No menu items!

’இந்தியன் -3’ ரெடி!

’இந்தியன் -3’ ரெடி!

தனது பல ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எவ்வளவோ மெனக்கெட்டு இருந்தாலும், உடலை வருத்தி நடித்திருந்தாலும் கூட சம்பாதிக்காத வசூலை, கமர்ஷியல் ஹிட்டை ‘விக்ரம்’ படம் மூலம் அடைந்திருக்கிறார் கமல் ஹாஸன்.

இந்த வெற்றிதான் அவரை மீண்டும் தனது ராஜ்கமல் இண்டர்நேஷனல் மூலம் படங்கள் தயாரிக்க தூண்டியிருக்கிறது. மணி ரத்னமுடன் 37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைய வைத்திருக்கிறது. கிடப்பில் போடப்பட்ட ‘இந்தியன் – 2’ படத்தை, போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் வரை கொண்டு வந்தும் விட்டிருக்கிறது.

இந்த ’இந்தியன் –2’ ஒரு பெரும் இடைவெளிக்குப் பிறகு எடுக்கப்பட்டிருப்பதால், ஷுட் செய்ததில் நிறைய மாற்றங்கள். காரணம் கோவிட் தாக்கம் முடிவடையும் போது வெளிவந்த சில பான் – இந்தியா படங்கள். இதனால் பல காட்சிகளை மாற்றி எடுத்திருக்கிறார் ஷங்கர். அதேபோலவே ஷூட் செய்த காட்சிகள் ஓடும் நேரமும் அதிகமாம்.

’இந்தியன் – 2’ ஷூட் முடிந்ததும், எடிட்டிங்கில் உட்கார்ந்த போதுதான் இதுவரை எடுத்த காட்சிகள் 7 மணி நேரம் ஓடுவது ஷங்கருக்கே தெரிந்ததாம். இதனால் என்ன செய்வது என்று யோசித்த ஷங்கர், இந்தியனை இரண்டுப் பாகங்களாக வெளியிடலாம் என்று திட்டமிட்டாராம்.

ஆனால் தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லையாம்.

இந்த பிரச்சினை பிறகு கமல் காதுக்குப் போகவே, அவருக்கு முதலில் என்ன செய்வது என்ற குழப்பம் இருந்ததாகவும், ஆனால் ஷங்கர் அவரிடம் இரண்டுப் பாகங்களாக வெளியிடும் அளவிற்கு படம் தாங்கும் என்று சொன்னாராம். இதைக்கேட்டு கமலும் இரண்டுப் பாகங்கள் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாக சொல்கிறார்கள்.

கமலும் ஷங்கரும் லைகாவிடம் இரண்டுப் பாகங்களாக வெளியிடலாம். இன்னும் சில காட்சிகளை ஷூட் செய்தாலே போதுமானது. அதுவும் இரண்டாம் பாகம் வெளிவந்த பிறகு ஷூட் செய்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறாரகளாம். இயக்குநரும், கதாநாயகனும் சொல்லவே வேறு வழியில்லாமல் லைகா இந்த திட்டத்திற்கு ஒப்புக்கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறதாம்.

லைகாவின் இந்த தயக்கத்திற்கு காரணம், ’இந்தியன் –2’. படத்திற்கு எந்த மாதிரியான வரவேற்பு இருக்கும் என்பது இப்போது தெரியாது. ’லியோ’வுக்கு கிடைத்த கலவை விமர்சனம் மாதிரி வந்தால், மூன்றாம் பாகம் எடுப்படாமலேயே போய்விடும்.

அடுத்து, ஷூட் செய்த ஃபுட்டேஜ்ஜில் மீதமிருப்பதை மூன்றாவது பாகமாக திரையிட்டாலும், அது ஒரு தனிப்படமாகதான் அமையும். அப்படியானால் ஷங்கருக்கும், கமலுக்கும் மீண்டும் ஒரு சம்பளம் கொடுத்தாக வேண்டும். அதாவது ஒரு படத்திற்கு அவர்கள் வாங்கும் சம்பளத்தைக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதால்தான் லைகா யோசித்ததாம்.

பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் வேறு வழியில்லாமல் லைகா இப்போது இத்திட்டத்திற்காக கமலுக்கும், ஷங்கருக்கும் மூன்றாவது பாகத்திற்கான சம்பளத்தை கொடுக்கவிருக்கிறதாம். தேவையான சில காட்சிகளை மட்டும் இனி ஷூட் செய்வார்கள். 2024-ல் ஏப்ரலில் இரண்டாவது பாகத்தையும், 2025 பொங்கலுக்கு மூன்றாவது பாகத்தையும் வெளியிட இருக்கிறார்களாம்.


கீர்த்தி சுரேஷூக்கு 31

அக்டோபர் 17,1992. இதுதான் கீர்த்தி சுரேஷின் பிறந்த நாள்.

ஆக இப்போது கீர்த்திக்கு 31 வயது.

வயது ஏறினால், வீட்டில் வேறென்ன நடக்கும்?

கீர்த்திக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் அவரது பெற்றோர். ஆனால் கீர்த்தி வேறொருவரை மனமார நேசிப்பதாக அவருக்கு நெருங்கியவர்கள் கூறுகிறார்கள்.

மணந்தால் அவரைதான் மணப்பேன் என்று கீர்த்தி பிடிவாதம் செய்வதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அவரது பெற்றோருக்கு அதில் உடன்பாடில்லை தெளிவாக கூறியிருக்கிறார்கள்.

கீர்த்தி சுரேஷூம் அவரது ஆண் நண்பரும் துபாயில் ஒரே நிற உடைகளில் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று வெளியானது. அதாவது கீர்த்தி தனது எண்ணத்தை பட்டும்படாமலும் வெளிப்படுத்தி இருக்கிறார் என்றார்கள். இந்த பிரச்சினையை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷூக்கு திருமணமா என்ற கிசுகிசு கிளம்பியது.

வீட்டில் சம்மதம் இல்லையென்பதால், திருமணம் செய்து கொள்ள போவதில்லை என்று கீர்த்தி பிடிவாதம் பிடிப்பதாகவும் கூறுகிறார்கள். ஆனால் இந்த பிரச்சினை சமூக ஊடங்கங்களில் கசித்தால், பேசுப்பொருளாகி விடும் என்பதால்,. கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்த இருப்பதாகவும், அதனால் திருமணம் பற்றி இப்போது யோசிக்க நேரமில்லை என்றும் கூறி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...