No menu items!

மும்பையில் செட்டிலான சூர்யா – ஜோதிகா

மும்பையில் செட்டிலான சூர்யா – ஜோதிகா

ஜோதிகா தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே, சூர்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன பின்பு நடிக்கக்கூடாது என்ற வேண்டுகோளை ஏற்றுக்கொண்டுதான் ஜோதிகா நடிப்பை கைவிட்டார்.

ஆனால் திரைப்பட நட்சத்திரங்களுக்கு, சினிமா, ஷூட்டிங், பெயர், புகழ், வருமானம் இவற்றையெல்லாம் விட்டுவிட்டு இருக்கமுடியாது என்பார்கள். ஜோதிகா விஷயத்திலும் அதுதான் நடந்தது.

ஜோதிகா, சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் படங்கள் நடிக்க ஆரம்பித்தார். பிறகு மற்ற தயாரிப்பு நிறுவனங்களின் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

அடுத்து ஜோதிகா, மும்பையில் முதலீடு செய்ய ஆரம்பித்தார். அங்குள்ள ரியல் எஸ்டேட், இன்ஸ்சூரன்ஸ், பங்குச்சந்தை என ஜோதிகா – சூர்யா ஜோடி முதலீடுகளை செய்ய ஆரம்பித்தது.

சென்னையில் தங்களுக்கென ஒரு தனி பங்களாவை கட்டியபோதும், இந்த ஜோடி இப்பொழுது மும்பைக்கு மாறிவிட்டார்கள். அங்கே ஒரு பங்களாவை கட்டியிருக்கும் ஜோதிகா, தனது குழந்தைகளையும் மும்பையின் பிரபல பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டார்.

இப்படி மும்பைவாசியான ஜோதிகா, இப்பொழுது ஹிந்திப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஹிந்தி சினிமாவிற்குள் ரீ-எண்ட்ரீ ஆகியிருக்கிறார்.

ராஜ்குமார் ராவ் உடன் ‘ஸ்ரீ’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கும் ஜோதிகா, தற்பொது அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் இணைந்து நடிக்கும் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் வகையறா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இதனால் சூர்யா – ஜோதிகா ஜோடி மும்பைவாசிகளாக மாறிவிட்டதாகவும், இனி சென்னைக்கு தேவைப்பட்டால் வந்து போவார்கள் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.


ரஜினி, ஷாரூக்கை பின்னுக்கு தள்ளிய விஜய்!

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் என்ற அந்தஸ்தை விஜய் எட்டிப் பிடித்திருக்கிறார் என்பதுதான் லேட்டஸ்ட் கிசுகிசு.

அதாவது சம்பள விஷயத்தில் ரஜினிகாந்த்தை ஓவர்டேக் செய்திருக்கும் விஜய், பாலிவுட் பாக்ஸ் ஆபீஸ் கிங் ஷாரூக்கானையும் பின்னுக்கு தள்ளியிருக்கிறார்.

தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரித்த ‘வாரிசு’ படத்திற்காக கையில் 119 கோடி ரூபாயும், ஜிஎஸ்டி-யை தயாரிப்பாளரே கட்டும் வகையில் சம்பளம் வாங்கியதாக தெரிகிறது.

இப்போது புதிதாக கிளம்பியிருக்கும் விஜயின் அடுத்தப்படம் பற்றிய பேச்சில், அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும், இப்படத்தை ஏஜிஎஸ் தயாரிக்க இருப்பதாகவும் இணையத்தில் விதவிதமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

விஜயின் கால்ஷீட்டை வாங்கியே ஆகவேண்டுமென்று களத்தில் குதித்த ஏஜிஎஸ், 150 கோடியை சம்பளமாக கையில் கொடுக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும் பேச்சு அடிப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...