No menu items!

நயன்தாரா திருமணம் – அழைக்கப்படாத நட்சத்திரங்கள்

நயன்தாரா திருமணம் – அழைக்கப்படாத நட்சத்திரங்கள்


நடந்து முடிந்தது நயன்தாரா திருமணம். திருமணத்துக்கு பலர் வந்திருந்தாலும் வராதவர்கள் குறித்துதான் கோலிவுட்டில் பேச்சு. அவர்கள் வராததற்கு காரணங்கள், அழைப்பிதழ் இல்லையா, அழைத்தும் வரவில்லையா….இப்படி பல பேச்சுக்கள்.

நயன்தாரா வாழ்க்கையைத் தொடர்ந்து கவனித்து வந்தவர்களுக்குத் தெரியும் யாருக்கெல்லாம் அழைப்பிதழ் சென்றிருக்காது என்று. ஆனால் திருமண விழாவுக்கு இன்றைய சூப்பர் நட்சத்திரம் ஒருவருக்கு அழைப்பிதழ் செல்லவில்லை. அவர் யார் என்பதை கடைசியில் பார்ப்போம்.

அதற்கு முன்பு நயன்தாராவின் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை பார்த்துவிடுவோம்.

விக்னேஷ் சிவனுக்கு எல்லாமே அம்மாதான். அவர் காவல் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கு மகனின் நயன்தாரா காதல் பிடிக்கவில்லை. சினிமா நடிகை, அதுவும் மிக கவர்ச்சியாக நடிப்பவர், இரண்டு காதல் முறிவுகள்….என அவர் விருப்பப்படாதற்கு ஒரு பட்டியல் இருந்தது.

ஆரம்பத்தில் அம்மாவின் எதிர்ப்பை விக்னேஷ் சிவன் பொருட்படுத்தவில்லை. நயனுடன் இருப்பதை மிகப் பெருமையாக நினைத்தார். நடிகைகளில் சூப்பர் ஸ்டாரான நயன்தாராவுடன் நட்பாக இருப்பதே மிகப் பெரிய பாக்கியமாக விக்னேஷ் சிவன் கருதினார். நட்பு நாளடைவில் அன்பாக மாறி காதலாகி ஒன்றாய் வாழ்வது வரை சென்றுவிட்டது.

மேடம் என்றழைத்தது மாறி காதம்பரி, பேபி என்று உருவெடுத்து இப்போது உயிரே என்று காதலின் உச்சத்துக்கு வந்து நிற்கிறது.

இந்தக் காதலின் ஆழத்தைப் புரிந்துக் கொண்ட விக்னேஷ் சிவனின் தாயாரும் இப்போது நயனுடன் நட்பாகி நல்லுறவில் இருக்கிறார். நயன்தாராவின் ஏழாண்டு காதல் இன்று திருமணத்தில் நிலைபெற்றிருக்கிறது.

இனி, அழைக்கப்படாதவர்கள் பட்டியலைப் பார்ப்போம்.

தனுஷுடன் மோதல்: விக்னேஷ் சிவன் – நயன்தாரா காதல் முழுமை பெற்றது நானும் ரவுடிதான் படப்பிடிப்பில். அந்த சமயத்தில் காதல்களில் தோல்வியுற்று சாய ஒரு தோள் தேடிக் கொண்டிருந்தார் நயன்தாரா, அந்தத் தோளாக மாறினானார் விக்னேஷ் சிவன். ஆனால் அதுவே தனுஷுக்கும் நயன்தாராவுக்கும் பிரச்சினைகளை எழுப்பியது.

‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தை தயாரித்தது தனுஷ் தயாரிப்பு நிறுவனம். அந்தப் படம் தனுஷுக்கு பிடிக்கவில்லை. படம் சரியில்லை என்று விக்னேஷ் சிவனிடம் குறிப்பிட்டிருக்கிறார். படம் நன்றாக இல்லை என்பதால் விக்னேஷ் சிவனின் சம்பளத்தையும் முழுமையாக தர மறுத்திருக்கிறார் தனுஷ். ஆனால் விக்னேஷ் சிவன் மேல் தனுஷ் கோபப்பட்டதற்கு காரணம் படம் நல்லா இல்லை என்பதல்ல, நயன்தாரா மீது விக்னேஷ் சிவன் கொண்ட காதல்தான் என்று கிசுகிசுக்கிறார்கள் அந்தப் படத்தில் பணியாற்றியவர்கள்.

படம் வெளிவந்தது. சூப்பர் ஹிட். நயன்தாரா ஹேப்பி. விக்னேஷுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்ற தகவல் நயன்தாராவுக்கு தெரிய வர, அவருக்கு கோபம். அதன்பிறகு தனுஷூடனான நட்பு கட். இப்போது திருமணத்துக்கு அழைப்பில்லை.
அடுத்து அழைக்கப்படாதவர் சிம்பு. அவருடனான பிரச்சினை அனைவரும் அறிந்தது.

பல பிரச்சினைகளைத் தாண்டி மீண்டும் சிம்பு – நயன்தாரா நட்பு லேசாக துளிர்விட்டது. ஆனால் நயன்தாராவை பொறுத்தவரை ஒருவரை பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லைதான். பிடித்தால் உச்சாணி கொப்பில் தூக்கி வைப்பார். பிடிக்கவில்லை என்றால் அலட்சியப்படுத்திவிட்டு கடந்து சென்று விடுவார். திருமண விழாவுக்கான அழைப்பில் சிம்பு அலட்சியப்படுத்தப்பட்டார்.

பிரபுதேவாவுக்கும் அழைப்பில்லை. அவருக்காக பச்சைக் குத்திக் கொண்டவர். ஆனால் அந்த நட்பு இடையில் முறிய இப்போது வரை மீண்டும் துளிர்க்கவில்லை. அவருக்கும் அழைப்பு இல்லை.

இந்தப் பின்னணி எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் இன்றைய சூப்பர் நட்சத்திரமாக வளர்ந்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் அழைப்பு இல்லை. சிவகார்த்திகேயனுக்கு அழைப்பு விடுக்கப்படாதது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

சிவகார்த்திகேயனுக்கு அழைக்கப்படாததற்கும் காரணம் இருக்கிறது.
சிவகார்த்திகேயனுக்கும் விக்னேஷ் சிவனுக்கு திரைப்படம் தொடர்பான சில கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த ‘வேலைக்காரன்’, ‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படங்களின் போதும் சிக்கல்கள் எழுந்துள்ளன.

அந்த சிக்கல்களின் தாக்கம் இன்னும் போகவில்லை. ஆகவே சிவகார்த்திகேயனுக்கு அழைப்பில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...