No menu items!

நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு 2 கல்யாணம்

நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு 2 கல்யாணம்

நயன்தாரா ரசிகர்கள் இப்போது கொஞ்சம் பொறாமையோடும், கொஞ்சம் கவலையோடும்தான் இருக்கிறார்கள்.

இயக்குநர் விக்னேஷ் சிவன், காத்துவாக்குல நயன்தாராவைக் காதலித்து இப்போது கல்யாணம் வரைக்கும் போயிட்டாரே என்பது பொறாமைக்கு காரணம். கவலைக்கு காரணம் கனவு நாயகியை நயன்தாராவை இனி வெள்ளித்திரையில் முடியாதோ என்ற ஏக்கம்தான்.

லிவ்விங் டுகெதர் பாணியில் இருந்து, முறைப்படி கணவன் – மனைவியாக விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் ஜூன் 9-ம் தேதி முதல் புது வாழ்க்கையைத் தொடர இருப்பதாக வரும் செய்திகள்தான் இப்போதைய ட்ரெண்டிங். அந்த செய்தியில் உண்மை இருப்பதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதலில், திருப்பதியில் திருமணம். இதற்காக முன்கூட்டியே திருமணத்திற்கு முன்பதிவு செய்துவிட்டார்களாம். இந்து முறைப்படி திருமணம் சிம்பிளாக நடந்தால் போதும் என்று முடிவு செய்திருக்கிறது நயன் – விக்னேஷ் சிவன் ஜோடி.

காதலில் கமிட்டானதால், நயன்தாரா கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், சமீபகாலமாக இந்து கோயில்களுக்கு செல்வதையும், குங்குமத்தை நெற்றியில் வைப்பதையும் இயல்பாகவே பின்பற்றி வருகிறார். இதனால் நெகிழ்ந்து போன இயக்குநர் ’காத்துவாக்குல ரெண்டு கல்யாணம்’ என்ற கான்செப்டை முன் வைத்திருக்கிறாராம்.

அதாவது திருப்பதியில் இந்து முறைப்படி திருமணம். பிறகு கேரளாவில் இருக்கும் நயனின் சொந்த ஊரில் கிறிஸ்துவ முறைப்படி கல்யாணம் செய்து கொள்ளலாம் என்பதே அந்த 2 கல்யாணம் கான்செப்ட்.

அடுத்து சென்னையில் வரவேற்பு. இதை தடபுடலாக நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை வரவேற்க ஒரு தனிக் குழுவை நியமிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

வரவேற்பை முடித்த உடன், தேன்நிலவுக்குப் போகலாமா வேண்டாமா என்று பேச்சு எழுந்ததாம். காரணம் இந்த ஜோடி ஏற்கனவே ‘ஒன்றாக’ பல இடங்களுக்கு பறந்தபடிதான் இருக்கிறார்கள் என்பதுதான். இருந்தாலும் ஒரு மாற்றம் வேண்டுமே என்பதற்காக தேன்நிலவு செல்வது என முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம்.

ஆஸ்திரேலியாவுக்குப் போகலாம் என்பது நயன்தாராவின் ஆசை. ஆனால் தன்னுடைய கண்மணியின் கையைப் பிடித்து கொண்டு கணவன் மனைவியாக உலகம் முழுவதும் சுற்ற வேண்டும் என்பது ஒரு இயக்குநரின் பார்வையில் விக்னேஷ் சிவன் விரும்புகிறாராம்.

இவையெல்லாம் திட்டமிட்டபடி நல்லமுறையில் முடிந்தால்… அடுத்து என்ன?

நயன்தாரா தொடர்ந்து நடிப்பாரா அல்லது தங்கள் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் வேலைகளை கவனிப்பாரா என்பதற்கு மட்டும் இன்னும் விடை தெரியவில்லை.

ஆனால் நயனுக்கு நெருங்கிய வட்டாரம், பாலிவுட் ஹீரோயின்களை போல திருமணத்திற்கு பின்பும் அவர் நிச்சயம் நடிப்பார் என கண் சிமிட்டுகிறது.

அதனால் ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...