No menu items!

நயன்தாராவை காலி பண்ணிய ஸ்ரீதேவியின் வாரிசு!

நயன்தாராவை காலி பண்ணிய ஸ்ரீதேவியின் வாரிசு!

இவர் நடித்து ஒரு தென்னிந்திய மொழிப்படம் கூட வெளிவரவில்லை. தென்னிந்திய சினிமாவில் தனது முதல் படமாக ஒரு தெலுங்குப் படத்தில் நடித்துவருகிறார். அதன் ஷூட்டிங் கூட இன்னும் முடிவடையவில்லை.

ஹீரோ ‘ஆர்.ஆர்.ஆர்.’ படப்புகழ் ஜூனியர் என்.டி.ஆர். இவருடன்தான் ஸ்ரீதேவியின் மூத்த வாரிசான ஜான்வி கபூர் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் நடிக்க இவர் வாங்கிய சம்பளம் 4 கோடி என்று கோலிவுட். டோலிவுட், மோலிவுட், சாண்டல்வுட் எல்லாம் ஆச்சர்யத்தில் மூழ்கியது. ஆனால் இப்போதுதான் இவரது சம்பளம் எவ்வளவு என்று தெரியவந்திருக்கிறது.

தென்னிந்தியாவில் இவர் நயன்தாரா, ராஷ்மிகா மந்தானா, கீர்த்தி சுரேஷ், பூஜா ஹெக்டே, த்ரிஷா, சமந்தா அளவிற்கு பிரபலம் இல்லை. ஆனால் இவரது சோஷியம் மீடியா கணக்கை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ரொம்பவே அதிகம். நினைத்த மாதிரி கவர்ச்சியாக ரீல்களையும், போட்டோகளையும் ஏற்றுவதில் இவருடைய ஸ்டைலே தனி. இதனால் இந்த விஷயத்தில் இவருக்கென்று ஒரு மவுசு இருக்கிறது.

இதை அறுவடை செய்யலாம், வடக்கு பக்கமும் சினிமாவை கொண்டு சேர்க்க முடியுமென நினைத்துதான் இவரை இங்கே அழைத்து வந்திருக்கிறார்கள். அப்படி இவர் கமிட்டான படம் ‘தேவரா’. இந்தப் படத்தில் நடிப்பதற்காகதான் ஜான்வி கபூர் 10 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக கூறுகிறார்கள்.

இதன் மூலம் தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெயரைத் தட்டிச்சென்றிருக்கிறார் ஜான்வி கபூர்.

இதுவரை இங்கே முன்னணி நடிகைகளாக, அதிகம் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் நயன்தாரா, ராஷ்மிகா மந்தானா, கீர்த்தி சுரேஷ், பூஜா ஹெக்டே, த்ரிஷா, சமந்தாவை விட இரண்டரை மடங்கு அதிகம் சம்பளம் வாங்கியிருக்கிறார். அதுவும் தன்னுடைய முதல் படத்திலேயே.

இதில் மற்ற நடிகைகளுக்கெல்லாம் புகை வர காரணம், ஜான்வி கபூர் ஹிந்தியில் சில படங்கள் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்கிற மாதிரி அவருக்கான ஹிட் படம் எதுவும் கொடுக்கவில்லை என்பதுதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...