No menu items!

ஷாக் அடிக்கும் மிருணாள் தாகூர் சம்பளம்!

ஷாக் அடிக்கும் மிருணாள் தாகூர் சம்பளம்!

‘சீதாராமம்’ என்றே ஒரே படம்தான். ஃபீல் குட் திரைப்படமாக, இந்திய சினிமா ரசிகர்கள் மத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் இளவரசியாக நடித்த மிருணாள் தாகூருக்கு ரசிகர் பட்டாளம் ஒன்று உருவானது.

முதல் படமே ஹிட்டடித்தாலும், அடுத்த ஏழெட்டு மாதங்களாக அடுத்து படத்தில் நடிக்க ஒப்பந்தமாகாமல் இருந்தார் மிருணாள் தாகூர். ஹிட் கொடுத்தால் வாய்ப்புகள் குவியுமே அப்புறம் எப்படி இப்படி சும்மாவே இருக்கிறார் என்று மிருணாள் தாகூர் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

‘நல்ல கதை அமையல’ என்று மிருணாள் தாகூர் சொல்லிக்கொண்டே இருந்தார்.

ஆனால் சினிமா வட்டாரத்தில் விசாரித்த வகையில், முதல் படமே இங்கே ஹிட். அதனால் பட்டென்று பல கோடியில் சம்பளம் கேட்கிறார் மிருணாள் தாகூர் என்று தெரிய வந்தது.

பாலிவுட்டில் ஏற்கனவே அறிமுகமாகி, நடித்து கொண்டிருக்கும் மிருணாளுக்கு அங்கே 1 கோடி சம்பளம் வாங்குவதே பெரும் பாடாக இருந்ததாம். ஆனால் இங்கே இவர் ஒரு படத்தில் நடித்துவிட்டு 3 கோடி கேட்டால் எங்கே போவது என பின்வாங்கினார்கள் தயாரிப்பாளர்கள்.

தமிழ் சினிமாவில் மிருணாளை களத்தில் இறக்கிவிடலாம் என படையெடுத்த ஒரு சில தயாரிப்பாளர்களிடமும் சம்பள விஷயத்தில் மிருணாள் கால்ஷீட் பார்க்கும் ஏஜென்ஸி கறாராக இருந்ததாம்.

ஆனால் அழகோடு அதிர்ஷ்டமும் இருந்தால், இமாசலப்பிரதேசத்தில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளமும் கூட, உங்கள் வீட்டு குளியல் அறை ஷவரில் பூவானமாக தூறும். அப்படிதான் மிருணாள் தாகூர் விஷயத்திலும் நடந்திருக்கிறது.

ஒரு வழியாக மிருணாள் தாகூர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்குப் படமொன்றில் நானிக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்தப்படத்தில் நடிக்க மிருணாள் வாங்கியிருக்கும் சம்பளம் 3 கோடி என்கிறார்கள். கொஞ்ச நாட்களிலேயே விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க 3.5 கோடி சம்பளமாக வாங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதே 3 கோடியைக் கொடுத்திருந்தால் சூர்யாவுக்கு ஜோடியாக மிருணாள் தாகூரை தமிழ்ப் படத்தில் பார்த்திருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...