No menu items!

பெண் குழந்தையைத் தத்தெடுத்த கமல் நாயகி!

பெண் குழந்தையைத் தத்தெடுத்த கமல் நாயகி!

கமலுக்கு ஜோடியாக நடித்த நடிகைகளில் திறமைசாலிகள் பலர் இருந்தாலும், ஒரு சிலரை தவிர மற்ற நடிகைகளுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் அமைந்தது இல்லை.

திறமை இருந்தும் வாய்ப்புகள் கிடைக்காமல் குடும்ப வாழ்க்கை பக்கம் திரும்பிய நடிகைகளில் பட்டியலில் ‘விருமாண்டி’ பட நாயகி அபிராமியும் அடக்கம்.

தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் நடித்த அபிராமி, 2009-ல் திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் ராகுல் பாவணன். இவர் ஹெல்த்கேர் துறையில் பணியாற்றி வருகிறார்.

இந்த ஜோடிக்கு கடந்த 13 வருடங்களாக குழந்தைகள் இல்லை. இதனால் ரொம்பவே மனமுடைந்து போயிருந்த இவர்களது வாழ்க்கையில் இப்பொழுது மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது. காரணம் கல்கி.

குழந்தை இல்லையே என்று வருத்தப்பட்டு கொண்டே இருக்காமல் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்திருக்கிறார்கள். கடந்த வருடம் கல்கியை தங்களது மகளாக சுவீகாரம் செய்த அபிராமி, இந்தாண்டு அன்னையர் தினத்தை உற்சாகமாக கொண்டாடி இருக்கிறார்.

கல்கியின் வருகைக்குப் பிறகு வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சிகரமாகி வருகிறது என்று பூரிப்பில் இருக்கிறார் அபிராமி.

இவர் இப்படியென்றால், வாடகைத்தாய் மூலம் மகன்களைப் பெற்றிருக்கும் நயன்தாராவுக்கும் இது முதல் அன்னையர் தினம் கொண்டாட்டமாக அமைந்திருக்கிறது.

உயிர் மற்றும் உலக் என நயன்தாரா தனது இரு மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை கணவர் விக்னேஷ் சிவன் வெளியிட்டு இருக்கிறார்.

ஒரு அம்மாவாக என் செல்லமே உனக்கு பத்துக்கு பத்து மதிப்பெண்’ என்று உருகியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...