No menu items!

மும்பை கேங்ஸ்டர் விஜய் – லோகேஷ் கனகராஜ் ஒன்லைன்

மும்பை கேங்ஸ்டர் விஜய் – லோகேஷ் கனகராஜ் ஒன்லைன்

விஜய் ‘வாரிசு’ படத்தின் ஷூட்டிங்கில் மிக பரபரப்பாக நடித்து கொண்டிருக்கிறார். தற்போது விசாகப்பட்டினத்தில் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது.

இப்படம் ஏறக்குறைய முடிவடையில் நிலையில் இருப்பதால், மிக விரைவில் அவரது அடுத்தப்படம் குறித்த அறிவுப்பு வெளியாகலாம்.

’மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் இணையும் விஜய் படத்தின் களம் என்ன என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.

கேங்ஸ்டர், ஆக்‌ஷன் படங்களை எடுப்பதில் கில்லாடி என நிரூபித்திருக்கும் லோகேஷ் கனகராஜ், விஜய்67 கதையையும் பக்காவான ஆக்‌ஷன் ஸ்கிரிப்ட்டாக தயார் செய்திருக்கிறாராம்.

மும்பைதான் கதையின் களம். இங்கு நடக்கும் கேங்ஸ்டர் கதையாக விஜய்67 உருவாக இருக்கிறதாம். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கலாம் என்றும் கிசுகிசுக்கிறார்கள்.

அநேகமாக இந்த வருடம் அக்டோபரில் விஜய்67 ஷூட்டிங் தொடங்கலாம் என்று லோகேஷூக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.

காதல் கதைகள் வேண்டாம் – துல்கர் சல்மான்

கலகலப்பான சாக்லேட் பாய் போல் இருக்கும் துல்கர் சல்மானிடம் சூப்பரான காதல் கதை இருக்கிறது நடிக்கிறீர்களா என்று தயாரிப்பாளர்களோ அல்லது இயக்குநர்களோ கேட்டால், சிரித்து கொண்டே ‘வேண்டாம்’ என்கிறாராம்.

’வயசாகிட்டே போகுது. அதனால காதல் கதைகள்ல நடிப்பதிலிருந்து ஒரு ப்ரேக் எடுக்கலாம்னு நினைக்கிறேன். மெச்சூர்டான, வித்தியாசமான கதைகள் நடிக்க ஆசைப்படுறேன். குறிப்பாக ஒரிஜினல் கதைகள் என்றால் ஓகே’’என்று சொல்கிறாராம்.

‘’நான் நடிக்க ஆரம்பிச்சு 10 வருஷம் ஆகுது. இதுவரைக்கும் 35 படங்கள் நடிச்சிட்டேன். ஆனா என்னோட இருக்குற சில ஹீரோக்கள் வருஷத்துக்கு 12 படங்கள் பண்றாங்க. அது எனக்கு சரிப்பட்டு வராது. எங்காப்பாவே வருஷத்துக்கு 30 படமெல்லாம் நடிச்சிருக்காங்க. அதுக்காக நானும் நடிக்கணும்னு கட்டாயமில்ல. சில படங்கள் பண்ணினாலும் நல்ல படங்களா தேர்ந்தெடுத்து நடிக்கணும். அப்புறம் டைரக்‌ஷன் பண்ணனும் அதான் என்னோட ஐடியா’’ என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்துவிடுகிறாராம்.

இதனால் காதல் கதைகளை ஒதுக்கிவிட்டு துல்கருக்காக மெச்சூர்ட்டான கதைகளைப் பண்ண ஒரு கூட்டம் களத்தில் இறங்கியிருக்கிறது. ஒடிடி இருக்க பயமேன் என்கிறது இந்த படைப்பாளிகள் வட்டாரம்.

பிரச்சினையில் விஜய், தனுஷ் படங்கள்

தெலுங்கு சினிமாவில் ‘டோலிவுட் பந்த்’ வேகமெடுக்க. இப்போது அது விஜய் மற்றும் தனுஷ் நடிக்கும் படங்களுக்கு பிரச்சினையாகி இருக்கிறது.

ஆரம்பத்தில் விஜய் நடிக்கும் ’வாரிசு’ படம் அங்கே ‘வாரசுடு’ என்றப் பெயரில் தெலுங்குப் படமாக எடுக்கப்படுகிறது என்று சொல்லப்பட்டது. விஜய் தமிழில் பெரிய மாஸ் ஹீரோ என்பதால், தெலுங்கில் எடுக்கும் போதே தமிழிலும் எடுக்கிறோம் என்றது அப்படக்குழு.

அதேபோல் தனுஷ் நடிக்கும் ‘வாத்தி’ படமும் அங்கே ‘சார்’ என்ற பெயரில் ஷூட் செய்யப்பட்டது. இப்படங்களின் ஷூட்டிங் ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் ஷூட் செய்யப்பட்டன.

இப்போது ஃப்லிம் சேம்பர் மற்றும் ஆக்டிவ் ப்ரொடியூஸ்ர்ஸ் கில்ட் கொண்டு வந்திருக்கும் ஷூட்டிங் நிறுத்தம் முடிவினால் இப்படங்களின் ஷூட்டிங்கை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த இரு படங்களும் தெலுங்குப் படங்கள் என்பதால் ஷூட் செய்ய கூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறதாம்.

இதனால் உஷாரான தயாரிப்பு நிறுவனம், ’வாரசுடு’ மற்றும் ’சார்’ ஆகிய இரு படங்களும் நேரடி தெலுங்குப் படங்கள் இல்லை. தமிழில் எடுக்கும் அதே நேரத்தில் தெலுங்கிலும் எடுக்கப்பட்டு வருகின்றன. நேரடி தெலுங்குப் படங்கள் இல்லையென்பதால் நாங்கள் ஷூட்டிங்கை தொடர்கிறோம் என்று சொல்லி வருகிறதாம். இது தமிழ் நடிகர்களுக்கு மட்டும் ஏன் இந்த விதிவிலக்கு. அவர்களும் அதிக சம்பளம் வாங்குகிறார்களே என்று தெலுங்கு ஹீரோக்களிடையே சலசலப்பை கிளப்பியிருப்பதாக ’வாரிசு’ படக்குழு முணுமுணுக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...