற்கு கேங்ஸ்டர் வண்ணம் தீட்டி அதை தன் ஸ்டைலில் சொல்லியிருக்கிறார் மணிரத்னம். அதற்கு கமல், சிம்பு அனைவரும் ஒத்துழைத்திருக்கிறார்கள். மற்றபடி படத்தில் எந்த புதிய விஷயங்களும் இல்லாதது ஏமாற்றமே. படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருப்பது ஒளிப்பதிவு. ரவி கே. சந்திரனின் கைவண்ணத்தில் படம் பிரமாண்டமாக தெரிகிறது.
அந்த நேபாளம் லொகேசன் மிரட்டல். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் ஜிங்கிள்சாக ஒலிக்கிறது. அஞ்சுவண்ண பூவே .. எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.