No menu items!

மோதல் முடிந்தது | மீண்டும் சூர்யா – பாலா

மோதல் முடிந்தது | மீண்டும் சூர்யா – பாலா

பாலா இயக்கத்தில் சூர்யா நடித்துக் கொண்டிருந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்துக் கொண்டிருந்த போது இயக்குநருக்கும் ஹீரோக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் பாதியில் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளி வந்தன.

அதை படக் குழுவினர் மறுத்தார்கள். ஆனாலும் படப் பிடிப்பு தொடங்கப்படாமல் நின்றிருந்தது.

சூர்யா – பாலா மோதல் இல்லை என்று படக் குழுவினர் கூறினாலும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. சூர்யாவுக்கு நந்தா, பிதா மகன் என்று இரண்டு திருப்புமுனை திரைப்படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் பாலா. இப்போது அவர் திரைத் துறையில் இறங்கு முகத்தில் இருக்கிறார். அவருக்கு கை கொடுக்கதான் சூர்யா இந்தப் படத்தை தயாரிக்கவும் நடிக்கவும் ஒப்புக் கொண்டார். இருவருக்கும் இடையே குரு – சிஷ்யன் உறவு பலமாக இருந்தது. இப்போது ஏற்பட்ட சிறு முரண்பாடுகளும் நெருடல்களும் தீர்க்கப்பட்டுவிட்டதாக கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

சமரசப் பேச்சு வெற்றிகரமாக முடிந்ததால்  மீண்டும் வரும் ஜூன் மாதம் 7ம் தேதி சூர்யா – 41ன்  படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

சமரசத்தை செய்து வைத்தவர் சூர்யாவின் நண்பர் ஒருவர். இரு தரப்பினரிடமும் பேசி நட்பை மீண்டும் துளிர்க்க செய்திருக்கிறார்.

இந்தப் படத்தில் சூர்யாவின் ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இசை ஜிவி பிரகாஷ்.  

மீண்டும் படம் இயக்குகிறார் தனுஷ் !

2017ல் ராஜ்கிரண், ரேவதி நடித்த பா பாண்டி படத்தை இயக்கிய தனுஷ் மீண்டும் படம் இயக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

கமல்ஹாசனுக்கு அடுத்து தமிழ் சினிமாவில் பல வித வேலைகளையும் எடுத்து செய்பவர் தனுஷ். பாடல் எழுதுவார், பாடுவார், திரைக்கதை எழுதுவார், இயக்குவார். ஹாலிவுட் படமான் க்ரேமேன் படத்தின் ட்ரைலர் வெளியாகி ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இந்தியில் முக்கிய படங்களிலும் நடிக்கிறார். இப்படி பல வெளிகளில் பயணம் செய்துக் கொண்டிருப்பவர் தனுஷ். பா.பாண்டி படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். இப்போது மீண்டும் இயக்குநராகிறார்.

தனுஷ் இயக்கப் போகும் திரைப்படத்தை தயாரிக்கப் போவது கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன்.

இந்த படத்தை ஏற்கனவே இலன்  என்ற இயக்குனர் இயக்க இருந்தார் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருந்தது. இப்போது இந்தப் படம் அன்புசெழியனுக்கு கை மாறியுள்ளது.

க்ரே மேன் படம் முடிந்ததும் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார். அதற்கு அடுத்து அன்புசெழியம் படம் துவங்கும்.

ஜிகர்தண்டா 2 வருகிறது

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அடுத்து ரஜினி படம் இயக்கபோகிறார் என்று கோலிவுட்டியில்  பரவலாக பேசிக்கொண்டு இருந்தனர். அவரும் அப்படி தான் நம்பி இருந்தார். ஆனால் அந்த வாய்ப்பை பீஸ்ட்  இயக்குனர் நெல்சன் தட்டி பரித்து சென்று விட்டதால் என்ன செய்வது என்று தவித்த கார்த்திக் சுப்புராஜ் மீண்டும்  ஜிகர்தண்டா பைலை தூசி தட்டியுள்ளார். இரண்டாம் பாகம் இயக்கலாம் என்று முடிவு செய்தார். ஆனால் இதிலும் ஒரு சிக்கல். ஜிகர்தண்டா பார்ட் 1 படத்தை தயாரித்த ஃபைவ்ஸ்டார் கதிரேசனுக்கும் கார்த்திக் சுப்புராஜுகுக்கும் பஞ்சாயத்து இருந்தது.

இந்த பஞ்சாயத்து ஃபைவ் ஸ்டார் கதிரேசனிடம் பேசி தீர்க்கப்பட்டிருக்கிறது. ஃபைவ் ஸ்டார் கதிரேசனே இரண்டாம் பாகத்தையும் தயாரிக்க ஒப்புக் கொண்டுள்ளார். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு ஆரம்பம்.

விக்ரம் பிரபு நடிக்கும் ’இரத்தமும் சதையும்’

விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாணாக்காரன்’ திரைப்படம் ரசிக்ரகளிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சன ரிதீயகாவும் பாராட்டுக்களை குவித்தது. டாணாக்காரனைத் தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர்  ஹரேந்தர் பாலசந்தர் இயக்க, இயக்குநர் கார்த்திக் அட்வித்  தயாரிக்கும் இந்த புதிய திரைப்படத்திற்கு “இரத்தமும் சதையும்” என பெயரிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...