No menu items!

விராட் கோலியின் வித்தியாச ஹோட்டல்

விராட் கோலியின் வித்தியாச ஹோட்டல்

கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்த விராட் கோலிக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் விராட் கோலியோ பழம்பெரும் பாடகர் கிஷோர் குமாரின் தீவிர ரசிகர்.

“ஆட்களே இல்லாத தீவில் ஒரே ஒரு நபரை மட்டும் உடன் வைத்துக்கொண்டு வாழ்வதென்றால் யாரை துணைக்கு வைத்துக்கொள்வீர்கள்?’ என்று விராட் கோலியிடம் முன்பு ஒரு முறை கேட்கப்பட்டது. அதற்கு விராட் கோலி அளித்த பதில் கிஷோர்குமார்.

அந்த அளவுக்கு கிஷோர் குமாரின் பாடல்கள் மீது மிகுந்த பற்று கொண்டவர் விராட் கோலி. அதனாலேயே இப்போது கிஷோர் குமாருடன் இணைந்து தனது வர்த்தகப் பயணத்தை விரிவுபடுத்த கோலி திட்டமிட்டுள்ளார்.

கிஷோர் குமார்தான் இறந்துவிட்டாரே… அவருடன் விராட் கோலி எப்படி கைகோர்க்க முடியும் என்று கேட்கிறீர்களா?…

கிஷோர் குமார் இறந்துவிட்டால் என்ன? அவர் வாழ்ந்த வீட்டை தன்னுடன் சேர்த்துக்கொண்டு தொழில் செய்யப் போகிறார் விராட் கோலி.

ஆம்… மும்பையின் ஜுஹூ பகுதியில் கிஷோர் குமார் வாழ்ந்த வீட்டை 5 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்துள்ள விராட் கோலி அதை ஒரு ஹோட்டலாக மாற்றி வருகிறார். அங்கு வருபவர்களுக்கு இன்னிசையுடன் உணவு பரிமாற திட்டமிட்டிருக்கிறார் விராட் கோலி. இந்த ஹோட்டல் விரைவில் திறக்கப்பட உள்ளது.

விராட் கோலியைப் பொறுத்தவரை அவர் ஹோட்டல் திறப்பது புதிய விஷயமல்ல. ஏற்கெனவே ‘ஒன் 8 கம்யூன்’ (One8 Commune) என்ற பெயரில் கொல்கத்தா, டெல்லி, புனே ஆகிய நகரங்களில் ஹோட்டல்களை நடத்தி வருகிறார் விராட் கோலி. Superfood Salad, Gondhoraj Chicken, Dimsums, Cheesecake Dessert, Fish Kabiraji ஆகிய உணவு வகைகள் இந்த ஹோட்டலின் சிறப்பு உணவுகளாக கூறப்படுகின்றன.

ஏற்கெனவே 3 நகரங்களில் உள்ள தனது உணவகங்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், இப்போது மும்பை ஜுஹூ பகுதியில் உள்ள கிஷோர் குமாரின் வீட்டில் தனது ஹோட்டலின் 4-வது கிளையைத் திறக்கவுள்ளார் கோலி.

இந்த ஹோட்டலுக்கான பணிகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில் இதன் உள்புற அமைப்புகளை வீடியோ எடுத்து அதை தனது ரசிகர்களுக்காக யூடியூபில் பகிர்ந்துள்ளார் விராட் கோலி.

கிஷோர் குமாரைப்பற்றியும் தான் திறக்கவுள்ள புதிய ஹோட்டலைப்பற்றியும் இந்த வீடியோவில் பேசியிருக்கும் விராட் கோலி, “நான் சந்திக்க விரும்பிய நபர் யார் என்று என்னிடம் ஒருமுறை கேட்கப்பட்டது. அதற்கு நான் சந்திக்க விரும்பிய நபர் கிஷோர் குமார் என்று பதில் அளித்திருந்தேன். அவரது இசைக்கு நான் ரசிகன். எனக்கு அதிக ஈடுபாடு தோன்றினால் மட்டுமே நான் ஒரு விஷயத்தைச் செய்வேன். அந்த வகையில் எனக்கு அதிக ஈடுபாடு உள்ளதால் ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ளேன். எனக்கு பிடித்த இசைக்கலைஞரின் வீடு மற்றும் தொழிலை இணைத்து மும்பையில் இந்த ஹோட்டலைத் திறக்கவுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

கிரிக்கெட்டில் கோலி எதைச் செய்தாலும் வித்தியாசமாக செய்வார். சாதனைகளைப் படைப்பார். அதேபோல் ஹோட்டல் தொழிலிலும் சாதனை படைப்பார் என்று எதிர்பார்ப்போம்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...