No menu items!

’லியோ’ ரிலீஸூக்கு முன்பாகவே 246 கோடி வியாபாரம்!

’லியோ’ ரிலீஸூக்கு முன்பாகவே 246 கோடி வியாபாரம்!

விஜய் – லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைந்திருக்கும் ‘லியோ’ படம் ஷூட்டிங் பூஜை போட்ட உடனே வியாபாரத்தில் களைக்கட்டியிருக்கிறதாம்.

லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து இயக்கிய ‘விக்ரம்’ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு குறித்த ப்ரோமோ வெளியான உடனேயே பெரும் விலைக்கு வியாபாரமானது. இப்போது ‘லியோ’ படமும் விக்ரமைப் போலவே சூட்டைக் கிளப்பியிருக்கிறது.

லேட்டஸ்ட் சமாச்சாரம் என்னவென்றால் டிஜிட்டல் உரிமைகள், சாட்டிலைட் உரிமை மற்றும் ஆடியோ உரிமை பல கோடிகளுக்கு வியாபாரமாகி இருக்கிறது என்கிறார்கள்.

’லியோ’ படம் ஏறக்குறைய 250 கோடி பட்ஜெட்டில் தயாராக இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.

இந்நிலையில், இதன் டிஜிட்டல் உரிமை சுமார் 150 கோடிக்கும், சாட்டிலைட் உரிமை 80 கோடிக்கும், ஆடியோ உரிமை 16 கோடிக்கும் வியாபாரமாகி இருப்பதாக கிசுகிசு அடிப்படுகிறது.

சஞ்சய் தத் வில்லனாக நடிப்பதால் இப்படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமையும் நல்ல விலைக்குப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இப்படம் ரிலீஸூக்கு முன்பாகவே படத்தின் பட்ஜெட்டை சமன் செய்யும் வகையில் வியாபாரம் ஆகிவிடும் என்கிறார்கள்.


நயன்தாரா வழியில் ரகுல்ப்ரீத் சிங்

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே லிவ்விங் டுகெதர் முறையில் ஒரே ஃப்ளாட்டில் வசித்தார்கள்.

இவர்கள் காதல் இப்படியே சில வருடங்கள் தொடர்ந்தது.

இப்பொழுது இதே டேட்டிங் பாணியில் அடியெடுத்து வைத்திருக்கிறார் ரகுல்ப்ரீத் சிங்.

பாலிவுட் தயாரிப்பாளர் ஜாக்கி பாக்நானியுடன் காதல் வயப்பட்டிருக்கும் ரகுல்ப்ரீத் சிங் அதை வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்.

‘எங்களுக்கு இடையே இருப்பது எங்கள் இருவரது குடும்பங்களுக்கும் தெரியும். இந்த காதல் என்னை சந்தோஷமாக வைத்திருக்கிறது. அதை இன்னும் கொஞ்ச நாட்கள் கொண்டாட விரும்புகிறேன். நாங்கள் இருவரும் எங்களது வேலைகளில் மும்முரமாக இருப்பதால் இப்போதைக்கு திருமணம் இல்லை.’ என்கிறார் ரகுல்ப்ரீத் சிங்.

32 வயதாகும் ரகுல்ப்ரீத் சிங், 2023-ல் ஜாக்கியை கரம்பிடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம்.


ஞாபக மறதியால் அவதிப்படும் பானுப்ரியா

’மாலையில் யாரோ மனதோடு பேச’ என்ற பாடலில் இசையை விட அதிகம் ரசிக்க வைத்தவர் பானுப்ரியா.

கண்களினால் பேசும் பானுப்ரியா இப்போதும் சென்னையில்தான் இருக்கிறார்.

கணவர் ஆதர்ஷ் கெளஷல் 2018-ல் இறந்துவிட, தனது அம்மா மற்றும் தம்பியுடன் சேர்ந்து வசிக்கிறார்.

பானுப்ரியாவுடன் நடித்த பல நடிகைகள் இப்பொழுது மூன்றாவது ரவுண்ட்டில் நடிக்க ஆரம்பித்திருக்க, இவரை மட்டும் எங்கும் காணவில்லையே என்று விசாரித்த போதுதான் பானுப்ரியாவுக்கு உள்ள பிரச்சினை தெரிய வந்திருக்கிறது.

கணவர் இறந்தப் பின்னும் சினிமாவில் நடிக்காமல் இருப்பதற்கு காரணம் ஞாபக மறதியால் அவதிப்படுவதுதானாம்.

’கடந்த 4 ஆண்டுகளாகவே ஞாபக மறதி பிரச்சினை இருப்பதால், நடிக்க முடியவில்லை. ஷூட் செய்யும் போது வசனம் மறந்து போய்விடுகிறது. இதனால்தான் ஒதுங்கி இருக்கிறேன்’ என்கிறார் பானுப்ரியா.

பானுப்ரியாவின் ஒரே ஆறுதல் அவரது மகள் அபிநயா. இவர் இப்போது லண்டனில் படித்து கொண்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...