No menu items!

பூஜா ஹெக்டே – 4சி + 1சி

பூஜா ஹெக்டே – 4சி + 1சி

விஜயின் ‘பீஸ்ட்’ படம் வெற்றியோ தோல்வியோ அல்லது லாபமோ நஷ்டமோ எதுவாக இருந்தாலும் பூஜா ஹெக்டே ரொம்பவே குஷியாக இருக்கிறார்.

’மூகமுடி’ படத்தில் இங்கு அறிமுகமானவருக்கு, ரசிகர்களிடையே முகத்தைக் காட்டியிருக்கும் படமாக பீஸ்ட் அமைந்தது. இதை வைத்து அடுத்தடுத்து பூஜா ஹெக்டேயின் கால்ஷீட்டுக்கு அலைப்பாய ஆரம்பித்திருக்கிறது தயாரிப்பாளர்கள் கூட்டம். நயன்தாரா திருமணமான கையோடு, ஷாரூக்கானுடன் ‘ஜவான்’ என்ற ஹிந்திப்படத்தில் நடிக்க இருப்பதால், இனி தமிழில் பூஜாதான் எல்லாமே என்று ஒரு பக்கம் பில்டப்புகளையும் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

பூஜா பூஜா என்று கால்ஷீட்டுக்கு அணுகிய தயாரிப்பாளர்கள் தற்போது தெறித்து ஓடுகிறார்களாம். காரணம், பூஜா போடும் கண்டிஷன்கள். எனக்கு சம்பளம் 4சி. அதே மாதிரி என்னுடைய அஸிஸ்டெண்ட்கள், டச் அப், ஸ்டைலிஸ்ட் என என்னோடு சம்பந்தபட்ட எல்லோருக்குமான சம்பளம் 1சி கொடுத்தால் போதும். எல்லாவற்றையும் நானே பார்த்துக்கொள்கிறேன் என்கிறாராம்.

’விஜய் கூட நடித்த ஒரு படத்திற்கே இப்படியா’ என்று புலம்பிக் கொண்டிருக்கிறார் சமீபத்தில் பூஜாவை சந்தித்த ஒரு முன்னணி தயாரிப்பாளர்.

ரொமான்ஸ் படங்களுக்கு குட்பை – நயன்தாரா

நீண்ட காலமாக புலி வருது புலி வருது கதையாக இருந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் ஒரு வழியாக ஜூன் 9-ம் தேதி தடபுடலாக நடந்து முடிந்தது.
அடுத்து என்ன?

நயன்தாரா என்ன பண்ண போகிறார்?

என்பதை தெரிந்து கொள்வதற்காக் நயன்தாரா வட்டாரத்தில் விசாரித்தால் அவரது பணியாளர்கள் கொஞ்சம் சோகத்தில் இருக்கிறார்களாம். நயன்தாரா தன்னிடம் பணிப்புரியும் ஊழியர்களை நன்றாக கவனித்து கொள்வது வழக்கம். பைக், கார், வீடு என இவர்களுக்கு நயன் கொடுத்திருக்கும் கிஃப்ட் பட்டியல்கள் பெரியது. இதெல்லாம் நயன்தாரா மிகவும் பிஸியாக நடித்து கொண்டிருந்த நேரங்களில் பரிசளிக்கப்பட்டவை. ஆனால் இப்போது அப்படி கிடைக்குமா என தெரியவில்லை என்று முணுமுணுக்கிறார்கள்.

விஷயம் இதுதான் நயன்தாரா தற்போது கமிட்டாகி இருக்கும் மூன்று படங்களுக்குப் பிறகு, ரொமான்டிக் கதைகளில் நடிக்கப் போவதில்லையாம். ஹீரோயினை மையப்படுத்திய படங்களில் மட்டுமே, தேர்ந்தெடுத்து நடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம். அதோடு ரவுடி பிக்சர்ஸ் அடுத்து எடுக்கும் இரண்டுப் படங்கள் வெற்றி பெற்றால் தொடர்ந்து தயாரிப்பில் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

இதனால் தங்களுக்கான வேலை வாய்ப்புகள் குறையுமோ என நயன் வட்டாரம் சோகத்தில் இருக்கிறார்களாம்.

வருத்தத்தில் விக்ரம்

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் ஹீரோக்கள் பட்டியலில் கொஞ்சம் லேட்டாக நுழைந்து, லேட்டஸ்டாக கூட படங்கள் பண்ணிக்கொண்டிருக்கும் விக்ரம் சோகத்தில் இருக்கிறாராம்.

சமீபகாலமாக அவரது படங்கள் எதுவும் வசூலில் எடுபடவில்லை. வரவேற்பையும் பெறவில்லை. இந்நிலையில்தான் அவரது மகன் துருவ் நடிக்க வந்தார். தனக்கு சினிமாவில் திருப்புமுனையைக் கொடுத்த பாலா இயக்கத்தில் மகன் நடிக்கிறார் என உற்சாகத்தில் இருந்தார். ஆனால் பாலா – விக்ரம் கூட்டணியின் மாயாஜாலம் அவரது மகன் விஷயத்தில் எடுபடவில்லை.

இதனால் தற்போது விக்ரம் மற்றும் துருவ் இருவருக்குமே மார்க்கெட் டல்லடிக்க, ரொம்பவே வருத்தத்தில் இருக்கிறாராம் விக்ரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...