No menu items!

’இந்தியன் 2 To இந்தியன் 3’ – லோகேஷன் தேடும் ஷங்கர்

’இந்தியன் 2 To இந்தியன் 3’ – லோகேஷன் தேடும் ஷங்கர்

கமலும், ஷங்கரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்திருக்கும் ‘இந்தியன் 2’, படத்திற்காக எடுத்திருக்கும் ஃபுட்டேஜ் இரண்டுப் படங்களுக்கு தாக்குப்பிடிக்கும் வகையில் நீளமாக இருப்பது ஷங்கருக்கே எடிட்டிங்கில் உட்கார்ந்த போதுதான் தெரிந்திருக்கிறது.

இதனால் புத்திசாலித்தனமாக யோசித்த ஷங்கர், ஒரே படத்தை ’இந்தியன் 2’, ’இந்தியன் 3’ என இரு பாகங்களாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்கு முதல் கமல் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் இப்போது இருக்கும் வர்த்தகத்தை பயன்படுத்தி கொள்ள கமல் இரண்டு பாங்கங்கள் என்ற ஐடியாவுக்கு ஒகே சொல்லிவிட்டார்.

ஷங்கரும் கமலும் இரு பாகங்கள் என்கிற முடிவுக்கு வந்துவிட்டதால், தயாரிப்பு நிறுவனமான லைகாவும் வேறு வழியே இல்லாமல் கூடுதல் சம்பளம் கொடுத்து, கூடுதல் பட்ஜெட்டையும் ஒதுக்கிவிட்டது என்கிறார்கள்

’இந்தியன் 3’ படத்திற்கு தேவையான அளவு ஃபுட்டேஜ் இருந்தாலும், ஒரு முழுமையான உணர்வு வேண்டுமென்பதற்காக சில காட்சிகளை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

அதன்படி ஷங்கர் தனது குழுவினரோடு விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினத்திற்கு சென்று ஷூட் செய்வதற்கான லொகேஷன்களை முடிவு செய்திருக்கிறார்கள். அதாவது இதுவரை பார்த்திராத அழகான இடங்களில் படமெடுக்க வேண்டுமென்பதில் ஷங்கர் விடாப்பிடியாக இருப்பதால்தான் இந்த லொகேஷன் வேட்டை.

விசாகப்பட்டினம், விஜயவாடாவில் இரண்டு வாரம் ஷுட் செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதற்காக விஜயவாடாவில் இருக்கும் அலங்கார் சென்டரில் ஷூட் செய்ய அனுமதி வாங்கப்பட்டுள்ளதாம். இங்கு நடைபெறும் ஷூட்டில் சுமார் 8,000 ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் நடிக்க இருக்கிறார்கள். இங்குமட்டும் நான்கு நாட்கள் ஷூட்டிங் நடைபெற உள்ளது.

இங்கே ஷூட் முடிந்ததும் ‘இந்தியன்’ படக்குழு விசாகப்பட்டினத்திற்கு பறக்க இருக்கிறது.


சூர்யாவுக்கு வில்லனாகும் சன்னி தியோல்!

வில்லன்களுக்கான பஞ்சத்தில் இருக்கும் தமிழ் சினிமாவுக்கு, சஞ்சய் தத்திற்கு பிறகு சன்னி தியோலும் வில்லனாக களமிறங்கி கல்லா கட்ட இருக்கிறார்.

சஞ்சய் தத்திற்கு தென்னிந்திய சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்கள் அதிகம் வருவதால், ஆறு கோடி சம்பளம் கேட்கிறார். பாலிவுட்டில் படம் இல்லாமல் இருப்பதற்கு, இங்கு மரியாதையோடு, பணமும் கிடைப்பதால் உடனடியாக கால்ஷீட் கொடுக்கிறார் சஞ்சய் தத்.

இதைப் புரிந்து கொண்ட சன்னி தியோலும் இப்போது வில்லனாக நடிக்க இறங்கி வந்திருக்கிறார். ஒரு நல்ல சம்பளம், மரியாதை இருந்தால் போதுமென இவரும் சஞ்சய் தத் வழியில் தொடர்ந்து படம் பண்ணும் எண்ணத்தில் இருக்கிறாராம்.
இதை தெரிந்து கொண்ட கங்குவா படக்குழு சன்னி தியோலை அணுகியிருக்கிறது. லியோவுக்கு பிறகு மீண்டும் சஞ்சய் தத்தை நடிக்க வைத்தால், சுவாரஸ்யம் இருக்காது என்று நினைத்தவர்கள், இப்போது சன்னி தியோலை ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம்.

தமிழ் சினிமாவில் சூர்யாவின் கங்குவா படத்தில்தான் சன்னி தியோல் வில்லனாக அறிமுகமாக இருக்கிறார். நவம்பரில் நடக்கும் கங்குவா ஷெட்யூலில்தான் சன்னி தியோல் நடிக்கிறார். இதனால் அடுத்த ஒரு மாதம் இவர் சென்னைக்கும் மும்பைக்கு மாறி மாறி பறக்க வேண்டியிருக்கும் என்கிறது ‘கங்குவா’ படக்குழு.

கங்குவாவில் சூர்யாவுக்கு அசத்தலான ஆறு கதாபாத்திரங்கள் என்கிறார்கள். இதில் சன்னி தியோல் எந்த கதாபாத்திரத்துடன் மோதப் போகிறார் என்பது சஸ்பென்ஸ் என்கிறது ‘கங்குவா’ குழு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...