No menu items!

ஆர்யாவின் மனைவி சாயிஷா கவர்ச்சி ஆட்டம் போட்டதின் பின்னணி!

ஆர்யாவின் மனைவி சாயிஷா கவர்ச்சி ஆட்டம் போட்டதின் பின்னணி!

சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ இந்த மார்ச் 30-ம் தேதி வெளியாகிறது. இதனால் இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளை ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆர்யாவின் காதல் மனைவி சாயிஷா இப்படத்தில் ‘ராவடி’ என்ற பாடலுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடியிருக்கிறார். இந்தப் பாடலின் புகைப்படங்களை ‘பத்து தல’ படக்குழுவினர் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கமெண்ட்களாக அள்ளி விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

‘திருமணமான பிறகு சாயிஷா நடிக்க விரும்பினால், நடிக்கலாம், ஆனால் இப்படி ஏன் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆடியிருக்கிறார்.’ என பலவிதமாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

2017-ல் வெளியான ‘வனமகன்’ படம் மூலம் சாயிஷா தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘ஜுங்கா’, ‘கஜினிகாந்த்’, ’காப்பான்’, ‘டெடி’ என அடுத்தடுத்து சில தமிழ்ப்படங்களில் நடித்தார்.

‘கஜினிகாந்த்’, ‘டெடி’ படங்களில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்த போதுதான் ஆர்யாவுக்கும், சாயிஷாவுக்கு இடையே காதல் உருவானது. இதையடுத்து இவர்கள் இருவரும் 2019-ல் திருமணம் செய்து கொண்டார்கள். 2021-ல் இவர்களுக்கு முதல் குழந்தை அரியானா பிறந்தது. குழந்தைப் பிறகு இப்பொழுது மீண்டும் இந்த பாடலுக்கு ஆடியதன் மூலம் நடிக்க வந்திருக்கிறார் சாயிஷா.

சாயிஷாவின் குடும்பம் பாலிவுட்டில் பிரபலமான நட்சத்திர குடும்பம். சாயிஷா பாலிவுட்டின் பிரபல ஹீரோயின் சாய்ரா பானு, சூப்பர் ஸ்டார் திலீப் குமார் தம்பதியின் பேத்தி முறை.

இப்பேர்ட்ட பெரும் நட்சத்திர பின்னணி இருக்கும் சாயிஷா ஏன் இப்படி ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார் என்பது கேள்வி எழுந்திருக்கிறது.

கோலிவுட்டின் ரொமான்டிக் ஹீரோவாக அடையாளம் காணப்பட்ட ஆர்யாவுக்கு, இப்பொழுது முன்பு போல படங்கள் எதுவும் கைவசம் இல்லை. டெடி படத்திற்கு பிறகு படங்கள் எதுவும் வரவில்லை. இதனால் நீண்ட நாட்களாக ஆர்யாவின் துள்ளல் காதலை திரையில் காணமுடியாமல் போனது.

இந்நிலையில்தான் சாயிஷா மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். சாயிஷாவை பொறுத்தவரை அவர் எடுக்கும் முடிவுகளில் அவரது அம்மா ஷாகீன் பானுவின் சொல்லும் வார்த்தைகள்தான் முடிவு செய்யுமாம். திருமண வாழ்க்கையாக இருந்தாலும் சரி, சினிமா வாழ்க்கையாக இருந்தாலும் சரி ஷாகீன் பானுவின் அறிவுரையைதான் சாயிஷா பின்பற்றுவாராம்.

’சார்பட்டா’ படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை ஏற்ற ஆர்யா அதிகளவில் ப்ரோட்டீன் சப்ளிமெண்ட்களை சாப்பிட்டு இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் எடுத்து கொண்ட மருந்துகளும் ஹார்மோன் பிரச்சினையில் கொண்டுவிட, ஆர்யாவின் உடல் தோற்றத்தில் வேறுவிதமான மாற்றங்கள். இதனாலேயே ஆர்யா எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தார் என்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில்தான் அம்மாவின் ஆலோசனைப்படி மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் சாயிஷா. அதுவும் பாலிவுட் பாணியில் ஒரு கவர்ச்சி நடனம் ஆடினால் எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்க முடியும் என்பதால்தான் இந்த ‘ராவடி’ ஆட்டமாம்,

இதற்கிடையில் ‘சார்பட்டா’ இரண்டாம் பாகம், ’பையா 2’ என ஆர்யாவுக்கு வாய்ப்புகள் வந்திருக்கின்றன.

சாயிஷாவின் ரீஎண்ட்ரி, ஆர்யாவுக்கு ரீஎண்ட்ரி ஆக அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது என சாயிஷா ஆர்யா உற்சாகத்தில் இருப்பதாக அவர்களுக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...