No menu items!

நான் சாகவில்லை – நித்தியானந்தா

நான் சாகவில்லை – நித்தியானந்தா

நித்தியானந்தா இறந்துவிட்டார் என்ற செய்திகள் சமூக ஊடகங்களில் பரவிக் கொண்டிருந்த நிலையில் அவரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவருடைய செய்தி வெளியாகியிருக்கிறது. எழுத்துப் பிழைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டிருப்பதாவது:

நான் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பி வரும் என் வெறுப்பாளர்களின் கருத்துக்களை ஒதுக்கித் தள்ளுவதற்காக இதை எழுதுகிறேன். நான் எங்கேயும் போகவில்லை, இறக்கவும் இல்லை என்பதை என் பக்தர்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

நான் பேசுவதற்கும் சத்சங் கொடுப்பதற்கும் இன்னும் காலம் எடுக்கும் என்னால் முழுமையாக மனிதர்களை அடையாளம் காண முடியவில்லை, அவர்கள் பெயர்களையோ அவர்கள் வசிப்பிடங்களையோ நினைவில் கொள்ள இயலவில்லை

இங்கே கைலாசாவில் காலமும் உணர்வுகளும் எப்போதும் போல்தான் இருக்கிறது
என்னை வெறுப்பவர்களும் சந்தேகப்படுபவர்களும் என் புகைப்படத்தை நம்பாதவர்களும் திருவண்ணாமலை சென்று அங்கு அருணகிரி யோகேஷ்வர சமாதியில் விளக்கு ஏற்றுங்கள். அதில் என்னை உங்களால் தெளிவாக காண முடியும்.

எனக்கு உதவும் என்னை தீவிரமாய் கண்காணிக்கும் மருத்துவர்களுக்கு என் நன்றி.
நான் இன்னும் மருத்துவ சிகிச்சையிலிருந்து வெளிவரவில்லை.
27 மருத்துவர்கள் எனக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். அவர்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

அவர்கள் மருத்துவர்கள் மட்டுமல்ல, அவர்கள் என் பக்தர்கள், ஆராய்ச்சியாளர்கள். அவர்கள் என்னுடன் நேரத்தை செலவழித்து மனித உடலிலும் மனதிலும் ஆழ்மன தாக்கத்தை ஆராய்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

என்னுடைய நித்ய சிவ பூஜை மட்டும் தொடர்ந்து நடக்கிறது.

சாப்பிடுவதும் தூங்குவதும் இன்னும் தொடங்கவில்லை.

எனக்கு எந்த நோயும் இல்லை. பிரபஞ்சம் என் உடல் உள்ளே மாற்றங்களை நிகழ்த்துகிறது. மருத்துவர்களால் அதை இன்னும் கண்டறிய முடியவில்லை. என்ன நோய் என்பதை அவர்களுக்கு தெரியவில்லை.

பரமசிவனின் பிரபஞ்சத்தை உணர்கிறேன், மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறேன்.

மனித உலகில் இருப்பதைவிட கைலாசாத்தில் இருப்பதை விரும்புகிறேன்

உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். உங்களுடன் மனித உலகில் நேரத்தை செலவிட விரும்புகிறேன்.

என்னை வெறுப்பவர்கள் வெறுப்பையும் பொய்களையும் பரப்புகிறார்கள். நான் 28 நாட்கள் பச்ச பட்டினி விரதம் இருந்ததாகவும் அதுதான் என் உடல்நல குறைவுக்கு காரணம் என்றும் கூறுகிறார்கள்.

என்னை பரிசோதித்த மருத்துவர்கள் என் இதயம் நல்ல உடல்நலத்துடன் கூடிய 18 வயது இளைஞனின் இதயம் போல் இருக்கிறது என்றும் என் உடல் உறுப்புகள் அனைத்தும் சிறப்பாக செயல்படுகிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

எதிரிகள் வேறு வெறுப்பாளர்கள் வேறு. என்னை வைத்து கிண்டல் செய்பவர்கள் வேறு. அவர்களுக்குள் வித்தியாசத்தை நான் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறேன்.

நான் எதிர்ப்பாளர்களையும் வெறுப்பாளர்களையும் பொருட்படுத்துவதில்லை.
என்னை கேலியும் கிண்டலும் செய்து வரும் மீம்களை வெகுவாக ரசிக்கிறேன். என் மேல் அவர்கள் வைத்திருக்கும் ரகசிய ஆசையை அறிந்திருக்கிறேன்.

விரைவில் நேரம் கிடைக்கும்போது அவற்றை பார்த்து என்னுடைய சத்சங் நிகழ்ச்சிகளில் குறிப்பிடுவேன்.

என்று நித்தியானந்தா குறிப்பிட்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...