No menu items!

’சீயான்’ விக்ரமுக்கு என்னாச்சு?

’சீயான்’ விக்ரமுக்கு என்னாச்சு?

விக்ரமிற்கு மாரடைப்பு. சென்னை மருத்துவமனையில் அனுமதி. என்ற செய்தி அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாகி இருக்கிறது.

உண்மையில் விக்ரமிற்கு என்னாச்சு என்று விசாரித்தோம்., கடந்த மூன்றூ நாட்களாக கடுமையான காய்ச்சல், நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது இருக்கிறார். வெள்ளிக்கிழமை மாலை அல்லது சனிக்கிழமை காலையில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் என்று சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிப்படுகிறது.

ஆனால் மற்றொரு பக்கம் விக்ரமிற்கு இதயம் தொடர்பான பிரச்சினைதான். ஆஞ்ஜியோப்ளாஸ்ட் செய்திருக்கிறார்கள். அதனால்தான் திவீர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது குடும்பமும் அவருடனேயே இருக்கிறது.

தேவையில்லாத பதட்டத்தை உருவாக்கவேண்டாமென அமைதி காட்டுகிறார்கள். மற்றபடி பெரிய பிரச்சினை எதுவுமில்லை. தனது கதாபாத்திரங்களுக்காக அடிக்கடி உடல் எடையைக் குறைப்பது, ஏற்றுவது என ப்ரோட்டீன் ரிச் சப்ளிமெண்ட்களை அதிகம் உட்கொண்டதால் கொஞ்சம் பாதிப்பு இருக்கிறது. சமீபகாலமாகவே அவரது முகத்தில் வயதின் வாட்டம் இருப்பதையும் பார்க்க முடியும். அவருக்கு கொஞ்சம் மன அழுத்தமும் வந்திருக்கிறது. சமீபகாலமாக எந்தப் படங்களும் ஓடவில்லை. மகன் துருவ் நடித்த படங்களும் எடுப்படவில்லை என்ற ஆதங்கமும் அவரது உடல்நிலை பாதிப்புக்கு காரணம் என்று விக்ரமிற்கு நெருங்கிய தரப்பு கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...