No menu items!

டபுள் மீனிங் ராணி ரெஜினா காஸண்ட்ரா

டபுள் மீனிங் ராணி ரெஜினா காஸண்ட்ரா

முன்பெல்லாம் சினிமாவில் டபுள் மீனிங்கில் பேச வேண்டுமென்றால் அதற்கு ஒரு தில் வேண்டும். இல்லையென்றால் அவர்கள் நடிகராக இருக்கவேண்டும். நடிகைகள் இந்த டபுள் மீனிங் சமாச்சாரத்தில் சிக்கிக்கொள்ள விரும்புவதில்லை.

ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகி இருக்கிறது. நடிகர்கள்கூட இப்போது டபுள் மீனிங்கில் பேசுவதை தவிர்த்து வருகிறார்கள். ஆனால் நடிகைகள் வெளிப்படையாக பேசுகிறார்கள். சமீபத்தில் நடந்த திரைப்பட விழாக்களில் இதை பார்க்க முடிந்தது. இதில் உச்சக்கட்டமாக அமைந்திருக்கிறது ரெஜினாவின் வெளிப்படையான கமெண்ட். ஒன்று

சமீபத்தில் தெலுங்குப் படமான ’சாகினி தாகினி’-யின் ப்ரமோஷனில் ரெஜினா காஸ்ண்ட்ராவும், நிவேதா தாமஸூம் கலந்து கொண்டார்கள். நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு மளமளவென பதில் சொல்லிக் கொண்டிருந்தனர் இருவரும்.

பேச்சுவாக்கில் ’ஆண்களைப்பற்றிய ஜோக் ஒன்றை சொல்லலாம்னு நினைக்கிறேன்.. ஆண்களும், மேகியும் வெறும் ரெண்டு நிமிஷம்தான்’ என்று ரெஜினா சொல்ல, அந்த ஸ்பாட்டே சிரிப்பலையில் கிடுகிடுத்தது.

நிருபர்கள் மத்தியில் இது சிரிப்பை வரவழைத்தாலும், கூடவே எதிர்வினையையும் கிளப்பியிருக்கிறது.

’ஜோக் சொல்வதெல்லாம் ஒகே. ரெஜினாவுக்கு இந்த விஷயத்தில் முன் அனுபவம் இருக்குதா இல்லையா.? போகிற போக்கில் ஜோக் என்ற பெயரில் இப்படி சொல்வது சரியா’ என்று அவரை வறுத்து எடுக்கிறார்கள்.

பொன்னியின் செல்வனை இரு முறை தவறவிட்ட நடிகை

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிப்பதை, சொர்க்கத்தில் இருந்து கடவுளே நேரடியாக கொடுத்த பெரும் வரம் என்பது போல் நடிகர், நடிகைகள் சிலாகித்தபடி பேட்டி கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.

பொன்னியின் செல்வன் ப்ராஜெக்ட்டில் நடிக்காத நட்சத்திரங்கள் மோட்சம் அடையப் போவதில்லை என்பது போன்ற ஒரு மாயை கட்டமைக்கப்பட்டு வருகிறது.

அட போங்கப்பா, இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை என்பது போல் இருக்கிறார் அமலா பால்.. இந்தப் படத்தின் ஆடிஷனிங் நடந்தபோது அமலா பால் தேர்வாகி இருந்தார். ஆனால் அப்போது ஆடிஷனிங் வேலைகளோடு அப்பட ப்ராஜெக்ட் நின்றூ போனது.

அடுத்து இந்த முறை பொன்னியின் செல்வன் உறுதியான பிறகும் அமலா பாலை வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. ஆனால் அவர் இருந்த மனநிலையில், மன உளைச்சலில் நடிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டதாக கூறுகிறார்கள்.

ஆக இரண்டு முறை வாய்ப்பு கிடைத்தும் நடிக்க முடியாமல் போனதற்காக இப்போது ஒரு வார்த்தை கூட வருத்தப்படாமல் அதை கேஷூவலாக சொல்லியபடி சிரிக்கிறார் அமலா பால்

இணையத்தில் ‘வாரிசு’ காட்சிகள்

விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் ஷூட்டிங் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது.

விஜய் சம்பந்தபட்ட எமோஷனலான காட்சிகளை ஷூட் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த ஷூட்டைஅக்டோபர் மாதத்திற்குள் முடிக்க இருக்கிறார்கள். அக்டோபர் ஷூட்டிங் முடிந்ததும், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகளை ஆரம்பிக்க இருக்கிறார்களாம்.

கடந்த ஷெட்யூல்களில் ஷூட்டிங்கின் போது எடுத்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இது படத்தயாரிப்பு நிறுவனத்தை எரிச்சலடைய வைத்திருக்கிறதாம்.

இதனால் அக்டோபர் ஷூட்டிங்கின் போது யாரும் மொபைல் ஃபோன் எடுத்துவர அனுமதி இல்லை என்று கூறியிருப்பதாக தெரிகிறது. ஷூட் செய்யுக் நேரத்தில் அனைவரது போன்களும் அவர்களது பெயர்களுடன் பத்திரமாக வைக்கலாமா என்றும் யோசித்து வருகிறார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...