No menu items!

பில்லாவுக்கு பிறகு பிகினியில் நயன்தாரா!

பில்லாவுக்கு பிறகு பிகினியில் நயன்தாரா!

நயன்தாராவுக்கு இப்போதுதான் இரட்டையர்களான மகன்கள் உயிர், உலகம் இருவரும் கூடவே இருக்கிறார்கள்.

ஆனால் இந்த இரட்டையர்களுக்கு முன்பாகவே நயன்தாராவுடன் ஆரம்பத்திலிருந்தே கூடவே இருக்கும் இரண்டு விஷயங்கள் சர்ச்சை, கிசுகிசு.

இந்த சர்ச்சைகளும், கிசுகிசுக்களும்தான் நயன்தாராவை எப்பொழுதும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கிறது.

அந்தவகையில் இப்போது மீண்டும் லைட் லைட்டுக்கு வந்திருக்கிறார் நயன்தாரா. இந்த முறை நயன்தாரா பெயர் பரபரப்பாக அடிப்பட காரணம் நம்ம அட்லீ.

அட்லீ இப்பொழுது ’பாலிவுட் பாக்ஸ் ஆபீஸ் பாட்ஷா’ ஷாரூக்கானை வைத்து ஹிந்திப் படமொன்றை இயக்கி வருகிறார். இதற்கு ‘ஜவான்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

ஜூன் 2022-ல் ஆரம்பித்த ஜவான் ஷூட்டிங் சென்னை, ராஜஸ்தான், ஹைதராபாத், மும்பை என மாறி மாறி நடந்தது. ஏறக்குறைய 90 சதவீத படம் முடிவடைந்துவிட்டது,

மீதமுள்ள பத்து சதவீத காட்சிகளைப் பற்றிதான் இப்பொழுது பரபரப்பான பேச்சு அடிப்படுகிறது.

இந்த காட்சிகளில் ஷாரூக்கான், நயன்தாரா இருவரும் விடுமுறையைக் கொண்டாட போகிறார்கள். அங்கே ஒரு டூயட் அல்லது பார்ட்டி சீன் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை வைக்கலாம் என்று பேசப்பட்டு வருகிறதாம்.

இதற்கெல்லாம் காரணம் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்ற ‘பதான்’ படம்.

இந்தப் படத்தின் ‘பேஷரம் ரங்’ பாடலில், ஷாரூக்கானும், தீபிகா படுகோனும் மிக நெருக்கமாக நடித்திருப்பார்கள், அதிலும் தீபிகா படுகோன் தனது ஒட்டுமொத்த அழகையுஅம் அப்பட்டமாக காட்டும் காவிநிற பிகினியில் அனைவரையும் முணுமுணுக்க வைக்குமளவிற்கு நடனம் ஆடியிருப்பார்.

தீபிகாவின் இந்த காவிநிற பிகினி சர்ச்சைக்குள்ளானது. ’பதான்’ படத்திற்கு இலவச விளம்பரமாகவும் மாறியது. இந்த யுக்தியை மீண்டும் ஏன் ‘ஜவான்’ படத்திற்கு பயன்படுத்த கூடாது என்று ‘ஜவான்’ படக்குழுவினர் யோசிக்கிறார்களாம்.

இதன் தொடர்ச்சியாக ‘பில்லா’ படத்திற்குப் பிறகு நயன்தாராவை சிக்கென்று டு பீஸ் பிகினியில் நடனமாட வைக்க இருப்பதாக இப்போது ஒரு பேச்சு அடிப்படுகிறது.

‘வல்லவன்’, ‘பில்லா’ இந்த இரண்டுப் படங்களுக்குப் பிறகு நயன்தாரா பிகினியில் நடிக்கவே இல்லை. அதனால் இப்பொழுது நயன்தாரா பிகினியில் வந்தால். ‘ஜவான்’ படத்திற்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய சினிமா ரசிகர்ளிடையே ஒரு எதிர்பார்ப்பு உண்டாகும் என இப்பொழுதே ப்ரமோஷன் வேலைகளுக்கான விஷயத்தில் இறங்கியிருப்பதாக தெரிகிறது.

நயன்தாரா பிகினியில் நடிக்கிறாரா இல்லை என்பதை பற்றி அட்லீயோ அல்லது ‘ஜவான்’ படக்குழுவோ இதுவரை எந்த கமெண்ட்டையும் வெளியிடவில்லை.

நயன்தாரா எதையும் எதிர்க்கொள்ளூமளவிற்கு தைரியமுள்ளவர், உறுதியான மனநிலை உள்ளவர். இருந்தாலும், திருமணத்திற்கு பின்பு, இரண்டு குழந்தைகள் என்று ஆன பிறகு ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிகினியில் கவர்ச்சியாக நடிப்பாரா இல்லை ‘நோ’ என்று சொல்வாரா என்பது இன்னும் மூன்று மாதங்களில் ’ஜவான்’ ரிலீஸின் போது தெரிந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...