No menu items!

வாடிவாசலை தவிர்க்கிறாரா சூர்யா?

வாடிவாசலை தவிர்க்கிறாரா சூர்யா?

பூஜை நடக்கவில்லை. ஒரு நாள் கூட ஷூட்டிங் நடக்கவில்லை. ஆனாலும் பெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகி இருக்கும் படம் ‘வாடிவாசல்’. வெற்றிமாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் சூர்யா நடிக்க திட்டமிடப்பட்டு இருக்கும் படம் இது.

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் சூர்யா நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்துவிட்டது. இதற்கு அடுத்து அவர் ‘சூரரைப் போற்று’ பட இயக்குநர் சுதா கொங்குரா இயக்கத்தில் மீண்டும் இணையவிருக்கிறார் என்று தகவல்கள் பரவின.

இப்படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா ஆகியோர் நடிக்கிறார்கள் என்று கடந்த வருடம் அக்டோபரில் கூறப்பட்டது. சூர்யாவின் 2ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இதை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டு இருந்தது.

கடந்த வருடம் நவம்பரில் ஷூட்டிங் ஆரம்பிக்கும் என கூறப்பட்டாலும், டிசம்பரிலும் ஆரம்பிக்கவில்லை, இந்த வருடம் இரண்டு மாதங்கள் ஆகிற போதிலும் ஷூட்டிங் இன்னும் ஆரம்பிக்கவில்லை.

இதற்கிடையில் ‘நேற்று இன்று நாளை’ மற்றும் ‘அயலான்’ ஆகியப் படங்களை இயக்கிய ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்க ஆர்வம் காட்டிவருவதாக தெரிகிறது.

ட்ரீம் வாரியர் நிறுவனத்திற்கு சூர்யா ஏற்கனவே கால்ஷீட் கொடுத்திருந்தார். அந்த கால்ஷீட்டை இப்போது பயன்படுத்தி கொள்ள ட்ரீம் வாரியம் நிறுவனம் விரும்புகிறதாம். இதற்கு சூர்யா சரி என்று சொல்லிவிட்டாராம்.
இதனால் இப்போது சுதா கொங்குரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் மேலும் தள்ளிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுதா கொங்குரா படம் தள்ளிப் போனால், ‘வாடிவாசல்’ மேலும் தள்ளிப் போக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் வாடிவாசலைத் தவிர்க்கவே சூர்யா இப்படி செய்கிறாரா என்ற யூகங்கள் கிளம்பியிருக்கின்றன.

இயக்குநர் அமீரும், ‘வாடிவாசல்’ படம் நடந்தால், சூர்யாவுடன் நடிப்பேன் என்று கூறியிருந்தார். அதாவது ’அது நடந்தால்’ என்று கூறியிருப்பதற்கு காரணம் இப்படியொரு பின்னணி இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...