No menu items!

பூஜா ஹெக்டேவுடன் மோதும் ராஷ்மிகா மந்தானா

பூஜா ஹெக்டேவுடன் மோதும் ராஷ்மிகா மந்தானா

தமிழ் சினிமாவில் இப்போது ஹீரோயின்கள் விஷயத்தில் கடும் பஞ்சம் நிலவுகிறது.

நம்மூர் கமர்ஷியல் ஹீரோக்கள் பான் – இந்தியா மார்க்கெட் உள்ள ஹீரோயின்கள்தான் வேண்டுமென அடம்பிடிக்கிறார்களாம்.

இதனால் தயாரிப்பாளர்கள் தரப்பு தங்களது ப்ரொடக்‌ஷன் மேனேஜர்களை அனுப்பி ஹீரோயின்களை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

சமீபகாலமாக பான் – இந்தியா மார்க்கெட் உள்ள ஹீரோயின்களாக பூஜா ஹெக்டேவும், ராஷ்மிகாவும் முன்னணியில் இருக்கிறார்கள். இதனால் இவர்கள் பக்கம் நம்மூர் ஆட்கள் வட்டமடித்தபடி இருக்கிறார்கள்.

பூஜா 3.5 கோடி கேட்கிறாராம். இதுவரை 2 கோடி வாங்கிக்கொண்டிருந்த ராஷ்மிகா 4 கோடி கேட்கிறாராம்.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல், இவர்களது சம்பள விஷயத்தில் மேனேஜர்களிடம் பேச்சுவார்த்தை போய்கொண்டிருகிறதாம். ஆனாலும் பூஜாவை விட அதிகம் வாங்க வேண்டுமென ராஷ்மிகாவும், மூன்று ப்ளாப் கொடுத்தாலும் நான் தான் டாப் என பூஜாவும் மல்லுக்கட்டி கொண்டு சம்பளத்தை குறைக்க மறுக்கிறார்களாம்.

சம்பளத்தை ஏற்றிய மிருனாள் தாகூர்

இன்றைய நிலவரப்படி ஆலியா பட், திபீகா படுகோன் என முக்கிய தலைகள் திருமணமாகி செட்டிலாகி விட, அதிர்ஷ்டம் மிருனாள் தாகூர் வீட்டு வாசல் பக்கம் வீச ஆரம்பித்திருக்கிறது.

‘சீதா ராமம்’ படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி என பலத்த வரவேற்பைப் பெற, மிருனாள் தாகூர் ஏக உற்சாகத்தில் இருக்கிறார். காரணம் வந்து குவியும் வாய்ப்புகள்.

தற்போது இந்த காதல் இளவரசியின் கைவசம் அரை டஜன் படங்கள்.

சமீபத்தில் இவர் நடித்த ‘ஜெர்ஸி’ பாக்ஸ் ஆபிஸில் படுத்துவிட, ’சீதா ராமம்’ பரமபதத்தில் அடித்த ஜாக்பாட் மாதிரி உச்சத்தில் கொண்டு போய் விட்டிருக்கிறது. அதேவேகத்தில் தனது சம்பளத்தையும் எக்குத்தப்பாக ஏற்றிவிட்டாராம்.

மிருனாளுக்கு தெற்குப் பக்கம் அமோக காதல் இருப்பதால் தமிழ், தெலுங்குப் படங்களில் நடிக்க மும்முரம் காட்டி வருகிறார்.

இதுபோதாதென்று ’சீதா ராமம்’ இயக்குநர் ஹனு ராகவபுடி, துல்கரையும், மிருனாளையும் வைத்து மீண்டுமொரு படமெடுக்கும் திட்டத்தில் இருக்கிறாராம்.

சூர்யா 42 – அப்டேட்

‘வணங்கான்’ படத்தின் ரிக்கார்டிங் வேலைகளில் ஜி.வி. பிரகாஷ் பிஸியாக இருக்கிறார். பாலா மற்றொரு பக்கம் பரபரப்பாக இருக்கிறார்.

ஆனால் சூர்யாவோ தனது 42-வது பட வேலைகளில் இறங்கிவிட்டார். இப்படத்தை சிறுத்தை பட த்தின் இயக்குநர் சிவா இயக்குகிறார்.

சூர்யா42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் முதல் ஷெட்யூல் கோவாவில் நடைபெறுகிறது.

முதல் ஷெட்யூலிலேயே கதாநாயகியாக நடிக்கும் பாலிவுட்டின் மெல்லிடை அழகி திஷா பதானி கலந்து கொள்கிறார்.

சூர்யா – திஷா சம்பந்தப்பட்ட காட்சிகளை கோவாவில் எடுப்பதால், சன் ஸ்கிரீன் லோஷனுடன் திஷா ஷூட்டிங் ஸ்பாட்டில் வலம் வருகிறார்.

இப்படத்தை 10 மொழிகளில் எடுக்க சூர்யா திட்டமிட்டு இருக்கிறார். இதன் மூலம் பான் – இந்தியா பிஸினெஸ்ஸில் தானும் களத்தில் இறங்கவேண்டுமென்பது சூர்யாவின் திட்டமாம்.

3டி படமாக எடுக்கும் திட்டமும் இருப்பதால், ஆக்‌ஷன் காட்சிகளில் அதிகம் கவனம் செலுத்துகிறாராம் இயக்குநர் சிவா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...