No menu items!

திரௌபதி முர்மு – அறிந்துக் கொள்ள 12 விஷயங்கள்

திரௌபதி முர்மு – அறிந்துக் கொள்ள 12 விஷயங்கள்

திரௌபதி முர்மு. இன்று இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் பெயர். இந்தியாவின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதல் பழங்குடி இனப் பெண். அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவின் முதல் குடிமகளாக இருக்கப் போகும் திரௌபதி முர்முவைப் பற்றிய 12 விஷயங்களை தெரிந்துகொள்வோம்:

  1. ஒடிசா மாநிலத்தில் சாந்தால் (Santhal) என்ற பழங்குடி இனத்தில் 1958-ம் ஆண்டு மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் திரௌபதி முர்மு. அங்கிருந்து படிப்படியாக முன்னேறி இன்று குடியரசுத் தலைவர் வேட்பாளராக வளர்ந்திருக்கிறார்.
  2. புவனேஸ்வரில் உள்ள ரமாதேவி பெண்கள் கல்லூரியில் தனது பட்டப் படிப்பை முடித்தார்.
  3. கல்லூரி படிப்பு முடிந்தது உள்ளூரில் சில காலம் ஆசிரியராக முர்மு பணியாற்றி உள்ளார். பின்னர் ஒடிசாவின் நீர்வளம் மற்றும் மின்சக்தித் துறையில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தார்.
  4. 1990-களில் அரசியலில் ஆர்வம் காட்டிய முர்மு, பாஜகவில் இணைந்தார். அரசியலில் முர்மு வகித்த முதல் பதவி, ராய்ரங்பூர் நகர் ( Rairangpur Nagar) பஞ்சாயத்தின் கவுன்சிலர் பதவி. பின்னர் அந்த பஞ்சாயத்தின் துணைத் தலைவர் பதவியையும் அவர் ஏற்றுள்ளார்.
  5. ஒடிசாவில் உள்ள ராய்ரங்பூர் சட்டப்பேரவை தொகுதியில் இருந்து 2000 மற்றும் 2009-ம் ஆண்டில் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராகவும், பின்னர் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சராகவும் முர்மு பணியாற்றியிருக்கிறார்.
  6. சிறந்த சட்டப்பேரவை உறுப்பினருக்கான நீலகாந்தா சன்மான் விருதை முர்மு பெற்றுள்ளார்.
  7. 2013-ம் ஆண்டில் பாஜகவின் பழங்குடிகள் இன பிரிவின் தேசிய செயல் குழுவின் உறுப்பினராக முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  8. 2015-ம் ஆண்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக திரவுபதி முர்மு நியமிக்கப்பட்டார்.
  9. 2017-ம் ஆண்டில் திரௌபதி முர்மு ஜனாதிபதி வேட்பாளாராவார் என்று கூறப்பட்டது. ஆனால் அப்போது அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. தலித் சமூகத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்த்துக்கு அந்த வாய்ப்பு சென்றது.
  10. அரசியலில், சமூகத்தில் பல வெற்றிகளைப் பெற்றபோதிலும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல சோகங்களை எதிர்கொண்டவர் திரௌவுபதி முர்மு. அவருடைய இரண்டு மகன்களும் இளம் வயதிலேயே இறந்துவிட்டனர். கணவரும் காலமாகிவிட்டார். இப்போது அவருக்கு துணை அவரது மகள் மட்டுமே.
  11. பாஜகவில் இருந்தாலும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவரும், ஒடிசா முதல்வருமான நவீன் பட்நாயக்குக்கு நெருங்கிய நண்பராக முர்மு உள்ளார். பிஜு ஜனதா தளத்துக்கு 12 மக்களவை மற்றும் 9 ராஜ்யசபா உறுப்பினர்களும் 114 எம் எல் ஏக்களும் உள்ளனர். முர்முவுக்கு நவீன் பட்நாயக்குடன் உள்ள நட்பால் இந்த வாக்குகள் அவருக்கு கிடைக்கும் அதனால் குடியரசுத் தேர்தலில் வெற்றி எளிதாகிவிடும்.
  12. திரௌபதி முர்மு குடியரசுத் தலைவரானால் இந்தியாவின் சுதந்திரத்துக்குப் பின் பிறந்த முதல் குடியரசுத் தலைவராக அவர் இருப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...